Archive for ஓகஸ்ட் 29, 2010
உப்புச் சீடை
வேண்டியவைகள்
பச்சரிசியை லேசாக வறுத்தரைத்து சலித்த மாவு -2கப்
சிவக்க வறுத்தரைத்த உளுத்த மாவு. சலித்தது—கால்கப்
மெல்லியதாகத் துருவிய தேங்காய்த் துருவல்–1 கப்
ருசிக்கு உப்பு
ஊற வைத்து வடிக்கட்டிய கடலைப் பருப்பு—1டேபிள்ஸ்பூன்
வெண்ணெய்–3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி—அரை டீஸ்பூன்
சுத்தப் படுத்திய வெள்ளை எள்—1 டீஸ்பூன்
கறிவேப்பிலை இலைகள்—–10
வேண்டிய அளவு எண்ணெய் —-சீடை வறுத்தெடுக்க
செய்முறை——-உப்பு பெருங்காயத்தைச் சிறிது ஜலத்தில்
கரைத்து வடிக்கட்டிக் கொள்ளவும்.
அரிசி, உளுத்தமாவைக் கலந்து தேங்காய்த் துருவல் சேர்த்து
அழுத்திப் பிசறவும்.கறி வேப்பிலையைச் சேர்க்கவும்.
வெண்ணெய்.கடலைப் பருப்பு எள் சேர்த்துக் கலக்கவும்.
உப்பு ஜலம் சேர்த்து சிறிது, சிறிதாக ஜலம் தெளித்து
கெட்டியான, பூரி மாவைப்போல மொத்தையாகக் கலந்து
பிசையவும்.
மாவு கையில் ஒட்டாத பதத்தில் பிசைந்து ஒரே சீராக
,சிறிய கோலிகளாக மேலோடு உருட்டி, ஒரு துணியில்
பரவலாகப் போடவும்.[வழவழ என்றிராமல் சொரசொரப்பாக]
10 நிமிஷங்கள் கழித்து , வாணலியில் எணெணெயைக் காய
வைத்து சீடைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு
கரகரப்பாக வேகவைத்து சட்டுவத்தால் வடிக்கட்டி எடுக்கவும
டிஷ்யூ பேப்பரில் பரப்பி வைத்து ஆறினவுடன எடுத்து
டப்பாக்களில் வைத்து உபயோகிக்கவும்.