காரடை—வெல்லம்.
மார்ச் 11, 2014 at 12:03 பிப 3 பின்னூட்டங்கள்
காரடை நோன்பிற்கு உபயோகமாகட்டும் என்று மறுபதிவு செய்திருக்கிறேன். உபயோகமாக இருக்கும். யாவருக்கும்எ ன்
ஆசிகள். அன்புடன்
பச்சரிசி——-ஒருகப்–
பொடித்த வெல்லம்——முக்கால் கப்
ஏலக்காய்—3 தோல் நீக்கி பொடித்துக் கொள்ளவும்.
காராமணி——2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்த் துண்டுகளாக நறுக்கியது—–3 டேபிள் ஸ்பூன்
நெய்——–3டீஸ்பூன்
செய்முறை
அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து வடிக்கட்டி நிழல்
உலர்த்தலாகக் காய வைக்கவும்.
கலகல என்று உலர்ந்த அரிசியை வாணலியிலிட்டு சற்று
சிவப்பாகும் வரை வறுத்து எடுக்கவும். ஆறிய பின்
அரிசியை மிக்ஸியில் இட்டு மெல்லிய ரவையாகப்
பொடித்துக் கொள்ளவும்.
காரா மணியை முன்னதாகவே வெறும் வாணலியில்
வறுத்து வென்னீர்விட்டு ஹாட்கேஸில் ஊறவைத்து
வைக்கவும்.
தேங்காய்த் துண்டுகளை நெய்யில் லேசாக வறுத்துக்
கொள்ளவும்.
வெல்லத்தை அரைகப் ஜலம் விட்டுக் கரைத்து சூடாக்கி
இறக்கி வடிக்கட்டிக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் மொத்தமாக வெல்லக்
கரைசலுடன் சேர்த்து ஒன்றறை கப் ஜலம், அளந்து வைத்து,
ஒரு துளி உப்பு, தேங்காய்த் துண் டுகள், ஊறிய வடிக்கட்டிய
காராமணி , ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தீயை நிதானமாக்கி கொதிக்கும் ஜலத்தில் பொடித்த ரவையைக்
கொட்டிக் கிளறவும்.
மாவு வெந்துத் தண்ணீரை இழுத்துக் கொண்டு கெட்டியாக
சேர்ந்து வரும் போது இறக்கி வைத்து சற்று நேரம் மூடி
வைக்கவும்.
தட்டில் மாவை ஆற வைத்து, அளவாக மாவைப் பிரித்துக் கொண்டு
பெரிய வடைபோல பொத்தலிட்டு அடைகளைத் தயாரிக்கவும்.
சிறிது ஜலமோ, எண்ணெய்யோ கையில் தொட்டுக் கொண்டால்
கையில் ஒட்டாது.
இட்டிலி ஸ்டாண்டில் எண்ணெய் தடவி பரவலாக வைத்து
இட்டிலி செய்வது போல நீராவியில்…
View original post 81 more words
Entry filed under: இனிப்பு வகைகள்.
3 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
வை. கோபாலகிருஷ்ணன் | 12:31 பிப இல் மார்ச் 11, 2014
காரடையான் நோன்பு வெல்லக்கொழுக்கட்டை சூப்பர். பகிர்வுக்கு நன்றிகள்.
2.
chollukireen | 6:01 முப இல் மார்ச் 12, 2014
மிகவும் நன்றி. உடல்நலம் பா திப்பால் அதிகம் கம்யுட்டரில்
உட்கார முடிவதில்லை. அன்புடன்
3.
மகிஅருண் | 4:55 பிப இல் மார்ச் 14, 2014
காமாக்ஷிம்மா, நாங்க பெரும்பாலும் கொழுக்கட்டைகள் இப்படிதான் செய்வது. ஆனாலும் அடை கொஞ்சம் வித்யாசமாகத்தானிருக்கு. ரெசிப்பிக்கு நன்றிம்மா, உடம்பைப் பார்த்துக்குங்க. டேக் கேர்!