Archive for மார்ச், 2014
தாய்லாந்து ஸ்டைல் நூடுல்ஸ்.
நூடல்ஸில் பனீர் சேர்த்துச்,செய்யும் விதமிது..ஸ்ப்ரவுட்ஸ்,வேர்க்கடலை முதலானது சேர்த்துச் செய்ததை மருமகள் அனுப்பிய குறிப்பிது. நம் விருப்பப் படி சற்று மாற்றியும் செய்யலாம். உங்கள் திறமைகளும், வெளிக் கொணறலாம். பாருங்கள்,செய்யுங்கள்.
Continue Reading மார்ச் 31, 2014 at 7:19 முப 19 பின்னூட்டங்கள்
காரடை. உப்பு
Originally posted on சொல்லுகிறேன்:
பச்சரிசி–1கப் தேங்காய்த் துருவல்—அரைகப் பச்சைமிளகாய்—2 இஞ்சி—சிறியதாக நறுக்கியது—2டீஸ்பூன் கடுகு,உளுத்தம்பருப்பு—வகைக்கு சிறிதளவு ஊறிய காராமணி—-2டேபிள்ஸ்பூன் பெருங்காயம்—வாஸனைக்கு கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு. தாளித்துக் கொட்ட—எண்ணெய் சிறிதளவு செய்முறை—-அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து சிறிது நேரம் ஊறவைத்து வடிக்கட்டி நிழல் உலர்த்தலாக ஒரு துணியின் மீது உலர்த்தவும். கலகலஎன்று உலர்ந்த அரிசியை நிதானதீயில் வாணலியை வைத்து சற்று சிவக்கும் வரை வறுத்தெடுக்கவும். ஆறியபின் வறுத்த அரிசியை ரவையாக மிக்ஸியில் பொடிக்கவும். காராமணியை …
காரடை—வெல்லம்.
Originally posted on சொல்லுகிறேன்:
வேண்டியவைகள் பச்சரிசி——-ஒருகப்– பொடித்த வெல்லம்——முக்கால் கப் ஏலக்காய்—3 தோல் நீக்கி பொடித்துக் கொள்ளவும். காராமணி——2 டேபிள் ஸ்பூன் தேங்காய்த் துண்டுகளாக நறுக்கியது—–3 டேபிள் ஸ்பூன் நெய்——–3டீஸ்பூன் செய்முறை அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து வடிக்கட்டி நிழல் உலர்த்தலாகக் காய வைக்கவும். கலகல என்று உலர்ந்த அரிசியை வாணலியிலிட்டு சற்று சிவப்பாகும் வரை வறுத்து எடுக்கவும். ஆறிய பின் அரிசியை மிக்ஸியில் இட்டு மெல்லிய ரவையாகப் பொடித்துக் கொள்ளவும். காரா மணியை முன்னதாகவே வெறும் வாணலியில்…
Continue Reading மார்ச் 11, 2014 at 12:03 பிப 3 பின்னூட்டங்கள்
வடு மாங்கா,அல்லது மாவடு
வடுமாங்காய் ஸீஸன் வருகிறதே. போன வருஷம் போட்டது இதுவரை இருந்தது. கடையில் விசாரியுங்கள்.வாங்கிப் போடுங்கள். அதற்காகவே மறுபதிவிட்டிருக்கிறேன்.அன்புடன்
மரத்தில் பரித்தபடி வடுமாங்காய்கள்
இவ்வளவு சிறிய வடு கிடைத்து மாவடு போட்டதாக ஞாபகமே
இல்லை.அவ்வளவு வருஷங்கள் கிடைக்காத இடத்தில்தான்
இருந்திருக்கிறேன்.
கடையில் பார்த்து உங்களுக்கு வேண்டுமா என்று மருமகள்
கேட்டவுடன் வாங்கி வரும்படி ஸந்தோஷமாகக் கூறினேன்.
அதுவும் மேலே கொடுத்த குட்டி மாங்காய்கள்.
திட்டமாக காம்பை விட்டு மிகுதியை எடுத்து விடவும்
சுத்தம்செய்து ஒழுங்காக்கப்பட்ட மாவடு
இனி மா வடு தயாரிக்கலாம். அதாவது நன்ராக அலம்பித் துடைத்த
மாங்காய்களை ஒரு உலர்ந்த பாத்திரத்திலோ கண்ணாடி
கிண்ணத்திலோ போடவும்.
எவ்வளவென்று சொல்லவேயில்லையே நான். ஒரு கிலோ மாங்காயில்
ஒரு லிட்டர் தான் கிடைத்தது.
ஸரி, நீங்கள் ஒரு பெரிய டம்ளரினால் அளந்து 4 டம்ளர் மாவடுவை
எடுத்துக் கொள்ளவும்.
அரைகப் நல்ல உயர்தரமான உப்புப் பொடி வேண்டும்.
கால்கப் சின்ன சைஸ் கடுகு, விதை நீக்கிய 8 மிளகாய், வெய்யிலில்
நன்ராக காயவைத்துக் கொள்ளவும்.
அதனுடன் சிறிது மஞ்சளும் சேர்த்து மிக்ஸியிள் பொடிசெய்யவும்.
ஸாதாரணமாக எண்ணெய் விளக்கெண்ணை அரை டீஸ்பூன்
உபயோகிப்பதுண்டு. நான் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் விட்டு
அரைத்த பொடியைக் கலந்து மாங்காயைக் கிளறி, உப்பு சேர்த்து
சற்று கொள்ளளவு பெரியதாக உள்ள பாட்டிலில் போட்டு குலுக்கி,
அழுத்தமான மூடியினால் காற்று புகாவண்ணம், மூடி வைத்தேன்.
அரைத்துப் பிசறினகடுகு,மிளகாய்,உப்பு,மஞ்சளுடன்
தினமும் அடிக்கடி நன்றாகக் குலுக்கி விட்டேன்.
நிறைய ஜலம் விட்டுக் கொண்டு மாவடு சாப்பிட…
View original post 71 more words