மட்ரி.
Originally posted on சொல்லுகிறேன்:
இது ஒரு வடஇந்திய வகை மைதாமாவின் தயாரிப்பு. பார்க்கப்போனால் நம்முடைய தட்டை மாதிரிதான். பருப்புகள் போடுவதில்லை. சற்று வித்தியாஸமான ருசி. கரகரப்பாகச் செய்கிறார்கள். சிறிதளவு வெந்தயக்கீரை சேர்த்தும் செய்கிறார்கள். இது மேத்தி மட்ரி. அவசரத்திற்கு ஊறுகாயுடன்காலைடிபனில்கூட மட்ரி உபயோகிப்பார்களாம்.நான் புதுசாகத்தான் கற்றுக்கொண்டேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வேண்டியவைகள். மைதாமாவு—-2 கப் ஓமம்—2 டீஸ்பூன் மாவுடன் சேர்த்துப் பிசைய–வெஜிடபிள் ஆயில்–3 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் அல்லது நெய்—1 டேபிள் ஸ்பூன் ருசிக்கு உப்பு மட்ரி…
Continue Reading நவம்பர் 20, 2015 at 11:25 முப 6 பின்னூட்டங்கள்
தீபாவளி நல் வாழ்த்துகள்
என்னுடைய அன்பார்ந்த யாவருக்கும் சொல்லுகிறேனின் தீபாவளி நல் வாழ்த்துகள். மலரும்,தின்பண்டங்களும். பார்த்து இன்புறுங்கள். சொல்லுகிறேன் காமாட்சி.
தேன்குழல் குழந்தைகளுக்கு.
பூந்தி லட்டு
Originally posted on சொல்லுகிறேன்:
வேண்டியவைகள் புதியதாக அரைத்த கடலை மாவு—2கப் சர்க்கரை—இரண்டரைகப் நெய்—–1டேபிள்ஸ்பூன் முந்திரிப் பருப்பு—–10 விருப்பம் போல் லவங்கம்—–6 திராட்சை—–15 ஏலக்காய்—–6 பொடித்துக் கொள்ளவும் பூந்தி பொரிக்க —–வேண்டிய எண்ணெய் கேஸரி பவுடர்—-ஒரு துளி குங்குமப்பூ—சில இதழ்கள் பச்சைக் கற்பூரம் —-மிகச் சிறிய அளவு செய்முறை சர்க்கரையை அமிழ ஒருகப் ஜலம் சேர்த்து அகன்ற பாத்திரத்தில் நிதானமான தீயில் வைக்கவும். பாகு கொதிக்கும் போது ஒரு ஸ்பூன் பாலைச் சேர்த்தால் அழுக்கு ஓரமாக ஒதுங்கும். கரண்டியால்…
Continue Reading நவம்பர் 6, 2015 at 7:56 முப 13 பின்னூட்டங்கள்
இந்திய ஆப்பிரிக்க -ஃபோரம் மஹாநாட்டில் இந்திய மருந்துகளின் முக்கிய உதவி.
இந்தியாவில் தயாரிக்கும் மருந்துகளின் தரமும்,விலையும் மற்றவர்களுக்கு உதவும் விதமும் ஸந்தோஷம் கொடுப்பவை. பகிர்தலுக்கு ஒரு நல்ல விஷயம்தானே?
Continue Reading நவம்பர் 2, 2015 at 3:24 முப 18 பின்னூட்டங்கள்
நவராத்திரி
பதிவுகள் இடமுடியாமற் ஒரு உடல்நலக்குறைவு நவராத்திரி மறு பதிவாகிலும் செய்ய வேண்டுமென்ற அவா
ஓரிரு படங்களும் நிவேதனம் வேண்டாமா?நேற்று ஆரம்பித்துவிட்ட நவராத்ரி விழாவைச் செம்மையாகப்,பக்திப் பரவசத்துடன் கொண்டாடி,முப்பெருந்தேவிகளுடைய அருளுக்குப் பாத்திரராகி எல்லா நலன்களையும் பெறவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். எல்லோருக்கும் என்னுடைய மானஸீக மங்கலப்பொருள்களுடன் மஞ்சள் குங்கும தாம்பூலமும்,அன்பான ஆசிகளும். அன்புடன் சொல்கிறேன். படம் ரிப்ளாகில் தரவேற்றுவது எப்படி?/???
படமுதவி—-கூகலுக்கு நன்றி.
புரட்டாசிமாதம் வரும் அமாவாஸை கழித்த மறுநாள் தொடங்கி பத்து
நாட்களுக்குக் கொண்டாடப்படும் பண்டிகை இது.
இந்தப் பண்டிகை எல்லா மாநிலங்களைக் காட்டிலும் மைசூரில் சிறப்பாகக்
கொண்டாடப் படுகிறது. கர்நாடகத்தில் சாமுண்சீசுவரி.
வட இந்தியாவிலும்,உத்தரப்பிரதேசத்திலும் ராம் லீலா என்று கொண்டாடுகின்றனர்.
ராமாயண நாடகங்கள் நடிக்கப் படுகிறது. விஜய தசமியன்று
இராவணன் கும்பகர்ணன் உருவப் பொம்மைகள் மெகா ஸைஸில் செய்து பொது இடங்களில் வைத்து
பட்டாசுகளை வெடித்து உருவங்களை எரித்துக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
வங்காளத்தில் துர்கா பூஜையாகக் கொண்டாடப் படுகிறது.
தமிழ் நாட்டில் முற்றிலும் பெண்களுக்கான பண்டிகையாகத் திகழ்கிரது இது.
அழகான,விதவிதமான பொம்மைகளால் கொலு வைக்கப்படுகிறது.
இதில் இல்லாத விஶயங்களே கிடையாது. பெண்கள் தங்களின் ஆர்வத்தையும்
கலைத்திறனையும் கொலுவில் அழகுரக்காட்டி மகிழ்வர்.
உறவினர்கள்,நண்பர்கள்,யாவர்களையும் அழைத்துக் கூடி மகிழ்வாகக்
கொண்டாடும் விசேஶ தினங்களிது.
அதே நேரத்தில் விசேஶ பக்தி ச்ரத்தையுடன் தேவியை வணங்கித் துதிக்கும்
பண்டிகையாகவும் இது விளங்குகிறது. அன்னையை
மூன்று சக்திகளாகப் பாவித்து, பார்வதி,லக்ஷ்மி,ஸரஸ்வதி என ஒவ்வொருவருக்கும்
மூன்று நாட்களை ஒதுக்கி இச்சாசக்தி,கிரியாசக்தி,ஞான சக்தி என ஒன்பது நாட்கள்
பூஜை செய்யப் படுகிறது.
வீடே,ஊரே திருவிழாக் கோலம்தான்.
நவராத்ரி நாட்களில் ஸுமங்கலி,கன்யாப் பெண்களுக்கு அன்னமளித்து,விசேஶ
மங்களச் சாமான்களை அளிப்பது என்பது மிகவும் விசேஶமான செயலாகக்
கருதப்படுகிறது.
நவராத்திரி ஒன்பது நாட்களும் விசேஶமாக மத்தியான வேளைகளில்
சர்க்கரைப் பொங்கல்,பாயஸம்,தயிர்சாதம், வெண்பொங்கல்,எலுமிச்சைசாதம்,
புளியஞ்சாதம், தேங்காய் சாதம், கல்கண்டு சாதம்,பாலில் செய்த அக்கார வடிசல்
என…
View original post 126 more words
காய்கறி ஸ்டூ
தேங்காசேர்த்துத்ய்ப்பால் சேர்த்துத்
இதையும் நான் கூட்டு வகையில்தான் சேர்த்திருக்கிறேன்.
தேங்காய்ப் பால் தயாரிப்பது எப்படி என்பதை முதலில்
பார்ப்போம்.
ஒரு தேங்காயைத் துருவி சிறிது சுடு நீர் தெளித்ப்
பிழிந்தால் கெட்டியாக சிறிது தேங்காயப் பால
கிடைக்கும். பின்னர் ஒருகப் சூடான நீர் சேர்த்து
தேங்காயை மிக்ஸியில் நன்றாக அரைத்துப் பிழிந்தால்
தேங்காய்ப்பால் கிடைக்கும்.
வேண்டிய சாமான்கள்——-தோல் நீக்கி
நறுக்கியஉருளைககிழங்கு ஒருகப்
உறித்த பட்டாணி–அரைகப்
கேப்ஸிகத் துண்டுகள்—-அரைகப்
நறுக்கிய காலிப்ளவர்—ஒருகப்
நறுக்கிய கேரட்—-அரைகப்
நறுக்கிய தக்காளிப் பழம்-முக்கால் கப்
பச்சை மிளகாய்–மூன்று
பொடியாக நறுக்கிய வெங்காயம்–ஒருகப்
லவங்கம்—–6, ஏலக்காய்–ஒன்று
மிளகுப் பொடி—-இரண்டு டீஸ்பூன்
ஒரு துளி மஞ்சள்ப் பொடி
ருசிக்கு உப்பு
எண்ணெய்—–இரண்டு டேபிள் ஸ்பூன்
பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி ஏலக்காய் லவங்கத்தைத்
தாளித்து, வெங்காயம், மிளகாயை வதக்கி தக்காளி,
காய்கறிகளைச் சேர்த்து சிறிது பிறட்டி உப்பு ,மிளகுப்பொடி
மஞ்சள் சேர்க்கவும்.
திட்டமாகத் தண்ணீர் சேர்த்து காய்களை வேக விடவும்.
வெந்த காய்க் கலவையில் தேங்காய்ப் பாலை விட்டு
ஒரு கொதி வந்ததும் இறக்கி, கறி வேப்பிலை சேர்த்து
உபயோகிக்கவும்.
கலந்த சாதம், புலவு, சேவை, அடை, தோசை,என
எல்லாவற்றுடனும் உபயோகிக்கலாம்.
தேங்காய்ப் பால் வேண்டிய அளவு தயாரித்து உபயோகிக்கவும்.
தூதுவளை ரஸம்.
இருமல்,சளி,ஜுரம் முதலானவைகள் கூட பரந்துவிடும் இதைச் சாப்பிட்டால்.மூலிகைச்சமையல்
Continue Reading செப்ரெம்பர் 23, 2015 at 11:33 முப 11 பின்னூட்டங்கள்
மும்பைப் பிள்ளையார்கள்.
ஆனந்த சதுர்த்திப் பிள்ளையார்கள்
Continue Reading செப்ரெம்பர் 21, 2015 at 1:02 பிப 5 பின்னூட்டங்கள்
சென்னை ஸென்ட்ரலில் மும்பை பிள்ளையார். இங்கும்
சென்னை சென்ற பிள்ளையாரைப் பார்த்த மாத்திரத்தில் மும்பைப் பிள்ளையார்களைப் பார்க்க மநம் சிந்தித்தது.
என்ன ஒரு பொடி நடையாகப் போய்ப் பார்க்கும் நிலையில் நாமில்லை. ஞாயிற்றுக் கிழமை. நான் வராவிட்டாலும் போகிறது.
கொஞ்சம் வழிப் பிள்ளையார்கள் வேண்டுமென்றேன் பிள்ளையிடம். பாருங்கள்
Continue Reading செப்ரெம்பர் 15, 2015 at 10:16 முப 16 பின்னூட்டங்கள்
ஸந்தோஷச்செய்தி
என்னுடைய முதல் மின் புத்தகம் சில நினைவுகள் என்றபெயரில் மின்நூலாக வெளிவந்திருக்கிறது. இது என்னுடைய வலைப்பதிவில் வெளியானதின் தொகுப்பு. ஸெப்டம்பர் இரண்டாம் தேதி எங்களின் அறுபத்தோராவது திருமண நாளில் வெளியானதில் எனக்கொரு மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட லிங்கைக் கொடுத்திருக்கிறேன் . நீங்களும் பார்த்து ஆதரவளிக்கக் கோறுகிறேன். அன்புடன் சொல்லுகிறேன்.
இவ்விடம் சொடுக்குக.






