Archive for செப்ரெம்பர் 22, 2010
பீட்ரூட் கறி
இதுவும் கறிப்பொடி உபயோகித்து செய்தால் ருசியாகஇருக்கும்.
வேண்டியவைகள்
பீட்ரூட்—-அரைகிலோ
வெங்காயம்—-2
எண்ணெய்—–2டேபிள் ஸ்பூன்
இஞ்சி—சிறிய துண்டு
ருசிக்கு உப்பு
கடுகு—1டீஸ்பூன்
கறிப்பொடி—–1டேபிள் ஸ்பூன்
செய்முறை—–பீட்ரூட்டை சுத்தம் செய்து தோல்சீவி
சிறிய துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எணெணெயைக் காயவைத்து கடுகை
வெடிக்கவிட்டு இஞ்சி வெங்காயத்தை நன்றாக வதக்கி
பீட்ரூட்டைச் சேர்த்து வதக்கவும். வேண்டிய உப்பு
சேர்த்து, சிறிது ஜலம் தெளித்து மூடியால் மூடிவைத்து,
நிதான தீயில் கிளறிவிட்டு நன்றாக வேகும்படி வதக்கவும்.
காய்வதங்கி நீர் வற்றியவுடன் கறிப் பொடியைத் தூவி
வதக்கி இறக்கவும்.
பொடிவகைகளில் கறிப்பொடி செய்யும் வகை கொடுக்கப்பட்டு
இருக்கிறது. அவசியமாயின் காரம் கூட்டிக் குறைப்பது
உங்கள் கையில்.
காரட் பருப்பு கோசுமல்லி
;வேண்டியவைகள்——பயத்தம் பருப்பு—-1கப
தேங்காய்த் துருவல்—-2 டேபிள் ஸ்பூன்
காரட் துருவல்—-2டேபிள் ஸ்பூன்
வெள்ளரித் துருவல்—-2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி பொடியாக நறுக்கியது—–1டேபிள்ஸ்பூன்
துருவிய இஞ்சி—-1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய்——2
ருசிக்கு உப்பு
தாளிக்க—எணெணெய்—-2டீஸ்பூன்
கடுகு, சீரகம் சேர்த்து——1டீஸ்பூன்
எலுமிச்சம் பழம்—-1
செய்முறை
பருப்பைக் களைந்து ஒரு மணி நேரம் ஊறவைத்துத் தண்ணீரை
வடிக்கட்டவும்.
பிழிந்த வெள்ளரித் துருவல்,தேங்காய்த் துருவல்,கேரட்
துருவல், இஞ்சி,கொத்தமல்லி வகைகளைப் பருப்புடன்
சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
எண்ணெயில் கடுகு சீரகத்தைத் தாளித்து மிளகாயைவதக்கி
பருப்புடன் சேர்த்துக் கலக்கவும்.
சாப்பிடும் போதோ, பறிமாறும் போதோ உப்பு, எலுமிச்சை-
-சாறு கலந்து உபயோகிக்கவும்.
காப்ஸிகத் துண்டுகள் வதக்கியும், பச்சைப் பட்டாணி அப்படியே
சேர்த்தும், தக்காளி சேர்த்தும் ,செய்யலாம்.
வேண்டியவர்கள் வெங்காயம், பெருங்காயம் சேர்க்கலாம்.