Archive for திசெம்பர், 2013
வாழ்த்துகள்
2014 ஆம் ஆண்டை அன்புடன் வரவேற்க உங்கள் யாவருக்கும் மலர்ச் செண்டை அன்புடன் அளிக்கிறேன். சொல்லுகிறேனாகிய நான்.
Continue Reading திசெம்பர் 31, 2013 at 3:25 பிப 25 பின்னூட்டங்கள்
அன்னையர்தினம். 11
வேளைக்கீரை அம்மாவின் மனதில் புகுந்து விட்டது.
ஊரிலுள்ளவர்கள்கூடவேளைக்கீரை விளைச்சலை நம்புபவர்கள்.
ஏதோ பார்த்துக்கொண்டே இருந்தால்தானே டக்குனு ஏதாவது வரும்.
வேளையும் வரும்,ப்ராப்தமும் வரு்ம் மனதில் இப்படி தோன்றியது.
அம்மாவிற்கு ஊரிலுள்ள பிள்ளைகளெல்லாம் மனதின் தணிக்கைக்
குழுவில் வந்து போயினர்.அடுத்தத் தெரு பூரா பணக்காரர்கள்.
ஜிவி மாமா அந்தத் தெருவின் பெரியமனிதர். யாவரும் சுலபமாக அணுகிப்
பேசக் கூடியவர். சின்னச் சின்ன வைத்தியத்திற்கு பேர்போனவர்.
குறைகளைச் சொன்னாலும் தீர்த்து வைக்கக் கூடியவர். ஸரி
அவரையணுகிதான் தீர்வு காணவேண்டும். அவர் உறவிலும்
இரண்டொரு பிள்ளைகள் ஞாபகத்திற்கு வந்தது. ஸாயங்காலம் வாசத்
திண்ணையில், ஈஸிசேரில் படுத்திருக்கும் ஸமயம் போவதென்று
தீர்மானமாகியது.
புடவையை இழுத்து தலைப்பை ஸரியாக மடித்து சொருகிக் கொண்டு
ஒழுங்காக தலைப்பால் போர்த்திக்கொண்டு, வாயில்படி ஏறும் போதே
வாம்மா,வாவா.
எப்படி இருக்கேள் இரண்டுபேரும். அவரே வந்து விடுகிறார்.
இல்லே உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.
உள்ளே போகலாம் வா,வா.
இல்லே இங்கேயே திண்ணையிலே உட்காரலாம்.
அதிகமாக பேச ஒன்றும் இல்லே.
ஸரிஸரி.உட்காரு. ராஜு மாமிக்கு தீர்த்தம் கொண்டுவா.
என்னம்மா யாருக்கானும் உடம்புகிடம்பு ஸரியில்லையா?
அதெல்லாம் ஒண்ணுமில்லே. எங்காத்திலே இரண்டு பொண் பசங்க
ஓ. தெரியுமே அம்மா. புத்திசாலிப் பொண்கள்
கலியாணம் பண்ணணுமே. அவர் ஒன்றும் முயற்சியே எடுக்கவில்லை.
பையன் போன பின் அவர் மாதிரியே போயிடுத்து.
அதிகம் பேசினாலும் கோபம் வரது.
விடும்மா. அதெல்லாம் ஸுபாவங்கள். தெரிந்த விஷயம் தானே.
நீங்க ஏதாவது வரன் பார்த்துச் சொல்லணும்.
உங்க உறவில்கூட ஸ்ரீநிவாஸன் இருக்கான். நீங்க பார்த்துச் சொன்னால்
ஸரியாக இருக்குமே.
அதிகப் பணம் காசு கிடையாது.
அதெல்லாம் தானாக வரும்,போகும், அதுக்கெல்லாம் கவலையில்லை.
..ஸ்ரீநிவாஸனா வேண்டாம்மா,வேண்டாம். அது தத்தாரி.
நம்ம பசங்க கண்காணாது இருந்தாலும், சோத்துக்கு கஷ்டப்படாத இடமா
இருக்கணும். பாக்கலாம்மா, அவனுக்குத் தெரியுமா நீ வந்தது.
இல்லே உங்களைப் பார்த்து கேட்கப்போறேன்னு சொல்லி இருக்கேன்.
எதுவும் நாளைக்காலையிலேயிலேயாஆகிவிடப்போறதா என்ன?
ஸரிம்மா பார்க்கலாம்.
வரன் தேடு்ம் படலம் ஆரம்பமாகிவிட்டது,
நம்ம தெருவில் வேண்டியவர்களே. கிட்டண்ணா பேரன்.
எங்களுக்குச் சேப்பு பெண் வேணும் என்று அடுத்த பெண்ணுக்கு அச்சாரம்
போட்டு பேச ஆரம்பித்து விட்டார்கள்.
என்ன செய்வது அம்மா நிறம் கம்மி. அம்மாவைப்போல் அவள்.
நிறம்தான் கம்மி. பொருமையான நல்ல பெண்.
சின்னது அப்பாவைப்போல் நல்ல நிறம்.
எந்த நிறம் இருந்தாலும் அம்மாவிற்கு யாவும் ஒரே ஸமம்தானே!!!!!!!!!!!!!!.
மனது கொஞ்சம் கஷ்டப்படும்.
அத்தை சொல்லுவாள் அவளுக்கென்று பிறந்தவன் எங்கும் ஓடிப்போக
மாட்டான் விசாரப்படாதே என்பாள் . இது தினமும் நடைமுறை.
இன்னும் இரண்டொரு பையன்கள்.
அவர்கள் அம்மாமார்களுக்கு பெண் வைரத்தோட்டுடன் வரவேண்டுமென்று
ஆசை.
நல்ல பெண் எங்களுக்கு ஆக்ஷேபணையே இல்லை. தோடு போட்டால்
போதும்,ஸம்மதமா கேளுங்கள் என்று தூது.
கடவுளே வேண்டாம் இந்த ஸம்பந்தம். நாளைக்கே அதுவேண்டும் ,இது
வேண்டும் என்று ஆரம்பித்து விட்டால் எங்கே போவது?
இவளையொத்த பெண்களுக்கெல்லாம் கல்யாணம் அது இது என்று
அமர்க்களமாக நடக்கிறது.
நாமும் எப்படியாவது வரன் பார்த்து முடிக்க வேண்டும் என்ற அம்மாவின்
தீவுரமான முடிவு.
வெளியூர் வரன் ஒன்று செவ்வாய்தோஷமுள்ள ஜாதகம். மற்றொன்று
ஜாதகம் பொருந்தலே.
இடையே அம்மாவின் அண்ணாவின் மருமகள் பிரஸவத்தின்போது
காலமாகி விட்டாள்.
அவர்கள் கதையே வேறுமாதிரி.
மாமாவின் பிள்ளைக்கு போலியோ வந்து கால் ஊனம்.
சென்னை வந்து படிக்க வைத்து ஒரு வேலையும் வாங்கி வைத்துவிட்டார்கள்.
அம்மாவின் வயது அவருக்கு. பண்டாபீஸில் வேலை. அதே கட்டிடத்தில்
பின்புறம் வசிக்க இடம்.
தாய்தப்பனில்லாத மிக ஏழைப்பெண் கிடைத்து கலியாணமாகி இருந்தது.
அந்தப் பெண்ணிற்கு பிரஸவம் மிகக் கஷ்டம்.
ஐந்து ஆறு குழந்தைகளுக்குப் பிரகு இரண்டு குழந்தைகள் தங்கின.
ஸிஸேரியன் ஆரம்பித்த காலம்.
இவ்வளவு கஷ்யமாயிற்றே, ஒருவருக்கும்,குடும்பக் கட்டுப்பாடு,அது
இது என்று தெரியாத காலம்.
பிரஸவகாலத்திலே முடியாமற்போய் அப்படியே காலமாகி விட்டாள்
அந்தப் பெண்.
அந்த சமயம் உபசாரத்திற்கு அம்மா போயிருந்தாள்.
வேண்டியவர்கள் பலரும் ஒறுசேரக் கூடும் ஸமயமல்லவா?
வந்தவர்கள் பலரிடமும்ஜாதகத்திற்கு சொல்லி வைத்தாள். எல்லோரும் என்ன பிரமாதம்
நான் பார்த்துச் சொல்கிறேனென்ரார்கள்
காரியம்முடிந்து ஊர் திரும்புவதற்கு முன்னே வேண்டியவர்கள்
நீ ஒருமுறை ஆத்துக்கு வா. என்று கூப்பிட்டார்கள்.
அங்கு போன போது அவர்களுக்குத் தெரிந்தவர்களைக் காட்டி
அறிமுகம் செய்து, இந்த மாமிக்கு வேண்டியவர்கள் யாரோ இருக்கிரார்கள்.
அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு பெண் வேண்டுமாம். பார்க்கிராயா?
அதுக்கென்ன இப்போ பார்த்தால் போகிறது. ஜாதகம் அனுப்புகிறேன்.
உங்கள் விலாஸம் கொடுங்கள்.
விலாஸப் பரிவர்த்தனை ஆகிறது. வீட்டுக்கு வந்து கிளம்புமுன்
எங்கே போயிருந்தாய் பெரிம்மா கேட்கிராள்.
அதாந் காயத்ரி மாமி கூப்பிட்டாளே
ஜாதகம்கேக்கப் போனயா, ஆமாம் அதனாலென்ன?
பதிலொன்றும் சொல்லாமல் மொணமொணப்புகள்.
அத்தையை அழைத்துக் கொண்டு ஊருக்கு வந்தாயிற்று.
நடுவிலா னமாமிக்கு கடிதம் போட்டு, விசாரித்து அவர்கள் அட்ரஸ்
வாங்கியாயிற்று.
அத்தை சொல்கிறாள் நாலு இடத்தில் பார்க்கத்தைன் வேணும்.
பெரியம்மா அத்தையைக் கேட்கிராள்.
உனக்கு இவர்கள் மட்டும் தான் பேத்திகளா? பேரன்கள் இல்லையா??
அதனால் என்ன இப்போ?
இவ வேறெ எதோ கதை ஆரம்பிக்கிரா. விடு உன் வேலையைப்பார்.
இந்த மனுஷரோ யாரோ,எங்கேயோ ஜாதகம் அனுப்ப வாங்க,
இதெல்லாம் நான் எழுத மாட்டேன்.
ஸரி சின்னவளை விட்டு எல்லாம் செஞ்சுகிறேன்.
எல்லாம்நீயே செய்து கொள்.
அந்த மெட்ராஸ் வரன் அதிகம் கேட்க மாட்டார்கள்.
அதைத்தான் பார்க்கணும். அம்மா மனதில் கணக்குப் போட
ஆரம்பித்தாயிற்று. பார்க்கலாம் நாமும்——–
உங்கள் யாவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்,
2014 ஆம் ஆண்டே நல்லபடி வருகவருக. யாவருக்கும் வாழ்த்துகள்
தருகதருக அன்புடன்
பாதாம்ஹல்வா
ஆங்கிலப் புத்தாண்டை ஆசையுடன் வரவேற்று அதற்காக பாதாம் ஹல்வாவை செய்து பாருங்கள். கொஞ்சம் கேஸரிக் கலரோ,குங்குமப்பூவோ அதிகம் சேர்த்துக் கிளருங்கள். முந்திரியை நெய்யில் வருத்துப் போடுங்கள். அருமையான
ஹல்வா. ருசியுங்கள். அன்புடன் சொல்லுகிறேன்.
வேண்டியவைகள்.
பாதாம் பருப்பு—–1 கப் நிறைய. கோபுரம்போல
பால்—–~ஒரு கப்
சர்க்கரை—-ஒன்றறை கப்
நெய்—10 டேபிள்ஸ்பூனிற்கு அதிகம்
குங்குமப்பூ—-சில இதழ்கள். 1ஸ்பூன் பாலில் ஊறவைக்கவும்.
ஏலப்பொடி—சிறிது
வேண்டுமானால் அலங்கரிக்க முந்திரிப்பருப்பு
செய்முறை.
இரண்டு 3கப் கொதிக்கும் தண்ணீரை விட்டு, ஒரு 10நிமிஷம்
பாதாம் பருப்பை ஊற வைக்கவும். ஊறிய
பருப்பைப் பிதுக்கினால் தோல் சுலபமாக உறிக்க வரும்.
தோலை உறிக்கவும்.
உறித்த பருப்பை நன்றாக அலம்பி மிக்ஸியில் போட்டு
வேண்டிய அளவு பால் விட்டு நன்றாகவும், நறநறப்பாகவும்
அறைத்துக் கொள்ளவும்.
கெட்டியான துவையல் பதம்ஸரியாக இருக்கும்.
அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையையும், அறைத்த
விழுதையும் சேர்த்துக் கலந்து நிதான தீயில் வைத்துக்
கிளறவும்.
சர்க்கரை சேர்த்ததினால் கலவை இளகி பின் கொதிக்க
ஆரம்பிக்கும்.
ஒரு ஸ்பூன் பாலில் ஊற வைத்த குங்குமப்பூவைச்
சேர்க்கவும்.
கை விடாது கிளறிக் கொண்டே இருந்தால் கலவை கொதித்துப்
பின் இறுக ஆரம்பிக்கும்.
இறுக ஆரம்பித்த பிறகு சிறிது சிறிதாக நெய்யைச் சேர்த்துக்
கிளறவும்.
பொருமையாகக் கிளறவும். கலவை கெட்டியான பதத்தில்
வரும் போது ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.
திரட்டிப்பால் மாதிரி திரண்டு வரும் பதம் ஸரியாக
இருக்கும்
முந்திரியினால் அலங்கரிக்கவும்.
குங்குமப்பூ சேர்ப்பதால் இளம் மஞ்சளில் கலரும் அழகாக
வரும்.
சுவைக்கத் திகட்டாத நல்ல இனிப்பு.
ஒவ்வொரு டேபிள்ஸ்பூனாக சிறிது இடைவெளி விட்டு
நெய்யைச் சேர்க்கவும்.
பட்டர் பேப்பரில் சிறிது சிறிதாக சுருட்டி வைத்தாலும்
View original post 8 more words
அன்னையர் தினம் பதிவு 10
பதிவு நம்பர் பத்து. இன்னும் அம்மாவைப்பற்றி எழுத விவரங்கள் தோன்றி கொண்டே இருக்கிரது. நானும் எழுதுகிறேன். நீங்களும் படியுங்கள். பார்க்கலாம்,அன்புடன்
Continue Reading திசெம்பர் 18, 2013 at 11:14 முப 27 பின்னூட்டங்கள்
திருவாதிரைக் குழம்பு
படங்கள் போட முடியாதபடி என்னால் ஸரி செய்யமுடியாத அளவில் இருக்கிறது எனது கணினி. திருவாதிரைக் குழம்பும்
கூட வரட்டுமே. பருப்பு அதிகம் போட்டும் செய்யலாம். பாருங்கள் இதுவும் திருப்பிப் போடும் பதிவுதான்.அன்புடன்
இதை ஏழுதான் குழம்பு என்று சொல்வார்கள்.
பேர்தான் ஏழே தவிர எத்தனை தான் போட்டோமென்று மிகைப்
பட்டுப் போகும் அளவிற்கு காய்கள் கிடைத்து விடும்.
களியும் கூட்டும் நிவேதனம் என்று சொல்லி முருங்கை,
சுரைக்காய், முள்ளங்கி இதெல்லாம் சேர்க்க மாட்டார்கள்,
அது ஒரு கால பழக்கம்.
நாம் வேண்டியவைகளைப் பார்க்கலாம்.
பூசணி, பறங்கி, அவரை, கொத்தவரை, மொச்சைப்பருப்பு,
பச்சைப்பட்டாணி, உருளைக் கிழங்கு,குடமிளகாய்,சௌசௌ
சேனை, வெள்ளிக்கிழங்கு,காரட், தக்காளி
என பட்டியல் போட்டால் எதைவிட்டு எதைப் பிடிப்பது.
கத்ரிக்காய், பாகற்காய், வாழைக்காய்,வேறு இருக்கிறது.
இனிப்பு காய் வகைகளைக் குறைத்துப் போடலாம்.
நீர்ப் பண்டங்களான, பூசணி,சௌசௌ ஏதாவதொன்று.
வேண்டிய காய்களைச் சற்று நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
சேனைக் கிழங்கு போடுவதானால் தனியே வேகவைத்துப் போடவும்.
மொத்தமாக 5 , 6 கப் காய்கள் எடுத்துக் கொள்வோம்.
பருப்பு —துவரம்பருப்பு முக்கால் கப்
வறுத்தரைக்க சாமான்கள்.
வற்றல் மிளகாய்—-10
தனியா—2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு——ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் ஒரு மூடி
எண்ணெய்—-2 டேபிள்ஸ்பூன்
புளி ஒருபெரிய எலுமிச்சை அளவு கரைப்பதற்கு
தாளிப்பிற்கு —கடுகு, பெருங்காயம்
வாஸனைக்கு—-கொத்தமல்லி கறிவேப்பிலை
ருசிக்கு உப்பு
செய்முறை. —பு்ளியை ஊறவைத்துக் கறைத்து
வைத்துக் கொள்ளவும். 4 கப் அளவிற்கு.
வறுக்கக் கொடுத்த சாமானகளை சிறிது எண்ணெயில்
வறுத்தெடுத்து,தேங்காயையும், சேர்த்துப் பிறட்டி ஆரவைத்து
மிக்ஸியில் ஜலம் சேர்த்து மசிய அறைத்துக் கொள்ளவும்.
குழம்புப் பாத்திரத்தில் சிறிது எண்ணெயில் காய்களை
வதக்கி புளி ஜலத்தைச் சேர்த்து …
View original post 76 more words
திருவாதிரைக் களி.
மூன்று வருஷத்திற்கு முன்பு எழுதியது. படம் பிரகு போடுகிறேன். அன்புடன் சொல்லுகிறேன்
என்னுடைய சொல்லுகிறேனில் எழுதியது. பார்த்தேன். பிரசுரித்தேன் வாழ்த்துகள்.
திருவாதிரை ஒருவாக் களிதின்னாதவா நரகக்குழி
இப்படி ஒரு வசனம் சொல்வார்கள் பழைய காலத்தில்.
நாம் களியை செய்து பார்த்து விடலாம்.
வேண்டியவைகள்—பச்சரிசி—1 கப்
துவரம் பருப்பு—2டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு—2 டேபிள் ஸ்பூன்
வெல்லப்பொடி—-ஒன்றறைக் கப்
நெய்—2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துறுவல்—அரைகப்
முந்திரி திராட்சை—-விருப்பம்போல்
ஏலப்பொடி—-சிறிது
இருந்தால்—ஒருஸ்பூன் தேன்
செய்முறை.——அரிசியைக் களைந்து உலர்த்தி சிவக்க வறுத்து
மிக்ஸியில் ரவை போல் பொடித்துக் கொள்ளவும்.
பருப்புக்களையும் வறுத்து ரவைபதத்தில் பொடிக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் இரண்டரைகப் ஜலத்தைநன்றாகக்
கொதிக்க விடவும். சிறிது நெய் சேர்க்கவும்.
தீயை நிதானப்படுத்தி கொதிக்கும் ஜலத்தில் உடைத்த ரவை,பருப்புக் கலவையைக்
கொட்டிக் கிளறவும். ஒரு துளி உப்பு சேர்க்கலாம்.
உப்புமா வேக வைப்பதுபோல் தட்டினால் மூடி நன்றாக வேக
வைக்கவும்.
வெல்லத்தை அமிழ ஜலம் விட்டுக் கரைத்து ஒரு கொதிவிட்டு
வடிக்கட்டி அதைப் பாகாகக் காய்ச்சவும்.
காய்ச்சிய பாகை வெந்த அரிசி ரவைக் கலவையில் கொட்டி
கலவை கெட்டியாகச் சேரும்வரைக் கிளறவும்.
நெய்யில், முந்திரி, திராட்சையை வறுத்து, தேங்காயைச்
சேர்த்துப் பிரட்டி கலவையில் சேர்க்கவும்.
ஏலப்பொடி, தேன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
களி ரெடி. பருப்பு உடைத்து சேர்ப்பதற்கு பதில்
முக்கால் பதம் வேக வைத்த பருப்பைக் கொஞ்சம்
பிழிந்தும் சேர்க்கலாம். நான் தற்போது டில்லி
வந்திருப்பதால் படம் எடுத்துப் போட சௌகரியப்
படவில்லை.
கொதிக்கும் ஜலத்திலே யே வெல்லத்தைப் போட்டு
கொதிக்கவிட்டு, ரவைக் கலவையைச் சேர்த்து,வேகவைத்துச்
செய்வதும் உண்டு.
View original post 12 more words
அன்னையர் தினம்.பதிவு 9
பதிவு ஒன்பதை எழுதியிருக்கிறேன். பாருங்கள்.
Continue Reading திசெம்பர் 5, 2013 at 5:20 பிப 20 பின்னூட்டங்கள்