Archive for திசெம்பர் 22, 2020
தொட்டில்—14
இது ஒரு புதிய தொட்டில். பாருங்கள்
என்னடி இவ்வளவு நேரமா பேசறே யார் என்ன ஸமாசாரம்?
இரு வந்து சொல்றேன். என்ன விசேஷம் என்று சொல்லாமல் டிக்கெட் ரிஸர்வ் பண்ணி அனுப்பிச்சா அம்மாவுக்கு சொல்ல வேணாமா? அதெல்லாம் ஒண்ணும் வாணாம். அக்காங்களுக்கும் இவரு டிக்கட் புக் பண்ணி அனுபிச்சாச்சுன்னு சொல்ராரு. நீங்களும் எல்லாரும் வந்திடுங்க. எல்லாம் ரிஸர்வ் டிக்கட்டுங்கதான்.
என்னடி உனக்கு தெரியாம என்ன விஷயம் இருக்கும். ஒரு விஷயமும் இல்லே. எல்லாரும் கும்பலா கோவிலுக்குப் போய் பிரார்த்தனை செலுத்துவதாக வேண்டுதலாம். சும்மா வேடிக்கைக்குச் சொல்ராருன்னு நெனச்சா டிக்கட்டெல்லாம் காமிச்சுதான் அனுப்பிச்சாரு. தெரியுமே உனக்கு. இவரு மனஸுலே பட்டதை உடனே செஞ்சாகணும். நான் சொன்னேன் என்னங்க இது. அவங்க என்னவோ ஏதோ என்று நினைப்பாங்க என்று.
கோயிலுக்குப் போக அவங்க நெனைக்க என்ன இருக்குது? உனக்குதான் ஏதாவது நினைப்பு.இப்படிதான் அவங்க சொல்ராரு. வாங்க எனக்கும் ஸந்தோஷமாயிருக்கும். அத்தையும் இதையே சொல்ராங்க. வந்திடுங்க என்ன
இத்தனைநேரம் பேசரையான்னு ஸுலபமா கேட்டா போதுமா. ஒம் பொண்ணுதான் பேசிச்சு. அவுங்க வீட்லே சாமி கும்பிட போவதற்கு நாமெல்லாம் வரணுமாம். டிக்கட் அனுப்பிச்சு கூப்புடரா?
ஏதாவது விசேஷம் இல்லாங்காட்டி இப்படிச் செய்வாங்களா?
அவங்க வூட்லேதான் எல்லாமே மூடு மந்திரம்தான். கடைசிலேதான் என்னான்னு சேதியே தெரியும். ஒரு புது ஸாமான் வாங்கினா கூட திருஷ்டி பட்டுடும்னு ,சினேகிதங்க வைச்சுட்டுப் போயிருக்காங்கன்னு சொல்லுவாங்க. அப்புறமா, இல்லே நாங்களே வாங்கிட்டேன்னு சொல்லுவாங்க. எல்லாமே அப்படிதான் அவங்க ஊட்டு வழக்கமே…
View original post 493 more words