Archive for நவம்பர் 22, 2010
பூரி
செனா மஸாலாவுடனும்,—–ஆலுதாம் கறி வகைகளுடனும் சாப்பிட
பூரியும் செய்வோமா?
வேண்டியவைகள்——கோதுமைமாவு—–2கப்
ருசிக்கு உப்பு
பூரி பொரிக்க —
வேண்டுமான எண்ணெய்.
செய்முறை—-நன்றாகச் சலித்தெடுத்த கோதுமை மாவில்
4 டீஸ்பூன் எண்ணெயும், ருசிக்கு உப்பும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
திட்டமாக ஜலம்விட்டு கெட்டியாக மாவை நன்றாகப் பிசையவும்.
தளர இருக்கக் கூடாது.
நன்றாகப் பிசைந்த மாவை திரட்டி ஒரே அளவு உருண்டைகளாகப்
பிரித்து உருட்டிக் கொள்ளவும்.
ஜலம் குரைவாக சேர்ப்பதால் இப்படி எழுதுகிரேன். உருண்டைகளை
அழுத்தமாக உருட்டினால் பூரி விரியாமல் வட்டமாக வரும்.
ஒவ்வொரு உருண்டையாக சிறிது எண்ணெயில் தொட்டுக்
குழவியினால் வட்டமான பூரிகளாக இடவும்.
மாவு தோய்த்து இடுவதில்லை. ஒரு தட்டைக் கவிழ்த்துப்
போட்டு அதன்மேல் பூரிகளைப் பரத்தலாக வைத்துக்
கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து நல்ல
சூடான எண்ணெயில் பூரிகளை சற்று சட்டுவத்தால்
லேசான அழுத்தம் கொடுத்து திருப்பி விட்டு பூரிகளைப்
பொரித்தெடுத்து டிஷ்யூ பேப்பரில் போட்டு உபயோகிக்கவும்.
இந்த முறையில் செய்த பூரிகள் எண்ணெய் அதிகம்
இழுப்பதில்லை.
வாணலியில் எண்ணெயும் குழம்புவதில்லை.
பூரியும் நன்றாக உப்பிக்கொண்டு நன்றாகவே இருக்கிறது.
இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது மேல்மாவு தோய்த்து
பூரியை இடும் முறை.
இந்த முறைக்கு மாவில் சற்று ஜலம் அதிகம் சேர்க்கிரோம்.
இது எண்ணெய் தொட்டு இட்ட பூரிகள்
செய்யச் செய்ய யாவும் நன்றாக பழக்கமாகி விடும்.