அகத்திக்கீரைப் பொடித்தூவல்
ஏப்ரல் 5, 2012 at 1:04 பிப 4 பின்னூட்டங்கள்
வேண்டியவைகள்
அகத்திக்கீரை—1 கட்டு
பயத்தம்பருப்பு—-2டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல்—2டேபிள்ஸ்பூன்.
குண்டு மிளகாய் வற்றல்—-2
-அரைடீஸ்பூன் கடுகு
,உ.பருப்பு—-1டீஸ்பூன்
எண்ணெய்—-1டேபிள்ஸ்பூன்
சர்க்கரை—2 டீஸ்பூன்
ருசிக்கு—உப்பு
மஞ்சள் பொடி—துளி
அகத்திக் கீரையை ஒவ்வொரு வரியாக உறுவினறுக்கினால்
நறுக்குவதற்கு சுலபமாக இருக்கும். மெல்லியதாக நறுக்கவும்
முடியும்.
சுமார் இரண்டரை கப் நறுக்கிய கீரையை நன்றாகத் தண்ணீரில்
அலசி வடியவிடவும்.
பாசிப்பருப்பை முன்னதாகவே கைபொறுக்கும் அளவிற்கு சூடாக்கி
தண்ணீரில் ஊரவைக்கவும்.
மைக்ரோவேவ் பாத்திரத்தில்,ஊறி வடியவைத்த பருப்பு, கீரை,துளி
சர்க்கரை சேர்த்துக் கலந்து ஹைபவரில் 6 நிமிஷங்கள் மைக்ரோவேவ்
செய்து எடுக்கவும்.
திரும்பவும் இரண்டு, இரண்டு நிமிஷங்கள் இரண்டுமுறை
வைத்தெடுத்து எடுக்கவும்.
வேண்டுமானால் சிறிது ஜலம் தெளிக்கலாம்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,மிளகாய், உ.பருப்பு தாளித்து
கீரையை உப்பு சேர்த்து வதக்கவும்.
இறக்குமுன் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி இரக்கவும்.
கீரை ஒரிஜனலாக சிறிது கசப்புத்தன்மை உடையது.
குளிர் காலத்தில் டிஸம்பர் ஜனவரியில் கீரை பூவுடன் சேர்த்துக்
கிடைக்கும்.
கார்த்திமாதக் கீரை கணுவெல்லாம் இனிப்பு என்ற வசனம் உண்டு.
அவ்வளவு நன்றாக இருக்கும்.
மைக்ரோவேவில் செய்யாவிட்டால் கீரையை சிறிது ஜலத்தில்
வேகவிட்டு வடித்தும் செய்யலாம்.
ஒவ்வொரு ஏகாதசி யிலும் பட்டினி விரதமிருப்பவர்கள் மறுநாள்
துவாதசியன்று சமையலில் இந்தக் கீரை கட்டாயமாக இடம்
பெறும்.
உடல் நலத்திற்கு எப்போதாவது ஒருநாள் சாப்பிட்டாற் கூட
நன்மை தரும் கீரை வகைஇது.
பசுவிற்கு இந்தக் கீரையை வாங்கிக் கொடுத்தால் மிகவும் நல்லது என்று
நம்பிக்கையும் உண்டு.
துவாதசி சமையலில் தொடர்ந்து சுண்டைக்காய் குழம்புக்கு அடுத்து
அகத்திக்கீரை பொடித்தூவல். படித்தோ, சமைத்தோ, ஞாபகம் வைத்தோ
இதையும் பாருங்கள்.
சாதத்துடன் கலந்து சாப்பிட சிறிது உப்பு சேர்த்த பருப்பு,நெய்,மோரோ,
தயிரோ இன்னும் எது வேண்டுமோ அதைக் கூட்டி ஏகாதசி பட்டினி
உபவாஸம் இல்லாவிட்டாலும், துவாதசி பாரணையைப் பற்றியாவது
உங்களுக்கு அறிமுகமாக்கியதில் எனக்கு ஒரு திருப்தி. ஸரிதானே?
Entry filed under: கறி வகைகள்.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Mahi | 5:39 பிப இல் ஏப்ரல் 5, 2012
கிடைக்கும்போது பிடிக்காது, கிடைக்காது எனும்போதுதான் மனம் அதையே நினைக்கிறது! 🙂 ஹி..ஹி..அகத்திக்கீரையைச் சொல்லுகிறேன்! 😀
துவாதசி-உபவாஸம்-பாரணை..நிறைய விஷயங்கள் அறியத்தந்ததமைக்கு நன்றிம்மா!
கீரை பார்க்கும்போதே ருசி தெரிகிறது! 😛
2.
chollukireen | 6:46 முப இல் ஏப்ரல் 6, 2012
சிவராத்திரியன்று கபாலீசுவரர் கோவிலுக்கு அழைத்துப் போனார்கள்., அவ்விடமுள்ள கோ சாலைக்கு பசுவிற்கு கொடுப்பதற்காக அகத்திக்கீரையும்
வெளி வாசலில் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருந்தது. நீ சொல்வாயே அம்மாதிரி எனக்கும்
பளிச்சென்ற ஒரு பல்பு எரியும் மாதிறி தோன்றியது.
அதுதான் ஏகாதசிபட்டினியும், துவாதசி பாரணையுமாக
மாறியது. வேண்டியதை வாங்கிக் கொடுக்க மருமகனும்
இருந்தது ஒத்தாசையாகப் போயிற்று.
இன்னும் சிலது சென்னையின் உபயமாக வைத்திருக்கிறேன். அடுத்து பம்பாயினின்றும் பார்க்கிறேன். நன்றி அன்புடன்
3.
சித்ராசுந்தர் | 9:39 பிப இல் ஏப்ரல் 5, 2012
காமாஷி அம்மா,
அகத்திக்கீரை ப.பயறு,தேங்காய்ப்பூவுடன் ஜோராக உள்ளது.படத்திலுள்ள கீரையைக் கொடுத்தாலும் செய்து பார்க்கலாம்.மிகவும் பயனுள்ள குறிப்பு இது.
நாங்க அகத்திக்கீரையுடன் வாழைப்பூ சேர்த்து சாம்பார், பொரியல் என செய்வோம். கீரையின் கசப்பும், வாழைப்பூவின் துவர்ப்பும் சேர்ந்து சூப்பர் பொருத்தமாக இருக்கும்.
“பசுவிற்கு இந்தக் கீரையை வாங்கிக் கொடுத்தால் மிகவும் நல்லது” _ திருவண்ணாமலையில் தீபமன்று இந்தக் கீரை நிறைய விற்பனையாகிறது.இதை வாங்கி அப்படியே பக்கத்திலிருக்கும் பசுவிற்கு கொடுத்துவிட்டுப் போவார்கள்.இது ஏன் என்று இப்போதுதான் புரிகிறது.
எனக்கு ஏகாதசி பற்றி மட்டுமே தெரியும். துவாதசி, துவாதசி பாரணையெல்லாம் தெரியாது. நேரமிருக்கும்போது, முடிந்தால் அதைப்பற்றி எழுதுங்கமா.தெரிந்துகொள்கிறோம்.அன்புடன் சித்ரா.
4.
chollukireen | 7:06 முப இல் ஏப்ரல் 6, 2012
எனக்கு இங்கே கோவிலில் பார்த்த பிறகுதான் எல்லாம் ஞாபகம் வந்தது. நந்தி, ,வினாயகருக்கு அருகம்புல்லும்,
சிவனுக்கு வில்வமும், பசுவிற்கு அகத்திக்கீரையும்,,
விஷ்ணுவிற்கும், ஹனுமாருக்கு துளசியும், எந்த கோவிலுக்குப் போனாலும் அந்தந்த கடவுளுக்குப் ப்ரீதியான மலர்களும் கிடைப்பதுதான் விசேஷம்.உன்
ஆத்திக்கீரையின் ரஸிகத்தன்மையும் நன்றாக இருக்கிறது.. எனக்குத்
தெறிந்தவைகளை..எழுதுகிறேன்.. அன்புடன்
.