Archive for ஏப்ரல் 29, 2011
பன்னீர் துக்கடா
மிகவும் சுலபமாக தயாரிக்கலாம் இதை.
வேண்டியவைகள்.
பன்னீர்—-200கிராம்
ஸாம்பார் வெங்காயம்—உறித்தது 5 அல்லது 6
தக்காளி—-சின்னதாக 1
பச்சை மிளகாய்—-சின்னதாக ஒன்று
பச்சைக் கொத்தமல்லி இலை—–அரைகப்
பன்னீர் பொறிக்க வேண்டிய— எண்ணெய்
ருசிக்கு –உப்பு
செய்முறை—-பன்னீரைச் சற்று பெரிய துண்டங்களாக நறுக்கவும்.
வெங்காயம்,மிளகாய், தக்காளி, கொத்தமல்லி உப்பு சேர்த்து மிக்ஸியில்
ஜலம் விடாமல் பேஸ்ட்டாக அறைத்துக் கொள்ளவும்.
அடுத்து நான் ஸ்டிக் பேனில் , நிதான தீயில் பரவலாக சிறிது எண்ணெய்
விட்டு சூடாக்கி பனீர் துக்கடாக்களைப் பரப்பவும்.
ஒரு புறம் சிவந்ததும் நிதானமாக மறுபுறம் திருப்பிப் போட்டு சற்று
சிவக்கவைத்து எடுத்து டிஷ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய்
நீக்கவும். ஒரு பாத்திரத்தில்தயாரான துண்டங்களின் மேல்
வேண்டிய அளவிற்கு அறைத்த பேஸ்ட்டைப் பிசறி தட்டுகளில்
அலங்கரித்து வைக்கவும்.
பேஸ்ட் மிகுதியானால் தயிரில் கலந்தால் பச்சடியாகிவிடும்.
பன்னீர் பிடித்தவர்களுக்கு துக்கடா ருசியான ஒன்று.