கோஸ்வடை

ஜனவரி 13, 2011 at 7:26 முப 9 பின்னூட்டங்கள்

பழக்கமாகிவிட்டால் எதையுமே  சுலபமாகச் செய்யலாம்.

இதுவும் அப்படிதான்.

முழு  உளுத்தம் பருப்பு—1 கப்  தோல் நீக்கியது

துவரம்பருப்பு—1 டேபிள்ஸ்பூன்

மிளகாய்—4

இஞ்சி—சிறிய துண்டு

பெருங்காயம்—சிறிது

பொடியாக நறுக்கியமுட்டைகோஸ்-1கப்

பொடியாக நறுக்கிய  கொத்தமல்லி–அரைகப்

ருசிக்கு—உப்பு

பொரிக்க—வேண்டிய எண்ணெய்

8 மிளகு.—பொடித்தது

செய்முறை—–பருப்புகளை  3 மணி நேரம் தண்ணீரில் ஊற-

வைத்து வடித்து    மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

இஞ்சி மிளகாயையும்  சேர்த்து அரைத்து விடலாம்.

லேசாக   துளி ஜலம்  தெளித்து  அரைக்கவும்.

நல்ல  மெத்தென்ற பதத்தில்  மாவு இருந்தால் நல்லது.

உப்பு,கோஸ்,  கொத்தமல்லி, பெருங்காயம் கலந்து  கொண்டு

வடைகளை தயாரித்து,  எண்ணெயைக் காயவைத்து

வடையைப் போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும்.

கையை  ஈரப்படுத்திக்கொண்டு  மாவை எடுத்து உருட்டி

பாலிதீன் பேப்பர்மேல் வைத்து  ,வட்டமாக சமன் செய்து,

நடுவில் ஒரு பொத்தலுமிட்டு மாவை  காயும்      எண்ணெயில்

நழுவ விடவேண்டும். திருப்பிவிட்டு இருபுறமும் சிவக்க-

-விட்டு எடுத்து  வடிக்கட்டவும்.

ருசியானது.  அரைப்பது சற்று முன் பின் இருந்தாலும்,

ஜலம், அரைப்பதில்  அதிகமாகக் கூடாது

வாஸனைக்கு மிளகுப் பொடி சேர்ப்போம்.

இதையே பெரிய அளவில் உருட்டிப் போட்டும் சிவக்க

வேகவைத்தும் எடுக்கலாம்.

மிக்ஸியில் அரைக்கும்போது   சீக்கிரமே சூடாகிவிடுவதால்

சற்று இடைவெளி கொடுத்து அரைப்பது  அவசியமாகிறது.

கோஸ் மட்டிலும் சேர்த்து தயாரித்த  வடையிது.   சமயத்தில் சிறிது

ஜலம் அதிகம் என்று தோன்றினால்  ஒரு டீஸ்பூன் கடலை மாவோ,

உளுத்தம் மாவோ கலந்து செய்யவும். முழுப்  பருப்பு  விழுது காணும்.

வடையும்  ருசியாக   இருக்கும்.

கோஸ்வடை

Entry filed under: இடை வேளைச் சிற்றுண்டிகள்.

ஆமவடை பொங்கல் வாழ்த்துக்கள்

9 பின்னூட்டங்கள் Add your own

  • 1. மகி's avatar மகி  |  7:30 பிப இல் ஜனவரி 13, 2011

    வடை பார்க்கவே அருமையாக இருக்கிறது.:P கோஸுடன் சேர்த்திருக்கும் பொருட்களைப் பார்க்கும்போதே வடையின் ருசி தெரிகிறது. பார்த்து ரசித்துக்கறேன்! 😉

    இந்த உளுந்துவடை வடிவம் நான் இதுவரைக்கும் செய்ததே இல்லை! பொதுவாகவே உளுந்துவடை செய்வது எனக்கு கொஞ்சம் வராது..பக்குவம் இல்லாமல் வடை எண்ணெயைக் குடித்தது ஒரு முறை..அதிலிருந்து செய்வதே இல்லை! 🙂

    மறுமொழி
    • 2. chollukireen's avatar chollukireen  |  7:58 முப இல் ஜனவரி 14, 2011

      ஜலத்தைக் குறைத்து விட்டு அரைத்து, குணுக்குமாதிரி சிறியதாகக் கிள்ளிப் போட்டு எண்ணெயில் பொரித்தெடுத்துப் பார். ருசி ஒன்றே. மெது பகோடாவாக பெயர் மாற்றிக் கொண்டு ப்ளேட்டிலிருந்து பறக்க ஆரம்பித்துவிடும். வடிவம் வேண்டாம். ஒப்பனை போதும்.

      மறுமொழி
  • 3. இளமதி's avatar இளமதி  |  6:36 முப இல் ஒக்ரோபர் 24, 2012

    அம்மா நேத்திக்கு இந்த வடைதான் மஹாநவமிக்கு ஒரு பிரஸதமா செஞ்சேன்.

    ரொம்ம்ம்பவே நல்லா வந்திச்சு.
    எல்லாரும் விரும்பி சாப்பிட்டா. வடை உள்ளே நல்ல மெதுமெதுன்னும் வெளியே கிறிஸ்பியாவும் வந்திச்சு.

    மிக்க நன்றிம்மா. அருமையான குறிப்பு தந்ததுக்கு:)

    மறுமொழி
    • 4. chollukireen's avatar chollukireen  |  10:13 முப இல் ஒக்ரோபர் 24, 2012

      வடை நன்றாக இருந்தது. செய்து சாப்பிட்டுப்ரஸாதம் நன்றாக இருந்தது என்று
      எழுதியது கண்டு நானும் ப்ரஸாதம் சாப்பிட்ட
      மாதிரி மனது மகிழ்ச்சியாயிற்று. உன்னைப் பற்றியும் கொஞ்சம் சொல்லம்மா.
      தெறிந்து கொள்கிறேன். அன்புடன்

      மறுமொழி
  • 5. chollukireen's avatar chollukireen  |  11:47 முப இல் ஜூன் 20, 2022

    Reblogged this on சொல்லுகிறேன் and commented:

    கல்லுரலில் அரைத்துப் பழக்கமானதை மிக்ஸியிலரைத்துச் செய்தேன்போல உள்ளது. இதுவும் பழைய குறிப்புதான். செய்து பாருங்கள். அன்புடன்

    மறுமொழி
  • 6. ஸ்ரீராம்'s avatar ஸ்ரீராம்  |  11:36 பிப இல் ஜூன் 20, 2022

    அம்மா..   அருமையாக இருக்கிறது.  எங்களுக்கு வடை ஷேப்பில் தட்ட வருவதேயில்லை!!!  மாவு பதம் விதம் விதமாக கரெக்ட் செய்தும் உருண்டை உருண்டையாகத்தான் வருகிறது!!!

    மறுமொழி
    • 7. chollukireen's avatar chollukireen  |  10:52 முப இல் ஜூன் 21, 2022

      அடிக்கடி செய்வதில்லை அல்லவா.தவிரவும்எல்லாம் கலந்த பருப்பு வடை செய்வதுபோல கெட்டியாகவும் இல்லை. ஈரக்கையில்மாவு எடுத்துக்கொண்டு, கட்டைவிரலால் அகட்டி ஒரு பொத்தலும் போட்டு அப்படியே எண்ணெயில் நழுவ விட்டு விடுவோம். பழக்கம்தான் காரணம். மிக்க நன்றி.அன்புடன்

      மறுமொழி
  • 8. Geetha Sambasivam's avatar Geetha Sambasivam  |  12:31 பிப இல் ஜூன் 21, 2022

    முன்னெல்லாம் அடிக்கடி முட்டைக்கோஸ் அடை, வடைனு பண்ணினேன். இப்போ முட்டைக்கோஸ் சேர்க்கக் கூடாது என்பதால் சாப்பிட்டே 3 வருஷங்கள் ஆகின்றன. 🙂 ஆனால் வெங்காயம் சாப்பிடும் நாளில் வெங்காயம் போடுவேன். அரைக்கீரை, முளைக்கீரை வாங்கினால் நறுக்கி எடுத்து வைத்துக்கொண்டு சாயங்காலத்துக்குக் கீரை வடையும் பண்ணுவேன். வடை என்றால் பிடிக்காதவங்க யார்? நல்ல குறிப்புக்கு நன்றி அம்மா.

    மறுமொழி
    • 9. chollukireen's avatar chollukireen  |  11:21 முப இல் ஜூன் 22, 2022

      உடல்நலத்திற்கு ஒத்துவராததை நீக்கதானே வேண்டும். கீரை வடையும் ருசிதானே.மிக்க நன்றி. அன்புடன்

      மறுமொழி

இளமதி -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


ஜனவரி 2011
தி செ பு விய வெ ஞா
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 557,014 hits

காப்பகம்

பிரிவுகள்

  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • tamilelavarasi's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • yarlpavanan's avatar
  • gardenerat60's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • Unknown's avatar
  • Vijethkannan's avatar
  • chitrasundar5's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • segarmd's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • ranjani135's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.