Archive for ஜூலை 5, 2021
அன்னையர் தினப்பதிவு 25
பதிவு 25 உங்கள் பார்வைக்கு வருகிறது. அம்மா கோர்ட்படி ஏறியது, இன்னும் சில ஸம்பவங்கள் இதில். இன்னும் ஐந்து வாரங்கள்தான் பாக்கி. படியுங்கள். அன்புடன்
அப்பா இறந்த போது காரியங்களில் ஒன்றான சர்மஸ்லோகம்
வாசித்தளித்த பேப்பர் என்னிடம் உள்ளதா?
அதைஆதாரமாகக் காட்டமுடியுமா என்ற ஒரு யோசனை.
என்னிடம் உள்ளதா எனக்கேட்டு ஒருகடிதம்.
கடிதம் கைக்குவரவே மூன்று வாரமாகி விட்டது.
பாரக்பூர்,காட்மாண்டு என எத்தனை குடிப்பெயற்சிகள்.
அதுவும் எங்கு ஒளிந்து கொண்டதோ கிடைக்கவில்லை.
அப்பா காலமான விஷயம், நமது விசேஷ நிருபர் என்ற
தலைப்பில் சுதேசமித்திரன் பாரத தேவியில் வந்தது, என எந்த பேப்பர்
கட்டிங்கும் கிடைக்கவில்லை.
நீ சிரமப்படாதே பென்ஷனுக்காக அலையவும் வேண்டாம்,நிம்மதியாய்
இரு. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என்றுதான் சொல்ல முடிந்ததே
தவிர எந்த முயற்சியும் செய்ய யாருக்கும் நேரம்,காலம்,இல்லை
என்றுதான் சொல்ல முடிந்தது.
அயலூர் மாற்றலாகிச் சென்ற பேரன்,பெண் அவர்கள் குடும்பத்துடன்
வரபோக இருக்கிரார்கள் என்ற செய்தியும் இடையே கிடைத்தது.
இதில் அம்மாவிற்கு மகிழ்ச்சி.
நம்முடன் வரபோக இல்லாவிட்டாலும் அவர்கள் குடும்பம்
ஒற்றுமையுடன் இருந்தால் ஸரி என்ற எண்ணம் ஒரு மகிழ்ச்சியைத்
தந்தது. இப்படிச் சில காலம் கடந்தது. ஒருநாள்
பாட்டி உங்கள் பேரனுடன் ஜோடியாக ஸ்கூட்டரில் ஒரு பெண்ணும்
போவதைப் பார்த்தேன் என மாப்பிள்ளை சொல்ல
நீயாரைப் பார்த்தாயோ? நல்ல பிள்ளை அவன். நீ வேறு யாரையாவது
பார்த்திருப்பாய்.
அம்மாவின் மனதில் எண்ணங்கள் ஓடியிருக்கும். இது என்ன புது
ஸமாசாரம் என்று.
ஒரு பத்துப் பதினைந்து நாட் கழித்து, பேரன்,அவன் மனைவி,மாமியார்,
அம்மா என எல்லோரும் விஜயம்.
வாங்கோ என்று கூப்பிட்டதற்கு…
View original post 391 more words