அன்னையர் தினம்—12
ஏப்ரல் 5, 2021 at 11:11 முப பின்னூட்டமொன்றை இடுக
வேளைக்கீரை மகிமையோ என்னவோ? எப்படிப்பட்ட இடங்கள், எந்தமாதிரி காலம், என்ன தேர்வு? வாருங்கள். அன்புடன்
அதென்ன வேளைக்கீரை ஸந்தேகம் எல்லோருக்கும். எங்களூரில்
கல்யாண வயதில் பெண்களிருந்தால், வீட்டுத் தோட்டத்தில்,தப்புச்
செடியாக, வேளை முளைத்தால், அது சுப சூசகமாகக் கருதப்படும்.
விவாகத் தேடல்களை சுருசுருப்பாகச் செய்தால், உடன் விவாகம் நடை
பெறும், என்ற ஒருநம்பிக்கை.
நம்பிக்கையில்லை, தேடலை ஊக்குவிக்கும் பூஸ்டர் என்றே சொல்லலாம்.
அந்த நாட்களில் குடும்பத்தில்,
பெண் ஒன்று பிறந்து விட்டாலே, அவர்களுக்கான, பாத்திரங்கள், ஏதாவது
நகை,நட்டுகள்,வெள்ளிப்பாத்திரங்கள்,என அம்மாமார்கள் சேமித்து விடுவார்கள்.
சின்ன குழந்தையாக இருக்கும்போதே சேர்க்க ஆரம்பித்து விடுவார்கள்.
பிற்காலத்தில் மிகவும் உபயோகமாக இருக்கும் அல்லவா?
பின் மூவாயிரம்போல் பணமிருந்தாலும்,கல்யாணத்தை ஒப்பேற்றி
விடுவார்கள்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின்போது ஜோடிஜோடியாகச்
சேர்த்த பாத்திரங்கள் இருக்கிரது.
தான் போட்டுக் கொண்டிருக்கிர நகை இருக்கிரது. இரண்டையும் இரண்டாகப்
பிரித்தாலே ஓரளவு ஒப்பேற்றி விடலாம்.
மற்றது வரன் கூடிவந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்.
மனதில் தீர்மானமான யோசனை.
தெரிந்தவர்கள் யாரைப் பார்த்தாலும், ஏதாவது வரன் இருந்தா சொல்லு
இதே வாக்கியங்கள்தான்.
ஊரிலே வேம்பக்கா என்று எல்லோராலும் கூப்பிடப்படும் ஒரு
நடுத்தர வயது அம்மா உண்டு.
வாய் அவ்வளவு இனிமையாகப் பேசும். கையாலேயே ரவிக்கைகள்
அழகாகத் தைப்பாள்.
எல்லோருக்கும் தைத்தும் கொடுப்பாள். கூலி வாங்க மாட்டாள்.
அதற்கு மேலேயே மாங்காய்,தேங்காய், தோட்டத்து காய்கறிகள்
என சப்ளை செய்து விடுவார்கள்.
அவர்களுக்கு ஒரு பிள்ளை வாத்தியார் ட்ரெயினிங் முடித்து விட்டு
வாத்தியார் வேலை.
அவருக்குக் கிளி மாதிரி, பெண் என்பார்களே அப்படி ஒரு…
View original post 457 more words
Entry filed under: Uncategorized.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed