Archive for மே 20, 2010
காய்கறி ஸாகு
இதுவும் ஒருவிதக் காய்கறிக் கலவையின் கூட்டே.
சுலபமாகவும் செய்யலாம்.
வேண்டியவைகள்.
உருளைக் கிழங்கு ——2 தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும்.
கேரட்—-2
பச்சைப் பட்டாணி—அரைகப்
பொடியாக நறுக்கிய—பீன்ஸ், கோஸ் தலாஅரைகப்
காப்ஸிகம்—-2 .துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
நூல்கோல், காலிப்லவரும் சேர்க்கலாம்.
தாளிக்க நறுக்கிய வெங்காயம் ஒன்று
எண்ணெய்—1 ‘ டேபிள் ஸ்பூன்ஸ்பூன், கடுகு—அரைடீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு—-1 டீஸ்பூன் லவங்கப் பட்டை சிறிது
பெருங்காயப்பொடி–அரை டீஸ்பூன்
தேவைக்கு—-உப்பு.- மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்
அரைப்பதற்கு—–3 பச்சை மிளகாய்
பொட்டுக் கடலை[உடைத்தது]—–2 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய்— அரைகப்
மிளகு-அரை டீஸ்பூன்
சீரகம்—-அரை டீஸ்பூன்
தனியா–2 டீஸ்பூன்.
மேலே தூவ
நெய் சிறிது, முந்திரி 5, 6 .
பச்சைக் கொத்தமல்லி —சிறிது
செய்முறை—-நறுக்கிய காய்களை அலம்பி வடிக்கட்டவும்.
அரைக்கக் கொடுத்திருப்பவற்றை மிக்ஸியிலிட்டு சிறிது
ஜலம் சேர்த்து நனறாக அறைத்தெடுக்கவும்.
வாணலியி்ல் எண்ணெயில் கடுகு,பருப்பு,காயம் தாளித்து
வெங்காயத்தை நன்றாக வதக்கி காய்கறிகளையும் சேர்த்து
சிறிது வதக்கி திட்டமாக ஜலம் சேர்த்து வேக வைக்கவும்.
உப்பு மஞ்சள் பொடி சேர்க்கவும். நிதான தீயில் காய்கள்
வெந்ததும், அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்த்து
கொதிக்க வைத்து இறக்கி ,ஒடித்த முந்திரியை நெய்யில்
வறுத்துச் சேர்க்கவும். நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி
உபயோகிக்கவும்.
தோசை, ரொட்டி,பூரி என எல்லாவற்றுடனும் சேர்த்து
சாப்பிடலாம்.
மற்ற காய்களும் சேர்க்கும் போது தக்காளியும் சேர்க்கலாம்.