Archive for ஓகஸ்ட் 2, 2021
அன்னையர் தினப் பதிவு—29
நிகழ்வுகள் எப்படி அடுத்தடுத்து நிகழ்ந்தன? அம்மா குடியிருந்த வீடும் பாருங்கள். அடுத்த பதிவையும் சீக்கிரமே பதிவிட்டு விடுகிறேன். முன்பு அப்படிதான் பதிவிட்டேன். கட்டாயம் அந்தப்பதிவையும் படியுங்கள். அன்புடன்
டெல்லியிலிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்களப்பாவின் உடல் நிலைகுறித்துக் கடிதம் போட்டிருந்தேன். யாரையும்வரச்சொல்லிஎழுதவில்லை.அனாவசியமாகஎல்லோருக்கும்ஆஸ்ப்பத்திரியிலும் அனுபவங்களுக்குக் குறைவில்லை. ஸ்பெஷல்வார்டானாலும்நான்குபடுக்கை.ஒருசின்னஹால்மாதிரி. துணைக்கு ஒருவரிருக்கலாம். பிள்ளை அறியாத வயது என்று நான்அவனை ஆஸ்ப்பத்திரியில் இரவு இருக்க விடுவதில்லை. அடுத்த படுக்கைக்கும்,நமக்கும் நிறைய இடம் உண்டு.அடுத்த படுக்கைக்காரர் ஒரு திபெத்தியர். நமக்கு பாஷை புரியாது. யாரும் உறவினர்கள்,பிள்ளை குட்டி எதுவும் இல்லாதவர். யாரோ ஒரு வயதான கிழவி பத்து மணி.சுமாருக்கு வருவாள். கஞ்சிமாதிரி ஏதோ நிறைய வைத்து விட்டுப் போவாள். ஆஸ்ப்பத்திரி சாப்பாடு யென ஏதோ நர்ஸ் கொண்டு கொடுப்பாள்.
நாளுக்குநாள் எழுந்திருக்கக் கூட முடியாமற் பலஹீனமானது தெரிந்தது. நர்ஸ் எப்போதாவது இல்லாவிட்டால் அந்தக் கஞ்சியை யாரையாவது எடுத்துக் கொடுக்கும்படி ஜாடை காட்டுவார். மற்ற உடல்நலமில்லாதவர்களுக்கு வேண்டியவர்கள் கூடவே இருப்பதால் யாவருக்கும்பாவம்என்றுதோன்றும். திபெத்திய லாமாக்கள் அடிக்கடி வந்து ஏதோப்ரார்த்தனைஅவர்கள் முறையில் செய்து போவார்கள். கூடவேஇருப்பவர்களுக்கு,பஸ்சிநேகிதம்,ரயில் சிநேகிதம்ஆகாயவிமாண சிநேகிதம்பேரன்பேத்திகளை பள்ளியிலிருந்து அழைத்துவரும்போதுஏற்படும்,சினேகிதம், வாக்கிங் சிநேகிதம் போல ஆஸ்ப்பத்திரி சிநேகமும் பல விதங்களில் ஏற்படுகிரது. நேற்று முன் நாள் பக்கத்து பேஷண்ட்ஸரியேயில்லை. என்னவானாலும் கடைசி வரை வைத்தியம் கொடுக்க வேண்டும். லாமாக்களுக்குச் சொல்லியாயிற்று. பிறகு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று பேசிக்கொண்டார்கள் சிறிது பாஷை புரிந்தவர்கள். சாயங்காலம் நான்கு மணிக்கு மேல் இருக்கும். கைஜாடை செய்து கூப்பிடுகிறார். என்ன ஏது என்று கேட்கப் போனால் தண்ணீர் வேண்டுமென்கிரார். கையால் வாங்கிக் குடிக்கும் நிலையிலில்லை அவர். நம் வீட்டு விளிம்பு வைத்த …
View original post 284 more words