Archive for ஏப்ரல் 2, 2012

பச்சை சுண்டைக்காய் மெந்தியக் குழம்பு.பலாக் கொட்டையுடன்.

வெந்தயக்  குழம்பைத்தான்    நாங்கள் மெந்திக் குழம்பு  என்று பேச்சு

வழக்கில்  சொல்லுவோம்.

துவாதசி சமையலில்    சுண்டைக்காயும்  ஒரு   முக்கியமான இடத்தை

வகிக்கிறது.

சென்னையில்   சுண்டைக்காய்  சுலபமாக கிடைத்ததால்  குழம்பும்

செய்து,   சுண்டைக்காய்ப்   பருப்புசிலியும்,  ப்ளாகில் போட  செய்தும்,

படமெடுத்தும் வைத்திருக்கிறேன். சுலப முறையை எழுதுகிறேன்.

பருப்புசிலியைப் பின்னாடி  பார்ப்போம். பலாக்கொட்டையும் பழ

சீஸனானதால்  கிடைத்ததைச் சேர்த்துப் போட்டு ச் செய்தேன்.

இப்போது குழம்பிற்கு  வேண்டியதைப் பார்ப்போமா?

வேண்டியவைகள்

புளி  ஒரு சின்ன  எலுமிச்சையளவு.

தாளித்துக்கொட்ட—கடுகு—அரைடீஸ்பூன்

உளுத்தம்பருப்பு—1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு—2 டீஸ்பூன்

வெந்தயம்—1 டீஸ்பூன்

மிளகாய் வற்றல்—-1

நல்லெண்ணெய்—3 டேபிள்ஸ்பூன்

பெருங்காயப்பொடி—அரை  டீஸ்பூன்

வெல்லம்—சிறிது

ருசிக்கு—உப்பு

ஸாம்பார்ப் பொடி—3 டீஸ்பூன்

அரிசிமாவு—ஒரு  டீஸ்பூன்

முக்கியமான பச்சை சுண்டைக்காய்—கால்கப்

இருந்தால்  பலாக்கொட்டை—7 அல்லது 8

கறிவேப்பிலை—சிறிது.

செய்முறை

புளியை  2 கப் ஜலம் விட்டுக்  கறைத்துக் கொள்ளவும்.

பச்சை சுண்டைக்காயை காம்பு நீக்கி   நன்றாக   நசுக்கித்

தண்ணீரில்  அலசவும்.

விதைகள்  ஓரளவிற்கு   வெளியேறும். வடிக் கட்டவும்.

பலாக் கொட்டையையும்  மேல் தோல் நீக்கி  உட் பருப்பைத்

துண்டுகளாகச் செய்து கொள்ளவும்.

குழம்புப் பாத்திரத்தில்   எண்ணெயைக் காய வைத்து, கடுகு

வெந்தயம்,பருப்புகள்,பெருங்காயம்,மிளகாய்   இவைகளைத்

தாளித்துக் கொட்டி, சுண்டைக்காயைச்  சேர்த்து நிதான தீயில்

நன்றாக   வதக்கவும்.

சுண்டைக்காய் வதங்கியதும்,  ஸாம்பார்ப் பொடியைச் சேர்த்துச்

சற்றுப் பிரட்டி     புளி ஜலத்தைச் சேர்க்கவும்.பலாக் கொட்டையையும்

உப்பையும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

துவாதசி சமையல் ஆனபடியால்   பூண்டு, வெங்காயம்

சேர்ப்பதில்லை.

துளி வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

குழம்பு  சற்று   சுண்டி      சுண்டைக்காய்  வெந்தவுடன்

சற்று   திக்காக   இருப்பதற்காக   அரிசி மாவைத் துளி

ஜலத்தில் கறைத்துக் கொட்டிக் கொதிக்கவைத்து  இறக்கவும்.

முன்போ, பின்போ கறிவேப்பிலை   சேர்க்கவும்.கமகம

குழம்பு தயார்.

சுண்டைக்காயும், பலாக்கொட்டையும் ஸரியான  ஜோடி.

ஸாம்பார் பொடிக்குப் பதில்,தனியா,மிளகாய்,   மிளகுப் பொடி

சேர்த்தும்  செய்யலாம். தேங்காய்  சேர்த்து   வறுத்து அறைத்தும்

செய்யலாம் சாதத்துடன். நெய் சேர்த்துச் சாப்பிட  ருசியாக   இருக்கும்.

பருப்பு சாதத்துடன்    துவாதசியன்று   சூப்பர் காம்பினேஷன்.

பச்சை சுண்டைக்காயும்,பலாக்கொட்டையும்.

பச்சைசுண்டைக்காய் மெந்தியக்குழம்பு

ஏப்ரல் 2, 2012 at 10:08 முப 20 பின்னூட்டங்கள்


ஏப்ரல் 2012
தி செ பு விய வெ ஞா
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 293 other subscribers

வருகையாளர்கள்

  • 546,863 hits

காப்பகம்

பிரிவுகள்


சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

Chitrasundar's Blog

நாங்களும் சமைப்போமில்ல!!!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.