புடலங்காய்க் கறி.

மே 29, 2012 at 6:29 முப 15 பின்னூட்டங்கள்

இதுவும்   சுலபமான    தயாரிப்புதான்.   நல்ல பிஞ்சு  காயாக இருந்தால் ,

கறி, கூட்டு,பச்சடி என   பலவிதங்களில்  தயார் செய்யலாம்.

பத்தியச் சாப்பாட்டில் கூட   புடலங்காய்  சேர்த்துக் கொள்ளலாம்.

துவையல்,வறுவல்,மோர்க்குழம்பு என   விதவிதமாகத் தயார்

செய்யலாம்.

முதலில்   கறி செய்வோம்.

பிஞ்சு புடலங்காய்

வேண்டியவைகள்.

புடலங்காய்—அறை  கிலோ

பயத்தம் பருப்பு—-கால் கப்.

தேங்காய்த் துருவல்—-கால்கப்

மிளகாய்—-காரம் வேண்டிய   அளவிற்கு

இஞ்சி—-வாஸனைக்காக சிறிது

ருசிக்கு—உப்பு

மஞ்சள்ப் பொடி—சிறிது

தாளித்துக் கொட்ட   –எண்ணெய்

கடுகு,   உளுத்தம் பருப்பு—சிறிதளவு

செய்முறை

புடலங்காயை அலம்பி நறுக்கி,   விதைகளிருந்தால்   அகற்றிவிட்டு

பொடியாக    நறுக்கவும்.   பிஞ்சு காயானால்     அப்படியே

கூட நறுக்கலாம்.

பயத்தம் பருப்பைக் களைந்து   தண்ணீரை   ஒட்ட வடிய வைக்கவும்.

பருப்பையும்,   நறுக்கின    காயையும்   ஒன்று   சேர்த்து  உப்பு,

மஞ்சள்ப்பொடியைக்   கலந்து    கையினால்   அழுத்தமாகப் பிசறி

ஊற வைக்கவும்.

அழுத்திப்   பிசறுவதால்   பருப்பு   காய்  விடும்  தண்ணீரிலேயே

நன்றாக  ஊறும்.   சற்று  ஊறவைக்கவும்.

வாணலியில்   எண்ணெயைக்  காயவைத்து   கடுகு  உளுத்தம்

பருப்பைத் தாளித்துக் கொட்டி     இஞ்சி,  பச்சை மிளகாயை

வதக்கி,   காய்,பருப்புக் கலவையைக்   கொட்டி  வதக்கவும்.

நிதான தீயில்    மூடிவைத்து   அடிக்கடி  கிளறிக் கொடுத்து

காயை வதக்கவும்.

ஸிம்மில்   வைத்தால் கூட   ஸரியாக  இருக்கும்.

காய்பருப்பு   வதங்கியதும்   தேங்காய்த் துருவலைச்

சேர்த்துக்   கிளறி  வதக்கி  இறக்கவும்.

கொத்தமல்லி தூவி  உபயோகிக்கவும்.

பத்தியச் சாப்பாட்டில்   தேங்காய்  போடுவதில்லை.

ஒரு சிட்டிகை   சர்க்கரையும்  சேர்க்கலாம்.

மிளகாய்  ஸவுகரியம்போல    காய்ந்ததோ,   பச்சையோ

சேர்க்கலாம்.   பருப்பு,தேங்காயும்     கூட்டிக் குரைக்கலாம்.

புடலங்காய்க் கறி

Entry filed under: கறி வகைகள்.

அரைக்கீரை மசியல். என்ன சமையல்?

15 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Mahi's avatar Mahi  |  2:43 பிப இல் மே 29, 2012

    Looks colorful n delicious! My sister also does this soaking part,but with chilli powder – salt & pudalngai.

    Am not getting fresh ash gourd here..once in a blue moon, Indian store will have some pudalngai, in a poor(!) condition,which won’t taste good! 😉

    மறுமொழி
    • 2. chollukireen's avatar chollukireen  |  10:47 முப இல் மே 31, 2012

      ஆமாம். வெளிநாட்டில் இப்படிதான். சில பொருட்கள் இவ்விடத்தைவிட சில சமயம் நல்லதாகவும் கிடைக்கும். பார்க்கவே பிடிக்காத மாதிரியும் இருக்கும் சில சமயங்களில். எப்படியோ எனக்கு உங்களுடன் கலந்து பேச சான்ஸ் கிடைப்பதென்னவோ உண்மை.அன்புடன் தொடருவோம்.

      மறுமொழி
  • 3. chitrasundar5's avatar chitrasundar5  |  5:14 பிப இல் மே 29, 2012

    காமாஷி அம்மா,

    காயின் கலரிலேயே பொரியலும் நல்லாருக்கு.பிசறி வைப்பது தவிர மற்றவை எல்லாம் செய்வேன்.நீங்க செய்வது எல்லாமே ஃப்ரெஷ் காய்களில் செய்வதால் சுவை அதிகமாகத் தெரியும்.

    மகி சொன்னதுபோல் நானும் கடைகளில் வாங்கமாட்டேன்.ஆனால் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் இளம் பிஞ்சாக புடலங்காய்,பீர்க்கங்காய் எல்லாம் சீஸனில் கிடைக்கும்.அங்குதான் வாங்குவேன்.அன்புடன் சித்ரா.

    மறுமொழி
    • 4. chollukireen's avatar chollukireen  |  11:00 முப இல் மே 31, 2012

      வாழைத்தண்டு,புடலங்காய்,முள்ளங்கி போன்றவைகளுடன் இம்மாதிறி பருப்பைப் பிசறி செய்தால் தண்ணீரை இழுத்துக் கொண்டு வேலையை சுலபமாக்குகிறது. நம் தமிழ்நாட்டுப் பெண்களாகிய மகி, நீ எல்லாம் தெறிந்து கொள்ளாதது ஒன்றுமில்லை. ஸந்தோஷமாக இருக்கு. உங்கள் கமென்ட்டுகள்
      படிப்பதற்கு. அன்புடன் அடிக்கடி ஸந்திக்கலாம்.

      மறுமொழி
  • 5. chollukireen's avatar chollukireen  |  11:50 முப இல் மே 26, 2021

    Reblogged this on சொல்லுகிறேன் and commented:

    தமிழ்நாட்டுக் காய்கறிகளே அலாதி ருசி.அப்படி எளிய முறையில் செய்த இந்தக் கறி சென்னை வந்தபோது செய்ததை மீள் பதிவு செய்திருக்கிறேன். ருசியுங்கள். அன்புடன்

    மறுமொழி
  • 6. ஸ்ரீராம்'s avatar ஸ்ரீராம்  |  1:46 பிப இல் மே 26, 2021

    புடலங்காயே எனக்குப் பிடிப்பதில்லை.  ஆனாலும் அதை  மிளகு, தேங்காய் சேர்த்து  கூட்டு செய்தால் ஒரு கரண்டி போட்டுக்கொள்வேன்.  இந்த முறையில் செய்து பார்க்கிறேன் அம்மா.  இன்றுதான் புடலங்காய் வாங்கி இருக்கிறேன்!

    மறுமொழி
    • 7. chollukireen's avatar chollukireen  |  11:12 முப இல் மே 27, 2021

      காரத்திற்கு மிளகை சேர்த்துக் கறிசெய்து பாருங்கள் . சிரார்த கறிகாய் என்ற விசேஷமும் உண்டு.லேசாக நறுக்கி பஜ்ஜிகூடப் போடுகிறார்கள்.அவரவர்கள் ருசி அலாதிதான். கூட்டு ருசிதான். அன்புடன்

      மறுமொழி
      • 8. ஸ்ரீராம்'s avatar ஸ்ரீராம்  |  2:46 பிப இல் மே 27, 2021

        இன்று இந்த புடலங்காய்க்கறி செய்து உங்களுக்கும் படம் அனுப்பி இருந்தேன் அம்மா.  பார்த்தீர்களா?

      • 9. chollukireen's avatar chollukireen  |  11:08 முப இல் மே 28, 2021

        பார்த்தேன். கறி நன்றாகவே வந்திருக்கிறது. படமும் வேறு அனுப்பி சொல்லுகிறேனை கவுரவப்படுத்தி விட்டீர்கள்.மிக்க ஸந்தோஷம். அன்புடன்

  • 10. Revathi Narasimhan's avatar Revathi Narasimhan  |  10:42 பிப இல் மே 26, 2021

    அன்பின் காமாட்சிமா,
    புடலங்காய் வதக்கல் மிகப் பிடிக்கும்.
    அதற்கு இளம் பிஞ்சாக இருக்க வேண்டும். இங்கே கிடைக்கும்
    காய்கறிகள் சொல்லவே வேண்டாம். முற்றல் மட்டுமே.

    மகள் பீன்ஸ் கறி நீங்கள் சொல்வது போல
    செய்வாள். அழகாக அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
    பார்த்தாலே சாப்பிட ஆசையாக இருக்கிறது மா.
    நன்றி.

    மறுமொழி
    • 11. chollukireen's avatar chollukireen  |  12:08 பிப இல் மே 27, 2021

      புடலங்காய் வதக்கல்தான் பசங்களுக்குப் பிடிக்கும் என்று நெல்லைத் தமிழரும் சொன்னார்.நீங்களும் சொல்கிறீர்கள். பளபள என்று எண்ணெய் மினுமினுக்க அந்த ருசி அலாதி. இங்கு மும்பையிலும் முற்றல்தான். வாங்குவதே இல்லை என் று நினைக்கிறேன். பயத்தம் பருப்பு பீன்ஸ் தேங்காயுடன் கறி எனக்கும் மனதில் வந்தது.உங்கள் வரவு மிக்க ஸந்தோஷம். பாராட்டியே எழுதும் கலை. நன்றி. அன்புடன்

      மறுமொழி
  • 12. நெல்லைத்தமிழன்'s avatar நெல்லைத்தமிழன்  |  7:24 முப இல் மே 27, 2021

    காமாட்சிம்மா..இப்போ புடலை சீசன். நிறைய புடலங்காய் வாங்குகிறேன். எல்லாம் ஃப்ரெஷ். கிலோ 30 ரூபாய்க்குள்.

    பொதுவா புடலங்காயை நான், மிளகூட்டு, இல்லைனா தேங்காய் சீரகம் அரைத்த கூட்டு என்றுதான் சாப்பிடுவேன். இதில் கரேமது பண்ணினால், அதுவும் வதக்கல்னா பசங்க சாப்பிடுவாங்க. தேங்காய் போட்ட கரேமது போணியாகாது. இருந்தாலும் நாளை செய்யச் சொல்கிறேன். நன்றாகத்தான் இருக்கும், ஆனால் பொதுவா தேங்காய் போட்ட கரேமது செய்வதில்லை.

    மறுமொழி
    • 13. chollukireen's avatar chollukireen  |  11:36 முப இல் மே 27, 2021

      பிடிக்காததை ஏன் செய்ய வேண்டும். நான் சும்மா மீள் பதிவு செய்கிறேன். பொடிப்பொடியாக நறுக்கி வடைமாவில் சேர்த்துச் செய்தாலும் நன்றாக இருக்கும். பசங்களுக்கு வெங்காயம்தான் பிடித்தமானது. இங்கு புடலங்காய் அதிகம் கிடைப்பதில்லையோ என்னவோ? மலையாளி கடைகளில்தான் கிடைக்கும். அதுவும் முற்றலாக. உங்கள் பின்னூட்டம் விஷயங்கள் படிக்க மிகவும் ருசி. அன்புடந்

      மறுமொழி
  • 14. நெல்லைத்தமிழன்'s avatar நெல்லைத்தமிழன்  |  7:27 முப இல் மே 27, 2021

    பஹ்ரைனில் இருக்கும்போது, ஒல்லியா நீள புடலங்காய் கிடைக்கும். பெங்களூரில் இது அபூர்வம். குட்டைப் புடலங்காய்தான் கிடைக்குது. நீளப் புடலைனா ஒடித்துத்தான் கொண்டுவரணும்.

    பெங்களூர்ல இப்போல்லாம் வெண்டை கிலோ 20, கேரட் கிலோ 20ரூ, கத்தரி 30 ரூபாய்னு ரொம்பவே விலை குறைவா கிடைக்குது. கோஸ்லாம் 10-20 ரூபாய்க்குள். இரு மாதங்களுக்கு முன்பு, சௌசௌ 10 ரூபாய் கிலோ. சென்னையைவிட விலை குறைவாக இருக்கு இங்க.

    மறுமொழி
  • 15. chollukireen's avatar chollukireen  |  11:25 முப இல் மே 27, 2021

    ஒருகாலத்தில் பெரிய அளவு சௌசௌ மூன்று இரண்டு அணாதான். இப்போதய விலையும் உங்களின் பட்டியலைப் பார்க்கும் போது மலிவுதான். ரஸல் மார்கெட் அக்கா வீட்டில் வழக்கமாகப் போவார்கள். சின்ன வயதில் மார்கெட்டைப் பார்த்தே பிரமித்துப் போவேன். மும்பையில் எல்லாம் கிராக்கி என்ற சொல் காதில் விழுகிறது. சென்னையும் அப்படியா ? பெண் வசிப்பது இ ப்போது நியூ ஜெர்ஸி. நன்றி. அன்புடன்

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


மே 2012
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 557,015 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • Unknown's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • chitrasundar5's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • yarlpavanan's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • Unknown's avatar
  • segarmd's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • tamilelavarasi's avatar
  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Pandian Ramaiah's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.