Archive for ஓகஸ்ட் 23, 2021
பூண்டு கறிவேப்பிலைக்குழம்பு
மீள்பதிவு வரிசையில் இன்று 5 நக்ஷத்திர ஹோட்டல் குழம்பு வருகிறது. பிடித்தவர்களுக்கு கமகமதான். அன்படன்
இது 5 நட்சத்திர ஹோட்டலில் செய்யும் தமிழ் நாட்டுக் குழம்பு.
நானும் எழுதுகிறேன். நீங்களும் செய்யுங்கள்.ருசிப்போமா.
வேண்டியவைகள்.
பூண்டு—100 கிராம். தோலை உரித்து வைத்துக் கொள்ளவும்.
ஸாம்பார் வெங்காயம்–100 கிராம்
தக்காளி—2 அல்லது 3
கடுகு–அரை டீஸ்பூன்
வெந்தயம்—அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு–1– டீஸ்பூன்
கடலைப்பருப்பு—2 டீஸ்பூன்
பெருங்காயம்—சிறிது
நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்.
வற்றல்மிளகாய்—2 இவைகள் எல்லாம்.தாளித்துக் கொட்டுவதற்கு.
வேண்டிய பொடிகள்
தனி மிளகாய்ப்பொடி—1 டீஸ்பூன்
தனியாப்பொடி—-4 டீஸ்பூன்
மஞ்சள் பொடி—1 டீஸ்பூன்
புளி—1 பெறிய நெல்லிக்காயளவு.
ருசிக்கு உப்பு
உருவின பச்சை கறிவேப்பிலை–கால்க்கப்பிற்கு அதிகமாகவே
இருக்கலாம்
1 மேலே தூவ சிறிது கறிவேப்பிலை பாக்கி வைத்து விட்டு சிறிது
எண்ணெயில் கறிவேப்பிலையை வறுத்து வைக்கவும்.
2 புளியைத் தண்ணீரில் ஊறவைக்கவும்.கறைத்து சாரெடுக்கவும்.
3 சின்ன வெங்காயத்தை உறித்து ஒன்றிரண்டாக மிக்ஸியில்
போட்டு சுற்றி எடுக்கவும்.
4 தக்காளிப் பழத்தை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
5. குழம்புப் பாத்திரத்தை காஸில் வைத்துச் சூடாக்கி எண்ணெயை விடவும்.
6 எண்ணெய் காய்ந்ததும் கடுகு மிளகாயைப் போட்டு, கடுகு வெடித்ததும்
பருப்புகள் வெந்தயம் சேர்த்து சிவக்க வறுத்து, வெங்காயம், பூண்டு
சேர்த்து நன்றாக வதக்கவும். பெருங்காயம் சேர்க்கவும்.
7 தக்காளியைச் சேர்த்து வதக்கி மிளகாய்,தனியா, மஞ்சள்பொடி
வகையைச் சேர்த்துப் பிரட்டி புளி ஜலம், உப்பைச் சேர்த்து நன்றாகக்
கொதிக்க விடவும்.
பூண்டு வெந்து…
View original post 53 more words