Archive for ஜூலை, 2010
கோஸ் கறி
மிகவும் சுலபமாகச் செய்யக் கூடியது.
வேண்டியவைகள்–—-கோஸ்—அரைகிலோ
பச்சை மிளகாய்—– 2
காரட்–1
பச்சை பட்டாணி—–ஒரு கைப்பிடி
அல்லது—-பச்சை கேப்ஸிகம்—-1
நசுக்கிய இஞ்சி—அரை டீஸ்பூன்
கடுகு–1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு—2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்–அரைகப் [விருப்பத்திற்கு]
எண்ணெய்——–2 டேபிள் ஸ்பூன்
ருசிக்கு—உப்பு
செய்முறை——-கோஸைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
தண்ணீரில் அலம்பி வடிக்கட்டியில் போட்டு நீரை வடிக்கவும்.
கேரட்டையும் தோல் சீவி நறுக்கவும்..
மிளகாயை நீளவாட்டில் கீறிக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெய்விட்டு காய்ச்சி,கடுகு
உளுத்தம்பருப்பைத் தாளித்து, இஞ்சி பச்சை மிளகாயை
வதக்கி கோஸ்,கேரட்,பச்சைப் பட்டாணியைப் போட்டுக் கிளறி
வதக்கி மூடி நிதான தீயில் கிளறிவிட்டு வதக்கவும்.
சற்று வதங்கியதும், வேண்டிய உப்பு சேர்த்துக் கிளறவும்..
நீர் வற்றியதும் தேங்காயைச் சேர்த்து வதக்கவும். கீழிறக்கி
நறுக்கிய கொத்தமல்லியைத் தூவவும்,. பட்டாணி இல்லாவிட்டால்
காப்ஸிகம் சேர்க்கவும்.
3 கலரில் பார்க்கவும். நன்றாக இருக்கும்.
ரொட்டிக்காக செய்யும் போது தனியா,மிளகாய்ப்பொடிகள்,
சேர்த்து, உருளைக்கிழங்கு துண்டங்களையும் கலந்து எண்ணெய்
அதிகம் விட்டு வதக்கலாம்.
உருளைக்கிழங்கு காரக்கறி
வேண்டியவைகள்—-கால்கிலோ—-உருளைக் கிழங்கு
எண்ணெய்——5 டேபிள்ஸ்பூன்
மிளகாய்ப் பொடி——2 டீஸ்பூன்
சீரகப்பொடி——2 டீஸ்பூன்
மஞ்சள்பொடி—-1டீஸ்பூன்
ருசிக்கு—உப்பு
கடுகு—-1 டீஸ்பூன
பச்சை கறிவேப்பிலை—-கால்கப்
தோல் உறித்த பூண்டு இதழ்கள்—–10
செய்முறை———கிழங்குகளைத் தோலுடன் நன்றாக வேக வைத்துத்
தோலை உறித்து திட்டமான துண்டங்களாகச் செய்து கொள்ளவும்.
பூண்டை மென்மையாக நசுக்கிக் கொள்ளவும்.
கிழங்குடன் உப்பு, காரம், மஞ்சள் பொடியைக் கலக்கவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக்,
கடுகை வெடிக்க விட்டு ,கறிவேப்பிலையைச் சேர்த்து வறுக்கவும்.
தீயைக் குறைத்து பூண்டு விழுதைக் கூட்டி வதக்கவும்.
வதங்கியவுடன் கிழங்கைச் சேர்த்து நன்றாக திருப்பி விட்டு
வதக்கவும். சற்று ஈரப் பசைபோக வதங்கியவுடன் சீரகப்
பொடியைத் தூவிக் கலந்து இறக்கவும்.
பூண்டு வேண்டாமென்றால் இஞ்சியைச் சேர்த்துத் தயாரிக்கலாம்.
காரப் பொடியுடன், தனியாப் பொடி, கரம் மஸாலா, சிறிது
மாங்காய்ப் பொடியும் தேவையான அளவு சேர்த்துத் தயாரிக்கலாம்.
வறுத்த கறிவேப்பிலையும், பூண்டு, சீரகப் பொடியும் தனித்த
ருசியைக் கொடுக்கும்.
கறிவேப்பிலைக் குழம்பு
இளசாக உருவிய கறிவேப்பிலை இலைகள்–2கப்
தோல் நீக்கி உறித்த பூண்டு இதழ்கள்—-கால்கப்
மிளகாய் வற்றல்——-3
மிளகு–2 டீஸ்பூன்
தனியா—-3 டீஸ்பூன்
சுக்கு—-ஒரு சிறிய துண்டு
ஓமம்–அரை டீஸ்பூன்
அரிசி–ஒரு டீஸ்பூன்
மேலே கொடுத்திருப்பவை யாவும் வறுப்பதற்கு.
தாளித்துக் கொட்ட—-கடுகு,,பெருங்காயம், வெந்தயம் 1டீஸ்பூன்
ஒவ்வொரு ஸ்பூன் கடலை உளுத்தம், பருப்புகள், வேர்க் கடலை,
தாளிக்க——நல்லெண்ணெய்–4 டேபிள் ஸ்பூன்
ருசிக்கு உப்பு—1டீஸ்பூன் மஞ்சள்பொடி
புளி—1எலுமிச்சை அளவு, வெல்லத்தூள் 1ஸ்பூன்
செய்முறை–புளியை வெந்நீரில் ஊறவைத்து 2,3முறை தண்ணீர் விட்டு
சாறு எடுத்துக் கொள்ளவும்.
வறுக்கக் கொடுத்திருப்பவைகளை சிறிது எண்ணெயில் வறுத்து பூண்டு
கறிவேப்பிலையையும் வதக்கிச் சேர்த்து, ஆறியபின் சிறிது ஜலம் சேர்த்து
அரைத்துக் கொள்ளவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து கடுகு,
பருப்புவகைகளைத் தாளித்து ,புளிக்கரைசலில் அரைத்த விழுதைக்
கொட்டிக் கரைத்து வேண்டிய அளவு ஜலம் சேர்த்து கொதிக்க விடவும்.
உப்பு, மஞ்சள், வெல்லம் சேர்க்கவும்.
குழம்பு நன்றாகக் கொதித்து திக்கான பதம் வந்ததும் இறக்கவும்
ருசியானதும், உடம்பிற்கு ஆரோக்கியமானதுமான குழம்பு.
நெய் சேர்த்துச் சாப்பிடவும்.
ருசிக்கு சிறிது தேங்காயும் சேர்த்து அரைக்கலாம்.
பீன்ஸ் அவரை பருப்புசிலி
பீன்ஸ் அவரைக்காய் சேர்த்தோ, அல்லது தனியாகவோ கொத்தவரைக் காயிலோ பருப்புசிலி நன்றாக இருக்கும்.
வேணடியவைகள்—அரைகப் துவரம் பருப்பு
கால்கப்—-கடலைப் பருப்பு
வற்றல் மிளகாய்—-5 காரத்திற்கு வேண்டியளவு
ருசிக்கு –உப்பு
காய்—–நறுக்கியது [பொடியாக] கால்கிலோ
பெருங்காயப் பொடி அரை டீஸ்பூன்
மஞ்சள் பொடி—அரை டீஸ்பூன்
எண்ணெய்—4 டேபிள் ஸ்பூன்
பச்சைக் கொத்தமல்லி–சிறிது
கடுகு, உளுத்தம்பருப்பு தலா ஒரு டீஸ்பூன்
செய்முறை——-பருப்புகளைக் களைந்து 2 மணிநேரம் தண்ணீரில்
ஊற வைத்து நீரை ஒட்ட வடிக்கட்டி,மிளகாய் பெருங்காயம்
சேர்த்து கரகர பக்குவத்தில் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.
அரைத்த கலவையை, மைக்ரோவேவின் அகலமான தட்டில்
எண்ணெய் தடவி அடை போலப் பரப்பி வைத்து உயர்ந்த சூட்டில்
4நிமிஷங்கள் மைக்ரோ வேவ் செய்து எடுக்கவும்.
எடுத்து ஆற விடவும். ஆறின பின் சிறு துண்டங்களாகச் செய்து
மிக்ஸியில் போட்டு வைப்பரில் 4 சுற்று சுற்றினால், பருப்பு
உதிர் உதிராக புட்டுப் போல கிடைக்கும்.
நறுக்கிய காய் எதுவோ அதை சிறிது ஜலம் சேர்த்து நனறாக
வேக வைத்துக் கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காயவைத்து
கடுகு, உளுத்தம் பருப்பைத் தாளித்து வெந்த காயைக் கொட்டி
வதக்கி உதிர்த்த பருப்புக் கலவையையும் சேர்த்துக் கிளறவும்.
நிதான தீயில் சற்று சிவக்க உதிர் உதிராகக் கிளறி இறக்கவும்
வதக்கும் போதே வேண்டிய உப்பு மஞ்சள்பொடி சேர்க்கவும்.
கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.
மைக்ரோவேவ் இல்லாது செய்வதானால் நிதானமான தீயில்
தோசைக்கல்லில் அடைமாதிரிதட்டி மூடி வேகவைத்து,
திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்து, ஆற வைத்து,
துண்டித்து மிக்ஸியில் போட்டு உதிர்த்துக் கொண்டு செய்யலாம்.
பருப்புக் கலவையில் தனியா, ஜீரகம், மஸாலா, புளி , இஞ்சி,
வெங்காயம் என நமக்குப் பிடித்தவற்றையும் சேர்த்து
அரைத்தும் செய்யலாம். ஜலம் விடாது அரைக்கவும்.
காப்ஸிகம், வாழைப்பூ, ஆத்திக் கீரை, வெந்தயக் கீரை.
காராமணிக்காய் என நமக்கு வேண்டியவற்றுடன் ஜோடி சேர்த்து
தயாரிக்கலாம்.
அரைத்த பருப்புக் கலவையை ஸ்டீம் செய்து உதிர்த்தும்,
நேரடியாகவே தாளிதத்தில் போட்டு உதிராக வறுத்தும்
செய்யலாம்.
திடீர் தோசை
எண்ணினால் உடனே செய்ய முடியும்.
வேண்டியவைகள் அரிசி மாவு—1 கப்
மைதா அல்லது கோதுமை மாவு—-1கப்
மோர்—அரை கப்பிற்கு அதிகம் விருப்பப்படி
ருசிக்கு உப்ப
பச்சைமிளகாய்-1 நீளமாகக் கீறிக் கொள்ளவும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் –கால் கப்பிற்கு குறையாமல்
வேண்டிய அளவு—–எண்ணெய்
செய் முறை—-மாவுகளை மோர்,உப்பு ஜலம் சேர்த்து
தோசைமாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
மிளகாய் வெங்காயத்தை லேசாக வதக்கி ஆற வைத்து
மாவுடன் கலக்கவும்.
நானஸ்டிக் தோசைக் கல்லில் எண்ணெய் தடவி மிதமான
சூட்டில், தோசையை வார்க்கும் போதே பரவலாக மாவை
வீசிவிட்டு வார்க்கவும். .ஸாதா தோசையைப் போல் பரப்புவது
சரிவராது.
சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு நன்றாக
வேகவைத்து எடுக்கவும்.
சற்று முறுகலாக எடுத்தால் கூடுதலான டேஸ்டுதான்.
மிகுந்த தோசைமாவு [அறைத்தது] போதாது போனால்
இம் முறையில் மாவுகளைச் சேர்த்தும் வார்க்கலாம்.
ஸாதா தோசையைவிட மாவு சற்று நீர்க்க இருக்கலாம்.
துணைக்கு எது வேண்டுமோ அதைச் சேர்த்துச் சாப்பிடுவது
உங்கள் விருப்பம்.
மாம்பழக் குழம்பு.
வேண்டியவைகள் ——துவரம் பருப்பு—1கப்
புளி—சின்ன எலுமிச்சை அளவு
ஸாம்பார் பொடி–3 டீஸ்பூன்
மிளகாய் வற்றல்—2
கடுகு–1டீஸ்பூன்
வெந்தயம்–அரைஸ்பூன்
வாஸனைக்கு–பெருங்காயம்
ருசிக்குஉப்பு
தாளிக்க எண்ணெய்—3டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
நாட்டு மாம்பழம்—5,6
செய்முறை—–பருப்பைக் களைந்து மஞ்சள் பொடி சேர்த்து
திட்டமான தண்ணீருடன் குக்கரில் வேக வைக்கவும்.
புளியை ஊறவைத்து 4கப் தண்ணீரைச் சிறிது சிறிதாகச்
சாறெடுக்கவும்.
குழம்பு வைக்கும் பாத்திரத்தில் புளி ஜலத்துடன் 5,6 சின்ன
மாம்பழங்களைச் சேர்த்து உப்பு, ஸாம்பார்ப் பொடி சேர்த்து
கொதிக்க விடவும்.
பழங்கள் சுருங்கி வெந்து குழம்பின் பச்சை வாஸனை போனபின்
வெந்த பருப்பைக் கலக்கிக் கொட்டி கொதிக்க விடவும்.
மிளகாய் கடுகு, வெந்தயம் பெருங்காயத்தை எண்ணெயில்
பொரித்துக் , கொட்டி 1டீஸ்பூன் அரிசி மாவைச் சிறிது ஜலத்தில்
கரைத்துவிட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி உபயோகிக்கவும்.
இது கிராமங்களில் கிடைக்கும் சாதாரணமான நாட்டு மாம்பழத்தில்
செய்வது வழக்கம். சாம்பார் ருசியாக இருக்கும். பழம் ருசியாக
இருக்காது.
கிளிமூக்கு மாம் பழத்தில் [ஒட்டு மாம்பழம்] செய்தால் புளியை
குறைத்து சேர்த்து பழத்தைத் துண்டுகளாக வெட்டிக் கலந்து
உப்புகாரம் சேர்த்து கொதிக்கவிட்டு ,வெந்த பருப்பைச் சேர்த்து
தாளித்துக் கொட்டலாம்.
1 டீஸ்பூன் தனியாவையும், சிறிது தேங்காயையும் வறுத்துஅறைத்து
சேர்த்தால் ருசி கூடும்.
சற்று புளிப்பும், இனிப்புமான குழம்பு இது.
மாம்பழ மணத்துடன் ருசியாக இருக்கும். கொத்தமல்லி
கறி வேப்பிலை சேர்த்து மணத்தை அதிகப் படுத்தலாம்.