Archive for ஏப்ரல் 2, 2021
உருளை கொத்தமல்லி பரோடா
இந்தப் பரோட்டா வகையையும் செய்து பாருங்களேன். அன்புடன்
மைக்ரோவேவில் உருளைக்கிழங்கைப் பதமாக வேகவைத்து.
ருசியான பூரணம் தயாரித்து இந்த ரொட்டியை நாம்
செய்யலாம்.
நிறைய பச்சைக் கொத்தமல்லி சேர்த்துச் செய்தால்
மிகவும் ருசியாக இருக்கிறது.
வேண்டியவைகள்
மூன்று நிதானமான சைஸ்—-உருளைக் கிழங்கு
பச்சைமிளகாய்–2
ருசிக்கு–உப்பு
சீரகப்பொடி,ஆம்சூர்–வகைக்கு அரை டீஸ்பூன்
கோதுமை மாவு–2கப்
வேண்டிய அளவு—எண்ணெய்
நெய்யும் கலந்து உபயோகிக்கலாம்.
ஆய்ந்த இலையாக கொத்தமல்லித் தழை–நிறையவே
செய்முறை—உருளைக்கிழங்கை தண்ணீரில் சுத்தம் செய்து
ஒரு மெல்லிய பாலிதீன் பையில் போட்டுச் சுருட்டி
7நிமிஷம் மைக்ரோவேவில் ஹை பவரில்வைத்து
எடுக்கவும். அல்லது
சுத்த பருத்தித் துணிப் பையை ஈரமாக்கிப் பிழிந்து, அதனுள்
உருளையை வைத்தும் 7 நிமிஷங்கள் ஹை பவரில்
வேகவைத்தும் எடுக்கலாம்.
அல்லது உங்களின் வழக்கம் எதுவோ அதைச் செய்யவும்.
வெந்த உருளைக் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு ஒரு
பாத்திரத்தில் போட்டுக் கிழங்கினை நன்றாக மாவாக
மசிக்கவும்.
கோதுமை மாவில் ஒன்றரை கப் எடுத்து,அதனுடன்
ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் கலந்து, உப்பு சேர்த்து
திட்டமாகத் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து மூடி வைக்கவும்
மாவு ஊறட்டும். மீதி மாவு தோய்த்து இட.
பச்சை மிளகாயை நன்றாக வகிர்ந்து அதனுள்ளிருக்கும்
விதைகளை அகற்றி மெல்லியதாகக் கீறி மிகவும்
பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
திட்டமாக உப்பு ,நறுக்கிய மிளகாய், சொல்லியுள்ள
பொடிகள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள்,
மசித்த உருளைக்கிழங்கு இவை யாவையும் ஒன்று
சேர்த்துப் பிசையவும்.
கொத்தமல்லிப் பூரணம் ரெடி
View original post 134 more words