Archive for ஜூலை 19, 2021
அன்னையர்தினப் பதிவு—27
இதிலும் சில ஸம்பவங்களின் ஞாபகத்துடன் தொடருகிறது. 27 வரை வந்துவிட்டோம்.வாருங்கள். அன்புடன்
விசுபலகை இதுமாதிரிதான்ஆனால்,அகலமாக இருக்கும், இது மாதிரிக்குதான்
பெங்களூர் குடும்பத்தைப் பற்றி நினைத்து விட்டால் அவ்வளவு
பெருமிதமாக இருக்கும் அம்மாவிற்கு.
அந்தக்குடும்பத்துப் பெண்களும்தான் என்ன எவ்வளவு மனதில்
ஒருவர்க்கொருவர் முரண்பாடுகளிருந்தாலும், அதையதை அப்படியே
விட்டு விட்டு, எதையும் ரகளையாக ஆக்காமல் நேசம் பாராட்டுவார்கள்.
அண்ணன் தம்பிகளும் அப்படியே. அவர்கள் குடும்பத்து பெண்கள்,
பேத்திகளெனஅவர்கள் வாழ்க்கைப்பட்ட இடத்திலும் யாவரையும்
நேசித்து இன்றளவும் வாழ்ந்து வருகிரார்கள்.
இப்படியெல்லாம் இந்த விசுப்பலகையில் உட்கார்ந்து யோசிப்பதுதான்
வேலையாக இருக்கிரது.
அதென்ன விசுப்பலகை.? விசுபலகையா? விசைப் பலகை இல்லை. நல்ல
பருமனான ,அழுத்தமுள்ள பலகைகளை ஒன்று சேர்த்து படுப்பதற்கு
இரண்டு மூன்று பெஞ்சுகளைச் சேர்த்தால் வரும் அகலத்திற்குச்
செய்யப்பட்ட அகலமான படுக்கும் பலகை.
அழகாக தாங்குவதற்கு நான்கு கால்களுக்குப் பதில், பிடிமானம்
இருக்கும்.? அது எந்தத் தலைமுறையில் செய்ததோ?
அவ்வளவு கனம்.
ஒரு முறை பிரார்த்தனைக்கு மயிலம் சென்ற போது,வளவனூரிலிருந்து
வேனின் மீது கட்டி யெடுத்து வந்தது.
ஹாலில் அதைப்போட்டு அதில்தான் அம்மாவின் வாஸம்.
காலையில் படுக்கை சுருட்டி வைத்தாகிவிடும். அதில்தான் மெத்
என்ற உணர்வுக்காக எத்தனை பழம் புடவைகள் மடித்துப்
போட்டிருக்கும். இதெல்லாம் ஏம்மா என்று கேட்பேன். வேண்டாமே
இதெல்லாம்.!
அசடே உனக்குத் தெரியாது. வயதானவர்களுக்கு இந்தப்புடவைகளால்
எவ்வளவு சுகம் கிடைக்குமென்று.
வயதானவர்கள் சமத்துதான். நாம்தான் அசடு.
உபயோகி. வேண்டாதபோது தூக்கி எறி.
எதையும் வீணாக்காது உபயோகிக்கும் சுபாவம். இதுதான் தியரி.
ஒரு ஸமயம் தில்லி வந்திருந்தேன். சென்னைக்கும் போகத்தான்.
View original post 467 more words