Archive for ஜூன் 17, 2009
கதம்ப பகோடா
வேண்டியவை—கடலைமாவு2கப் — அரிசிமாவு2டேபிள்ஸ்பூன்——–
வெண்ணெய் ஒரு டீஸ்பூன் ,–வெங்காயம்2, பச்சைமிளகாய்3,——பொடியாக நறுக்கிய வகையில் கோஸ், காரட், குடமிளகாய்2கப்—கொத்தமல்லிசிறிது,—–கால்ஸ்பூன்இஞ்சித்துருவல்—வேண்டியஅளவுஉப்பு,———-பொரிப்பதற்கு எண்ணெய்.விருப்பமுள்ளவர்கள் பூண்டு சீரகம் சேர்க்கலாம்.
செய்முறை——மாவுகளுடன் உப்பு வெண்ணெய் 2ஸபூன் காய்ச்சிய எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து கொண்டு, பொடியாக நறுக்கியவெங்காயம் மிளகாய் காய்கறி மற்றவைகளையும் சேர்த்து திட்டமாக தண்ணீர் தெளித்துக் கலந்து பிசையவும். வாணலியில் எண்ணெயைக்
காயவைத்து, மாவைக் கிள்ளிப் போட்டு பகோடாக்களாகப் பொரித்தெடுக்கவும். இதையே தனியாக வெஙகாயத்தை மட்டிலும் அதிகமாகச் சேர்த்தும் செய்யலாம்.காரம் அதிகம் சேர்த்து செய்தால் சட்னிக்கு அவசியமிராது.
ஸோடா உப்புவிற்கு பதில்தான் இரண்டுஸ்பூன் காய்ச்சிய எண்ணெய் உபயோகிப்பது. கரகரப்பைக் கொடுக்கும்.