Archive for பிப்ரவரி 4, 2022
பஜனை நினைவுகள்.
பாரக்பூரில் நடந்த 2012 வருஷத்திய ஒரு பதிவு இது. மலரும் நினைவுகள். நீங்களும் பங்கு கொள்ளுங்களேன் அன்புடன்
வயதானவர்களுக்கு பக்தி ஸம்பந்தப்பட்ட நினைவுகளும்,பாராட்டுகளும்
அன்பின் மூலம் கிடைத்ததையும், எல்லோருக்கும் வேண்டியவர்களாக
ஒரு சிநேகக் கூட்டம் கிடைத்ததையும், ஒரு கனவாக எண்ணமிடும்
அளவிற்கு காலங்கள் கடந்து ஓடிவிட்டாலும் பசுமையான
நினைவுகளை
உங்களுடன் அசை போடுவதில் ஒரு மன நிறைவு ஏற்படும் என்ற
எண்ணத்தில் இதைப் பகிர்ந்து கொள்கிறேன்.கேளுங்கள்
பக்தி வலையிற் படுவோன் காண்க.
ஜானகீ காந்தஸ்மரணம்.ஜெய்ஜெய் ராம ராம
நமப் பார்வதி பதயே–ஹரஹர மகாதேவா
கோபிகா ஜீவன ஸ்மரணம்.கோவிந்தா கோவிந்தா
வரிசையாகச் சொல்லி ஹரி நாராயணவும் பாடியாயிற்று.
சுக்லாம்பரதரம் முதல் ஸ்லோகங்கள் சொல்லி
ஆரம்பமாகிவிட்டது பஜனை.
மும்பை வினாயக சதுர்த்தி வினாயகர்.
மூஷிக வாஹன மோதக ஹஸ்தா சாமரகர்ண விளம்பிதசூத்ரா
வாமனரூப மஹேச்வர புத்ர விக்ந விநாயக பாத நமஸ்தே
ஜயஜானகீ ரமண ஜய விபீஷண சரண ஜயஸரோருஹ சரண
ஜயதீன கருணா ஜயஜய
தொடர்ந்து
சரணு சரணு ஸுரேந்திர ஸன்னுத சரணு ச்ரீஸதி வல்லபா தேவ
சரணு ராக்ஷஸ கர்வ ஸம்ஹார சரணு வேங்கட நாயகா
ஸ்வாமி ச்ரீ ரகு நாயகா சரணு சரணு ஹரே
தோடய மங்களங்கள் காதில் ஒலிக்கிறது.
அடிக்கடி நாமாவளிகள்
மனது பறக்கிறது.
கோல்க்கத்தாவை அடுத்த பாரக்பூர். 24 பர்கானாவில் ஒன்று.
பூரா H.A.L. இல் வேலை செய்யும் பஜனைக்கு வரும் பக்தர்களின்
கூட்டம்.தம்பதிகள்,குழந்தையுடன், குடும்பத்தை விட்டு கருமமே
கண்ணாயினார்கள்,சற்றுப் பெரியவர்கள், இளைஞர்கள், என
எல்லோரும்…
View original post 565 more words