Archive for ஓகஸ்ட் 17, 2009
கோல வடை—-kola vadai
வேண்டியவைகள்——அரிசி மாவு ஒருகப்
மைதா—-நான்கு டீஸ்பூன்.——–மெல்லியரவை—-நானகுடீஸ்பூன்
காரப்பொடி–அரைடீஸ்பூன்.——-வெள்ளைஎள்–ஒரு டீஸ்பூன்.
தேங்காய்த்துருவல்—-கால்கப்.—–வெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
7அல்லது8 கறிவோப்பிலை இலைகள்.
ருசிக்கு உப்பும், துளி பெருங்காயப்பொடியும்.
பொரிப்பதற்கு எண்ணெய்
செய்முறை—– உப்பு,காயத்தை சிறிது நீரில் கரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.
தாம்பாளத்தில் எண்ணெய் தவிர எல்லா சாமான்களையும் கொட்டி நன்றாகக் கலக்கவும்.
உப்பு ஜலத்துடன் வேண்டிய அளவு நீரைக் கொஞசம் கொஞ்சமாகச் சேர்த்து மாவைக் கெட்டியான கலவையாகத் தயாரித்துக் கொள்ளவும்.
மாவை நன்றாகப் பிசைந்து ஒரே சீரான உருண்டைகளாக[சிறிய எலுமிச்சை அளவு] தயாரித்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு உருண்டையையும் எண்ணெய தொட்டுக் கொண்டு கையில் வைத்து பேனா அளவிற்கு மாவை நீட்டி உருட்டித்திரிக்கவும்..
திரித்ததைச் சுற்றி வட்டமாக ,இரண்டு முனைகளையும் அழுத்தி, சேர்த்து விடவும்.
இப்படியே, எல்லா மாவையும் தயாரித்து சுத்தமான துணியில் போட்டுக் கொள்ளவும்.
சற்து ஈரம் உலர்ந்தவுடன், வாணலியில் எண்ணெயைக் காய வைத்து
5,6, ஆகபோட்டுத் திருப்பி கரகர பக்குவத்தில் எடுக்கவும்.
வட்டமான கோலவடைகள். மாவு பிசையும் போது கெட்டியாகப் பிசையவும்.
