Archive for ஏப்ரல் 12, 2021
அன்னையர் தினம்—-13
கோபக்காரமனிதரை எப்படி எல்லாம் ஸமாளிக்க வேண்டியிருந்தது? இது ஒருமாதிரி ஸமாளிப்பு. பதிவு 13 ஆனாலும் பாருங்கள், இன்னும் வருமே. அன்புடன்
டிஸம்பரில் டில்லி
மாடியில் பூக்கள்
பணத்திற்கு ஏற்பாடுகள் ஒத்துழைக்கும் அது ஒன்றே போதும்
அம்மாவுக்கு. அதுவே ஸம்மதத்திற்கு அறிகுறிதானே.
அதிகம் விமரிசித்தால் வேறு ஏதாகிலும் ஆக்ஷேபத்தில்க்
கொண்டுவிட்டு விடுமென்பது அம்மாவின் கணிப்பு. அத்தை
குடும்பத்தின் நல்லது கோருபவளே . இருப்பினும் சில ஸமயம்
வயதில்ப் பெரியவள் என்ற முறையில் வார்த்தைகள் விழுந்து
விடும்.
சந்தடி சாக்கில் கந்த பொடி வாஸனையாக அப்பா கோபத்திற்கு ஏதுவாக
சில ஸமயம் வார்த்தைகள் அமைந்து விடும்.
அம்மாதிரியாகத்தான் ஆரம்பமானது கால்க்காசு பெராத ப்ரச்சினை.
ஒருகாலத்தில் உனக்கு காங்ரஸ் உசத்தி. இப்போ பிடிக்காது.
உனக்கு வரப்போற மாப்பிள்ளை கதர்தான் கட்டுவானாம்.
போதாதா வார்த்தைகள்.
இதெல்லாம் என்னிடம் சொல்லவில்லை. நான் எதுவும் செய்ய வேண்டாம்.
வேஷ்டியெல்லாம் நான் தொட்டுக் கொடுக்க மாட்டேன்.
எனக்குக் கொள்கைகள் ஒத்து வராது. கன்யாதானம் கூட முடியாது.
கோபவார்த்தைகள். தாம்,தூம்
என்ன அம்மா இப்படி தூபம் போட்டூட்டியே. கதர்,ஸாதாரண வேஷ்டி
இதெல்லாம் கூட வித்தியாஸம் தெரியாத மனிதருக்கு, என்னம்மா
உன்னைச் சொல்ல முடியும்?
எல்லாம் தெரிந்த நீயே
ஆமாம் அப்புறம் தெரியரைதை விட இப்பவே தெரியட்டுமே.
எவ்வளவு நாள் பயப்படறது. வேணும்னுதான் சொன்னேன்,இது
அத்தை.
ஸரி. விட்டுடு. உனக்கும் சொல்ல முடியாது. இந்தப் பேச்சு இனி
எடுக்காதே. நான் பாத்துக்கறேன்.
ஓ!!!!!!!!!
இதற்கெல்லாம் கூட அணை போட ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
மளமளவென்று யோசனைகள். மனதிலுள்ளதைச் சொன்னால் அதை
அப்படியே உணர்த்தி…
View original post 529 more words