Archive for ஓகஸ்ட் 15, 2009
அரிசிமாவு ரிப்பன் பகோடா
தேன் குழல் மாவு——-இரண்டுகப்,
வெண்ணெய்—–இரண்டு டேபிள் ஸ்பூன்,-சுவைக்கு உப்பு.
கசகசா-இரண்டு டேபிள் ஸ்பூன்,-காரப்பொடி–ஒருடீஸ்பூன்
சிறிது பெருங்காயப்பொடி,
பொரிப்பதற்கு எண்ணெய்.
செய் முறை——–உப்பு பெருங்காயத்தைத் சிறிது, தண்ணீரில், கரைத்துக் கொள்ளவும்.
மாவுடன் வெண்ணெய், காரம், கசகசாவைக் கலந்து உப்பு தண்ணீர் சேர்த்துப் பிசையவும். அச்சில் போட்டு பிழியும் அளவிற்கு திட்டமாகப் பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து ரிப்பன் பகோடா அச்சில் சிறிது சிறிதாக மாவை இட்டு பிழிந்தெடுக்கவும்.
கரகரப்பாக இருக்கும். அரிசி மாவில் செய்வதால் அதிகம் எண்ணெய் குடிப்பதில்லை.
சற்று நிறம் வித்தியாஸமாக இருக்கும்.