Archive for ஏப்ரல் 5, 2011
மணத்தக்காளிக்கீரைக் கூட்டு. எளியமுறை.
மிகவும் சுலபமான மருத்துவ குணமுள்ள எளிய கூட்டு இது.
வேண்டியவைகள்
மணத்தக்காளிக் கீரை—-2கட்டு
தேங்காய்த்துருவல்—அரைகப்
பயத்தம்பருப்பு—–அரைகப்
மிளகாய்—2
சீரகம்–1 டீஸ்பூன்
உளுத்தம்பருபபு—2 டீஸ்பூன்
பூண்டு.உறித்த இதழ்கள்—3
நெய்—2 டீஸ்பூன்
ருசிக்கு—உப்பு
துளி மஞ்சள் பொடி
சிறிது, கடுகு, பெருங்காயம்.
செய்முறை.
கீரையின் இலைகளை ஆய்ந்து நறுக்கி த் தண்ணீரில்
நன்றாக அலசி வடிக்கட்டவும்.
வெறும் வாணலியில் பயத்தம் பருப்பை சற்று சிவக்க வாஸனை
வரும்படியாக வறுத்துக் கொள்ளவும்.
துளி நெய்யில் மிளகாய், உளுத்தம் பருப்பை வறுத்துக் கொண்டு
பூண்டையும் சேர்த்து இறக்கவும்.
ஆறினவுடன் தேங்காய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் நன்றாக
அறைத்துக் கொள்ளவும்.
வறுத்த பருப்பை நன்றாகக் களைந்து ஒண்ணரைகப் ஜலமும்,
கீரையும் , மஞ்சள் சேர்த்து ப்ரஷர் குக்கரில் 2 விஸில் விட்டு
நன்றாக வேகவைத்துக் கொள்ளவும்.
வேகவைத்த கீரை, பருப்புடன் அரைத்த கலவை, வேண்டிய
உப்பு சேர்த்துக் கிளறி ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
நெய்யில் கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும்.
ஒரு தக்காளியையும் வதக்கி சேர்த்து அரைக்கலாம்.
வாய்ப்புண், வயிற்றுப் புண் முதலானவைகளை ஆற்றும்
குணமுள்ளது இக்கீரை. காய்களையும்.பச்சையாக சமைத்தும்
வற்றலாகச் செய்தும் உபயோகப் படுத்துதல் இன்றும் நடை
முறையில் உள்ளது. பத்தியச் சாப்பாடுகளில் மணத்தக்காளி
வற்றல் முதன்மையானது.