அரைத்துவிட்ட மாங்காய் ஸாம்பார்.
மே 14, 2012 at 11:26 முப 11 பின்னூட்டங்கள்
இந்த ஸாம்பாரும்அதிகம் புளிப்பில்லாத மாங்காயில் செய்தால்
மிகவும் நன்றாக இருக்கும். ஒட்டு மாங்காயான கிளி மூக்கு மாங்காயில் செய்ததுதான் இந்த ஸாம்பாரும்.
காயை நறுக்கி வாயில் போட்டுப் பார்த்தால் புளிப்பைப் பற்றி
எவ்வளவு என்று தானாகவே தெறிந்து போகும்.
அதற்கேற்றார்போல் உப்புக் காரம் சேர்க்கலாம். ஸரி
இப்போது நாம் ஒரு திட்டமான மாங்காய்க்குண்டானதைப்
பார்ப்போம்.
வேண்டியவைகள்
மாங்காய்—-திட்டமான சைஸில்—-ஒன்று
துவரம் பருப்பு—அரைகப்
மிளகாய் வற்றல்—5அல்லது 6
பச்சை மிளகாய்—1
நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
தனியா—-1 டேபிள்ஸ்பூன்.
மிளகு—7,8 மணிகள்
அரிசி—1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—கால்கப்
தாளித்துக் கொட்ட—கடுகு,வெந்தயம், பெருங்காயம்.
வாஸனைக்கு—கொத்தமல்லி, கறிவேப்பிலை.
விருப்பப் பட்டால் பாதி கேப்ஸிகம்
ருசிக்கு—-உப்பு
செய்முறை.
துவரம் பருப்பைக் களைந்து திட்டமாக தண்ணீர் விட்டு மஞ்சள்பொடி
சேர்த்து ப்ரஷர்குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
சிறிது எண்ணெயில் மிளகாய் ,தனியா, அரிசி, மிளகை வறுத்து
,அதனுடன் தேங்காயையும் வதக்கி இறக்கவும்.
ஆறியவுடன் மிக்ஸியில் சிறிது ஜலம் தெளித்து அறைத்து
எடுக்கவும்.
மாங்காயைக் கொட்டை நீக்கி துண்டங்களாகச் செய்து கொள்ளவும்.
கேப்ஸிகம், பச்சைமிளகாயு், மாங்காயுடன் வேண்டிய உப்பு சேர்த்து
குழம்பு வைக்கும்பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
மாங்காய் வெந்தவுடன் அறைத்த விழுதைச் சேர்த்து ஒரு கொதி
விடவும்.
வெந்த பருப்பைக் கரைத்துச் சேர்த்து பின்னும் நன்றாக கொதிக்கவிட்டு
இறக்கவும்.
நல்லண்ணெயில் கடுகு, வெந்தயம், பெருங்காயம் இவைகளைத்
தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
நான் வெங்காயம் போடுவதில்லை.
வேண்டியவர்கள் ஸாம்பார் வெங்காயத்தைச் சேர்த்துக்
கொண்டு செய்யவும்.
ருசிகள் பலவிதம். அதிலே இது ஒருவிதம்.
தடித்த தோல் உள்ள மாங்காயாக இருந்தால் தோலைச் சீவி
விட்டுச் சேர்க்கவும். உப்பு, புளிப்பு, காரத்திற்கு தகுந்தபடி
ஸாம்பாரை கெட்டியாகவோ, சிறிது நெகிழ்வாகவோ
தயாரிக்கவும். மாங்காய் ஸீஸன். செய்து பார்க்கலாமே.
Entry filed under: ஸாம்பார் வகைகள்.
11 பின்னூட்டங்கள் Add your own
Mrs.Mano Saminathan -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1. Mahi | 5:42 பிப இல் மே 14, 2012
நல்லா இருக்குதும்மா மாங்காய் சாம்பார். தக்காளி போட்டால் சுவை மாறுபடுமா? இப்படி வெங்காயம்-தக்காளி இல்லாமல் சாம்பார் செய்தால் எங்கவீட்டில் நான் மட்டுமே சாப்பிடவேண்டியதாய் இருக்கு,அதனால்தான் கேட்கிறேன். 🙂
2. chollukireen | 6:46 முப இல் மே 15, 2012
மாங்காயைக் குறைத்து தக்காளியைச் சேர்த்துச் செய்து பாரேன்.
நன்றாகத்தானிருக்கும். புளிக்கு பதில் மாங்காய். மாங்காய் வாஸனையுடன் ஸாம்பார். ப்ளஸ் தக்காளி, மைனஸ் சிலதுண்டு
மாங்காய். வெங்காய வாஸனையும் ப்ளஸ்தான். எல்லாம் கூட்டினால் வித்தியாஸ ருசியுடன் விடையாக ஸாம்பார்.
சிலது சிலருக்குப் பிடிக்கும், சில பிடிக்காது. கொஞ்சமா முயற்சி செய்தால் என்ன ஆகிரதோ பார்க்க வேண்டியதுதான். பதிலுக்கு
அன்புடன்
3. Mrs.Mano Saminathan | 5:46 பிப இல் மே 14, 2012
புளி சேர்க்காமல் மாங்காயின் புளிப்பு மட்டுமே சேர்த்து செய்துள்ள இந்த சாம்பார் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது!
4. chollukireen | 6:51 முப இல் மே 15, 2012
மாங்காயின் புளிப்பும் வாஸனையும்தான் இதன் விசேஷமே. உங்களின் புத்தம் புதிய முதல் வரவை மிகவும் நான் ரஸித்து வரவேற்கிறேன். அடிக்கடி வந்து அபிப்பிராயம் சொல்லவும்.
மிக்க நன்றி . அன்புடன் சொல்லுகிறேன்
5. chitrasundar5 | 2:40 முப இல் மே 16, 2012
காமாஷி அம்மா,
‘ருசிகள் பலவிதம். அதிலே இது ஒருவிதம்’_ஆமாம் அம்மா,செய்முறை வித்தியாசமாகத்தான் இருக்கிறது.சாம்பாரும் நன்றாக இருக்கிறது. எங்கம்மாகூட சில சமயங்களில் மாங்காய் புளிப்பாக இருந்தால் புளி சேர்க்க மாட்டாங்க. எங்களுடன் பகிர்ந்துகொண்டதில் சந்தோஷம் அம்மா.அன்புடன் சித்ரா.
6. chollukireen | 6:33 முப இல் மே 28, 2012
முக்காலே மூன்று வீசம் முறைகள் நமக்கு எல்லாம் ஒத்துப் போவதைப் பார்த்தாயா? அதான் விசேஷம்.
எனக்குத் தெறிந்தவற்றை உங்களுடன் பகிராமல் என்ன? உன்பதில் கரெக்ட். அன்புடன்
7. chollukireen | 11:47 முப இல் ஏப்ரல் 4, 2022
Reblogged this on சொல்லுகிறேன் and commented:
இதுவும் பத்து வருஷங்களுக்கு முன்னர் பதிவிட்டதுதான். மாங்காய் ஸீஸன் ஆயிற்றே. பிடித்தவர்கள் அவர்களுக்குப் பிடித்தபடி செய்து ருசியுங்கள். அன்புடன்
8. Geetha Sambasivam | 12:43 பிப இல் ஏப்ரல் 4, 2022
Super sambar amma. You did not add tamarind. But my mother in law used to add tamarind juice also.
9. chollukireen | 1:11 பிப இல் ஏப்ரல் 4, 2022
புளிப்பு இல்லாத மாங்காயோ என்னவோ? இரண்டும் சேர்த்து இரு புளிக் குழம்பாக செய்து விடுவார்கள். எல்லாமே தனி ருசிதான். நன்றி. அன்புடன்
10. ஸ்ரீராம் | 2:03 பிப இல் ஏப்ரல் 4, 2022
புளி சேர்க்காத மாங்காய் அரைத்துவிட்ட குழம்பு சூப்பர். இதுவரை மாங்காயை வைத்து சாம்பார் செய்ததில்லை.
11. chollukireen | 11:43 முப இல் ஏப்ரல் 5, 2022
ஒரு முறை செய்து பாருங்கள் என்றுதான் நான் எழுதுவேன். இல்லையா?அன்புடன்