Archive for மார்ச், 2022

புழுங்கலரிசி சேவை

இன்று எதை மீள்ப் பதிவு செய்யலாமென்று யோசித்தேன். சேவை எழுதிப் பல வருஷங்கள் ஆகிறது.செய்து பாருங்கள் என்பதற்கு இது பரவாயில்லை.பாருங்கள். அன்புடன்

சொல்லுகிறேன்

சேவை என்பது    இடியாப்பம்.  எனக்கு இந்த பெயர்   முன்பெல்லாம்

தெரியாது.    சேவை என்றே  சொல்லி வழக்கம்.

இந்தப் பெயரும் நன்றாகவே இருக்கிறது.  இதனுடன் கலக்கும் பொருளைக்

கொண்டு பெயர் சொல்லுவோம்.  தேங்காய்,   எள்,   எலுமிச்சை,வெல்லம்,

தயிர்,காய்கறி,   மோர்க்குழம்பு,   தேங்காய்ப் பால் என பட்டியல் நீளும்.

இப்போது   இடியாப்பம்  குருமா தான்   முதலிடத்தில் இருக்கிறது.

நாம் முதலில்   ப்ளெயின்   சேவை தயாரிப்பதைப் பற்றி அதுதான்

புழுங்கலரிசியில்   தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.

வேண்டியவைகள்

புழுங்கலரிசி—3கப்.      இட்டிலிக்கு  உபயோகிக்கும்  அ ரிசி

இடியாப்பம் செய்ய உபயோகிக்கும் —    சேவை நாழி

அரிசியைக்  களைந்து  நன்றாக    ஊறவைக்கவும்.

செய்முறை-

கிரைண்டரில் ,  ஊறிய அரிசியை ப்  போட்டு  அதிகம்  ஜலம் விடாமல்

கெட்டியாகவும்,    நைஸாகவும்   அரைத்தெடுக்கவும்.

இட்டிலி வார்ப்பது போல     குழித்தட்டுகளில்   எண்ணெய்  தடவி  மாவை

விட்டு ரெடி செய்யவும்.

சேவை  நாழியில்   உட்புறம் லேசாக எண்ணெய்   தடவி வைக்கவும்.

குக்கரில் அளவாக   தண்ணீர்விட்டு     இட்டிலி ஸ்டேண்டை வைத்து,

வெயிட் போட்டு    இரண்டு  விஸில் வரும் வரை  மிதமான தீயில்

இட்டிலிகளாக  வார்க்கவும்.

சாதாரண  இட்டிலி   வார்க்க வெயிட் போட மாட்டோம்.

நீராவி அடங்கிய பின்  இட்டிலிகளை ஒன்றன்  பின்  ஒன்றாக

எடுத்து  அச்சில் போட்டு    அழுத்தி   சேவைகளாகப்  பிழிந்து

எடுக்கவும்.  சூட்டுடன்   பிழியவும்.

திருகு  முறையிலும்,  ப்ரஸ் செய்து பிழியும் முறையிலும்

சேவை நாழிகள் கிடைக்கின்றன.

ப்ளெய்ன்  சேவை   ரெடி.

இதனுடன்  குருமா சேர்த்து   …

View original post 120 more words

மார்ச் 28, 2022 at 11:41 முப பின்னூட்டமொன்றை இடுக

துளசித்துதி

இது பல வருஷங்களுக்கு முன்னர் பதிவிட்டப் பதிவு இது. இன்று வெள்ளிக்கிழமை. துளசி ஸ்தோத்திரம் படித்தால் நல்லது. விரும்புவீர்கள் என்று பதிவிட்டுள்ளேன். அன்புடன்

சொல்லுகிறேன்

துளசிமாடம் துளசிமாடம் சென்னை

நம்மில் யாவர் வீட்டிலும் துளசிச் செடியை ஒரு மாடத்தில் வளர்த்து அதற்கு

சுற்றிலும் கோலமிட்டு,மஞ்சள் குங்குமத்தால் அலங்கரித்து தினமும் வழிபடுவதென்பது

தொன்று தொட்டு வரும் பழக்கம்.

வீட்டுப் பெண் குழந்களுக்கு    கோலம்போட, பக்தியை வளர்க்க என்று கலைக்கும்,தெய்வ பக்திக்கும்

ஒன்று சேர அப்யாஸிக்கப் படுகிறது என்பதும் என் எண்ணம்.

அதிலும் வெள்ளிக் கிழமைகள்,ஆடி,தைமாத வெள்ளிக் கிழமைகள்,

என விசேஷமாக  பூஜிப்பதும் உண்டு.

மாக்கோலத்துடன்  செம்மண் பூச்சும்,பூக்களுடன் விசேஷ பாயஸ நிவேதனத்துடன்

பூஜித்து ,ஸுமங்கலிகளுக்கு   வெற்றிலை,பாக்கு,பழங்கள்,குங்கும சந்தனத்துடன்

அளிப்பதும் உண்டு.

கார்த்திகை மாத சுக்கில பக்ஷ துவாதசியில் துளசி கல்யாணம் என்று கொண்டாடுவதும்

உண்டு.

அப்பொழுது

நெல்லிக் கிளையை மஹா விஷ்ணுவை மனதிலிருத்தி துளசியுடன் சேர்த்து வைத்து

பக்ஷ பரமான்னத்துடன் பூஜிக்கலாம்.

நெல்லிக்காயில் விளக்கேற்றி பூஜிப்பவர்களும் உண்டு.

நேபாளத்தில் ஆடிமாதம் துளசியை நடுவதற்கும்  வாத்தியார் வந்து

முறைப்படி  நடுவார். இது நேபாளத்து வழக்கம்.

கார்த்திகை மாதம் துளசி விவாக தினத்தன்று, ஹோமம் வளர்த்து, அதையும்

மந்திர கோஷத்துடன்  கொண்டாடும் வழக்கத்தையும் பார்த்திருக்கிறேன்.

குளிர் நாட்களில் துளசி   பட்டுப் போய்விடுவதால்,   வருஷா வருஷம் நடுவதும்

ஒரு விசேஷநாளாகிறது.

நம்மில்

ஸாதாரணமாக தினமும்  தமிழில் துளசித் தோத்திரம் எல்லோரும் சொல்வார்கள்.

அதை     எனக்குத் தெரிந்த அளவில்ப்  பதிவிடுகிறேன்.

இதைப் படித்து வந்தால் சிறிது நாட்களிலேயே மனப்பாடமாகிவிடும்.

தினமும் மனதினால் இதைச் சொன்னாலே போதும். அவ்வளவு நல்லது.

ஒரு சிறிய தொட்டியில் துளசியை வளர்த்தால் கூட…

View original post 166 more words

மார்ச் 25, 2022 at 12:58 பிப 2 பின்னூட்டங்கள்

நீயா நானா முதல்

போட்டி போட்டு மார்ச் மாதத்தில் சிறிது சீதோஷ்ணம் மாறியதும் பூக்கும் எங்கள் தோட்டத்து மலர்கள். அழகு இல்லையா?எல்லோரும் ஒரே நாளில்தான் பூத்தீர்கள். ஸந்தோஷமா?

நானும் அந்த வகைதானே.பூமியினுள் கிடந்த நாங்கள் தானாகப் பூத்தோம்தானே!

எல்லோரும் ஒன்றேதான் சிறிக்கும் மலர்களே.

மார்ச் 21, 2022 at 12:06 பிப 15 பின்னூட்டங்கள்

ஹலோ ஹலோ ஹலோ.2

திங்கட்கிழமை வெளியிட்டதின் முடிவுப்பதிவு. இதுவும் மீள்பதிவுதான். படித்து அபிப்ராயம் சொல்லுங்கள். ஹலோஹலோஹலோஹலோ. அன்புடன்

சொல்லுகிறேன்

ஹலோ என்ன சொல்ல வந்தெங்களோ சொல்லுங்க.

எதை ஆரம்பிக்கறது,  எதைச் சொல்லரது, எதை விடரது

தெரியலே.

பிள்ள நல்ல வேலையிலே இருக்கான்,  எதுக்கும் பஞ்சமில்லே.

வேலைக்காரிகளுக்கும், குறைவில்லே. ஆனால் நாமதான்

வேலைக்காரிகள்   சொன்னபடிகூட  கேட்க வேண்டியிருக்கு.

பாரு ஒவ்வொரு நாள்  மாட்டுப்பெண் வெளியில் போரச்சே

ஒண்ணும் சொல்ல மாட்டாள். ரொம்ப நாழி கழித்து  போன் பண்ணி

வேலைக்காரியிடம்  சொல்லுவோன்னு நினைக்கிறேன்.

அம்மா,ஒங்க கிட்டே சொல்லச் சொன்னாங்கோ,   ஒரு

ரஸம் செய்துடச் சொன்னாங்க.

வேரெ ஒண்ணும் சொல்லலியா?

இல்லே அவங்க வந்து பாத்துப்பாங்க.

இதை நம்மிடம் சொல்லிட்டுப் போகக் கூடாதா?

நினைக்கத் தோன்றுகிரதா இல்லையா?

வேலக்காரி காயும் ஏதோ நறுக்குவோ. ஆனால் சும்மா

நறுக்கி வைக்கிறேன்.  அவங்க ஒண்ணும் சொல்லலே!

நீ செஞ்சாலும் தப்புன்னுவாங்க.

ஸரி ஒரு பருப்பைபோட்டு ரஸத்தை வைச்சு இரக்கினோம்

என்றால்  அத்துடன் போகுமா?

போனைல்தான் தேவலையே.   அவ வருவோ, என்னம்மா ஒரு

கறியும் பண்ணிருப்பேங்கோ என்று நினைத்தேன். இல்லே

அவ  நீ ஒண்ணும் சொல்லலேன்நு சொன்னா, அதான்.

நான் அப்படிதான் நினைத்தேன். இதெல்லாம் கணக்கா?

இன்னொரு நாள் பண்ணிடலாம் என்று பண்ணி விட்டால்

பிள்ளைகளுக்குப் பிடிக்காதே. என்னை ஒரு வார்த்தை கேளுங்கோ!!

இல்லே இதை வேரெ மாதிரி பண்ணாதான் அவர்களுக்குப் பிடிக்கும்.

எது சொல்லு செய் எல்லாம் எதிரிடை.

வேலைக்காரிக்கு  ப்ரட் கொடுத்தால் அதிலும் ஏதாவது குற்றம் கண்டு

பிடிப்பு. இவ்வளவு ப்ரெட் இருக்கு, இன்னும் ஏன் வாங்கணும்.

நீதானே…

View original post 521 more words

மார்ச் 10, 2022 at 11:57 முப பின்னூட்டமொன்றை இடுக

ஹலோ, ஹலோ,ஹலோ

திங்கட் கிழமைகளில் மீள் பதிவாக 1913 இல் எழுதிய கதை ஒன்றைப் பதிவு செய்கிறேன். இரண்டு பதிவுகளாக எழுதியது. முதல்ப் பதிவை இன்றும் வியாழனன்று அடுத்தப் பதிவையும் பதிவிடுகிறேன். படித்துப் பார்த்து உங்கள் அபிப்ராயம் என்ன சொல்லுங்கள்.

சொல்லுகிறேன்

ட்ரிங்-ங் ட்ரிங், ட்ரிங்

யாரா இருக்கும்

வீட்லே யாரும் இல்லே, எடுத்துதான் ஆகணும். ஹலோ

ஓ நீங்ளா.  எப்போ போன் செய்தாலும் ஏதோ காரியமா,இருக்கிங்கோ

சித்த நாழி கழித்து  போன் பண்ணுங்கோன்னு பதில் சொல்ரா,

என்ன தான் பண்றெங்கோ?

பண்றதென்ன இருக்கு? மேலேர்ந்து வந்து சொல்லணும்.

அவர்கள் பிஸி. என்னையும்,  பிஸியாக்கிரா, அவ்வளவுதான்.

எப்படி இருக்கே,  என்ன ஸமாசாரம்.

ரொம்ப நாளுக்கு முன்னே பேசினதுடந் ஸரி. ரொம்பவே பேசணும்.

யாரிடமாவது மனதிலிருப்பதை கொட்டினா தேவலை போல இருக்கு.

என்னத்தை கொட்டணும்?

எதையும் கொட்டினா கஷ்டம். வார முடியாதே.

ஆமாம், நீங்கள் இப்படி சொல்லியே இருந்திண்டிருக்கெங்கோ

என்னால் இப்படி இருக்க முடியலே.

இந்த வார்த்தை கேட்டு கேட்டே இருந்திருக்கேநா, ஸரி,அப்புரமா பேசலாம்.

ஒத்தரும் இல்லாத வேளையா சொல்லுங்கோ.

ஸரி. அப்படியே ஆகட்டும்.

லக்ஷ்மி, ரொம்ப நாளா விட்டுப்போன நட்பு,   ஒரே இடத்தில்குடியிருந்தநட்பு.

வித்தியாஸமில்லாமல்  மனது விட்டு பேசி, அன்றாடும் நடக்கும்

நல்லது கெட்டதுகளைப் பகிர்ந்து கொள்ளும்படியான நட்பு. விட்டுப் போய்

வெகு வருஷங்களுக்குப்பிறகு,  அவளைப் பார்த்து, மறுபடியும் நட்பு

ஆரம்பித்ததே எதிர் பாராத விதத்தில்.

பிள்ளை கல்கத்தாவிலிருக்கும்போது,   குருவாயூரப்பன் கோவிலுக்கு

தரிசனம் செய்யப் போகும் போது ராஜம்மா என்று கையைப்பிடித்துக்

கொண்டாள்.

நீ எங்கிருந்து வந்தாய்,    நிஜமாதானா, இல்லே நான் தப்பா லக்ஷ்மி.

இல்லேஇல்லே,நான்தான் ராஜம்மா.

யாரோட வந்திருக்கே,   பொண்ணு இங்கிருக்கா,  இப்படி ஸமாசாரங்கள்

அடுத்து எப்போதாவது போன் வரும்.

எல்லாருக்கும்,  மாற்றல் அது…

View original post 364 more words

மார்ச் 7, 2022 at 12:29 பிப 2 பின்னூட்டங்கள்


மார்ச் 2022
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 546,864 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.