Archive for ஏப்ரல் 5, 2012
அகத்திக்கீரைப் பொடித்தூவல்
வேண்டியவைகள்
அகத்திக்கீரை—1 கட்டு
பயத்தம்பருப்பு—-2டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல்—2டேபிள்ஸ்பூன்.
குண்டு மிளகாய் வற்றல்—-2
-அரைடீஸ்பூன் கடுகு
,உ.பருப்பு—-1டீஸ்பூன்
எண்ணெய்—-1டேபிள்ஸ்பூன்
சர்க்கரை—2 டீஸ்பூன்
ருசிக்கு—உப்பு
மஞ்சள் பொடி—துளி
அகத்திக் கீரையை ஒவ்வொரு வரியாக உறுவினறுக்கினால்
நறுக்குவதற்கு சுலபமாக இருக்கும். மெல்லியதாக நறுக்கவும்
முடியும்.
சுமார் இரண்டரை கப் நறுக்கிய கீரையை நன்றாகத் தண்ணீரில்
அலசி வடியவிடவும்.
பாசிப்பருப்பை முன்னதாகவே கைபொறுக்கும் அளவிற்கு சூடாக்கி
தண்ணீரில் ஊரவைக்கவும்.
மைக்ரோவேவ் பாத்திரத்தில்,ஊறி வடியவைத்த பருப்பு, கீரை,துளி
சர்க்கரை சேர்த்துக் கலந்து ஹைபவரில் 6 நிமிஷங்கள் மைக்ரோவேவ்
செய்து எடுக்கவும்.
திரும்பவும் இரண்டு, இரண்டு நிமிஷங்கள் இரண்டுமுறை
வைத்தெடுத்து எடுக்கவும்.
வேண்டுமானால் சிறிது ஜலம் தெளிக்கலாம்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,மிளகாய், உ.பருப்பு தாளித்து
கீரையை உப்பு சேர்த்து வதக்கவும்.
இறக்குமுன் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இரக்கவும்.
கீரை ஒரிஜனலாக சிறிது கசப்புத்தன்மை உடையது.
குளிர் காலத்தில் டிஸம்பர் ஜனவரியில் கீரை பூவுடன் சேர்த்துக்
கிடைக்கும்.
கார்த்திமாதக் கீரை கணுவெல்லாம் இனிப்பு என்ற வசனம் உண்டு.
அவ்வளவு நன்றாக இருக்கும்.
மைக்ரோவேவில் செய்யாவிட்டால் கீரையை சிறிது ஜலத்தில்
வேகவிட்டு வடித்தும் செய்யலாம்.
ஒவ்வொரு ஏகாதசி யிலும் பட்டினி விரதமிருப்பவர்கள் மறுநாள்
துவாதசியன்று சமையலில் இந்தக் கீரை கட்டாயமாக இடம்
பெறும்.
உடல் நலத்திற்கு எப்போதாவது ஒருநாள் சாப்பிட்டாற் கூட
நன்மை தரும் கீரை வகைஇது.
பசுவிற்கு இந்தக் கீரையை வாங்கிக் கொடுத்தால் மிகவும் நல்லது என்று
நம்பிக்கையும் உண்டு.
துவாதசி சமையலில் தொடர்ந்து சுண்டைக்காய் குழம்புக்கு அடுத்து
அகத்திக்கீரை பொடித்தூவல். படித்தோ, சமைத்தோ, ஞாபகம் வைத்தோ
இதையும் பாருங்கள்.
சாதத்துடன் கலந்து சாப்பிட சிறிது உப்பு சேர்த்த பருப்பு,நெய்,மோரோ,
தயிரோ இன்னும் எது வேண்டுமோ அதைக் கூட்டி ஏகாதசி பட்டினி
உபவாஸம் இல்லாவிட்டாலும், துவாதசி பாரணையைப் பற்றியாவது
உங்களுக்கு அறிமுகமாக்கியதில் எனக்கு ஒரு திருப்தி. ஸரிதானே?