காரடை. உப்பு

மார்ச் 14, 2012 at 10:56 முப 6 பின்னூட்டங்கள்

பச்சரிசி–1கப்

தேங்காய்த் துருவல்—அரைகப்

பச்சைமிளகாய்—2

இஞ்சி—சிறியதாக  நறுக்கியது—2டீஸ்பூன்

கடுகு,உளுத்தம்பருப்பு—வகைக்கு சிறிதளவு

ஊறிய   காராமணி—-2டேபிள்ஸ்பூன்

பெருங்காயம்—வாஸனைக்கு

கறிவேப்பிலை,  கொத்தமல்லி   சிறிதளவு.

தாளித்துக் கொட்ட—எண்ணெய்  சிறிதளவு

செய்முறை—-அரிசியைத் தண்ணீர் விட்டுக் களைந்து சிறிது நேரம்

ஊறவைத்து  வடிக்கட்டி நிழல்  உலர்த்தலாக ஒரு  துணியின் மீது

உலர்த்தவும்.

கலகலஎன்று  உலர்ந்த  அரிசியை  நிதானதீயில்   வாணலியை

வைத்து சற்று  சிவக்கும் வரை  வறுத்தெடுக்கவும்.

ஆறியபின்   வறுத்த       அரிசியை   ரவையாக    மிக்ஸியில்

பொடிக்கவும்.

காராமணியை   வெறும்  வாணலியில்  சற்று   முன்னதாகவே

வறுத்து  ஹாட்கேஸில்  வென்னீர்  விட்டு   ஊறவைக்கவும்.

வாணலியில்   எண்ணெயைக்  காயவைத்து  கடுகு,உ.பருப்பு

தாளித்து   இஞ்சி, பச்சைமிளகாயை  வதக்கி  ரவையின்  அளவைப்

போல   இரண்டு பங்கு   தண்ணீரைச்  சேர்க்கவும்.

வேண்டிய உப்பு,   தேங்காய்த் துருவல்,கறிவேப்பிலை  சேர்த்து

தண்ணீரைக் கொதிக்க   விடவும்.

ஊறின  காராமணி,  பெருங்காயத்தையும் சேர்க்கவும்.

கொதிக்கும்  நீரில்  ரவையச் சேர்த்துக்  கிளறவும்.

தீயை மட்டுப் படுத்தவும்.

பந்துபோல   வெந்து   சேர்ந்து வரும்போது  கிளறி   மூடி  இறக்கி

வைக்கவும்.

சற்று  நன்றாக  ஆறியபின்   மாவைப் பிறித்து  ஸமமாக உருட்டி

கனமான  வடைகளின்   உருவத்தில்  ,  ஒரு  பாலிதீன்  கவர்  மீது

எண்ணெயோ    ஜலமோ  தொட்டுத் தடவி

தட்டி எடுத்து,   நீராவியில்   15  நிமிஷங்கள்  வேகவைத்து

எடுக்கவும்.

இட்லி  ஸ்டீம்  செய்வது  போலவேதான்.

உப்பு  அடை தயார்.  தேங்காய் மணத்துடன்  உப்பு காரத்துடன்

கூடிய  மெத்தென்ற   காரடை தயார்.

எது இஷ்டமோ  அதை  கூடச்  சாப்பிடலாம்.

2010    மார்ச்  11    காரடை   இனிப்பு  எழுதினேன்.   இன்று

2012  மார்ச் 14  சென்னையினின்றும் காரடை உப்பு எழுதுகிறேன்.

பெண்  செய்தாள்.   இன்று  காரடையான்  நோன்பு.  இதை

எப்பொழுது வேண்டுமானாலும்   செய்யலாம். அடையைச்

சொல்கிறேன்.  அரிசி ஊறவைத்து உலர்த்தி வறுத்துச் செய்வதால்

அடை   மிருதுவாக   மெத்தென்று  வருகிறது.  உடன் வெண்ணெய்,

வேறு   இன்று  சாப்பிடுவதால்  எல்லாமே ஸாஃப்ட்தான்.திருத்தவும்

மாவு கிளற முன்மாதிரி ஸேம்பிள்.கொதிக்கும் கலவை

மாதிரி. கிளறிய அரிசி ரவைக் கலவை

நீராவியில் வேகத் தயார் நிலையில்

சாப்பிடத் தயார் நிலையில் உப்பு ருசிக் காரடைகள்.

Entry filed under: இனிப்பு வகைகள், Uncategorized.

பலாக்காய் பொடித்தூவல் சிறு கிழங்கு கிரேவியுடன்

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. சித்ராசுந்தர்'s avatar சித்ராசுந்தர்  |  5:08 பிப இல் மார்ச் 14, 2012

    காமாட்சி அம்மா,

    காரடை,இனிப்படை இரண்டுமே நல்லாருக்குமா. இன்றுதான் இனிப்படை குறிப்பைப் பார்த்தேன். இவற்றைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் செய்ததில்லை. ஒரு நாளைக்கு இரண்டு அடைகளையும் செய்திட வேண்டியதுதான்.குறிப்புக்கு நன்றி அம்மா.
    அன்புடன் சித்ரா.

    மறுமொழி
    • 2. chollukireen's avatar chollukireen  |  9:42 முப இல் மார்ச் 17, 2012

      ரொம்பவே மனதிற்கு இதமாக இருக்கிறது. கிட்டேவா இருக்கிறீர்கள். எதைச் செய்தாலும் வேண்டியவர்களுக்குக் கொடுத்துவிட்டுதான் மறு காரியம் பார்க்கும் ஸ்வபாவம் எனக்கு.
      இப்போது நினைத்துப் பார்த்து மனதை அசைபோடும் நிலைதான். செய்வது செய்யாதது
      இருக்கட்டும். ரஸித்து எழுதுவதே படிக்க
      ஸந்தோஷமாக இருக்கிறது.இப்படியே வந்துகொண்டிரும்மா.

      மறுமொழி
  • 3. Mahi's avatar Mahi  |  1:18 முப இல் மார்ச் 15, 2012

    காரடை நல்லா இருக்குமா! இனிப்பு அடை குறிப்பை இனிமேல்தான் பார்க்கணும். ஒருநாள் செய்துபார்க்கிறேன்.

    மறுமொழி
    • 4. chollukireen's avatar chollukireen  |  9:51 முப இல் மார்ச் 17, 2012

      நன்றாக இருக்கு இல்லையா? இந்தியா வரும்போது கட்டாயம் செய்து கொடுக்கிறேன்.
      இல்லையா நான் ஜெனிவா போனால் கட்டாயம் அங்கு வா. ஊரைப் பார்த்தமாதிரி உங்களுக்கும், உங்களைப் பார்த்த மாதிரி எங்களுக்கும் இருக்கும். Mr .அருணுக்கும் சேர்த்த அழைப்பு இது.

      மறுமொழி
  • 5. chollukireen's avatar chollukireen  |  12:12 பிப இல் மார்ச் 11, 2014

    Reblogged this on சொல்லுகிறேன் and commented:

    ருசிமிக்க உப்படையும் செய்வது யாவருக்கும் வழக்கம். அதையும் செய்ய வேண்டுமல்லவா?செய்யுங்கள்.ருசித்து மகிழுங்கள். திரும்பவும் ஆசிகளுடன்

    மறுமொழி
  • 6. mahalakshmivijayan's avatar mahalakshmivijayan  |  4:33 முப இல் மார்ச் 12, 2014

    இனிப்பு, உப்பு இரண்டு ரெசிபியையும் எழுதி வைத்து கொண்டேன் காமாட்சி அம்மா! கண்டிப்பாக செய்து பார்க்க விரும்புகிறேன்.. எனக்கு இவை இரண்டுமே புதிது 🙂

    மறுமொழி

chollukireen -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


மார்ச் 2012
தி செ பு விய வெ ஞா
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

திருமதி ரஞ்சனி அளித்த விருது

Follow சொல்லுகிறேன் on WordPress.com

Enter your email address to follow this blog and receive notifications of new posts by email.

Join 296 other subscribers

வருகையாளர்கள்

  • 557,015 hits

காப்பகம்

பிரிவுகள்

  • tamilelavarasi's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Alien Poet's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Preferred Travel's avatar
  • Unknown's avatar
  • முத்துசாமி இரா's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Great Foodies's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Durgakarthik's avatar
  • Unknown's avatar
  • Sudalai's avatar
  • chitrasundar5's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • geethaksvkumar's avatar
  • Unknown's avatar
  • SIVA - BARKAVI's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • ranjani135's avatar
  • Unknown's avatar
  • shanumughavadhana's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar
  • பிரபுவின்'s avatar
  • Unknown's avatar
  • Unknown's avatar

சொல்லுகிறேன்

சொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்

Durga's Delicacies. Charming to those of Refined Taste.

A diary of my cooking experiences to remember, to share and to learn.

Stanley Rajan

உலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்

எறுழ்வலி

தமிழ்த்தாயின் தலைமகன்...

ஆறுமுகம் அய்யாசாமி

கவிதை, கருத்து, இதழியல்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

ranjani narayanan

Everything under the sun with a touch of humor!

hrjeeva

TNPSC

முருகானந்தன் கிளினிக்

மருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை

chinnuadhithya

A smile is a curve that straightens everything

Rammalar's Weblog

Just another WordPress.com weblog

anuvin padhivugal

மனதில் உள்ளதை பகிர்ந்துகொள்ள......

Cybersimman\'s Blog

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்

Vallamsenthil's Blog

Just another WordPress.com weblog

பிரபுவின்

பிரபுவின் வெற்றி

உலகின் முக்கிய நிகழ்வுகள்!

உண்மை நிகழ்வுகளை! வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி !

WordPress.com News

The latest news on WordPress.com and the WordPress community.

WordPress.com

WordPress.com is the best place for your personal blog or business site.