Archive for மார்ச் 30, 2012
நெல்லிக்காய்ப் பச்சடி
2011 வருஷ சொல்லுகிறேன் ரிவ்யூவில் 2011 வருஷத்திற்கு முன்பு
எழுதியவைகளை எழுதும்படி சொல்லியதாக ஞாபகம். இப்போது
செய்பவைகளை அவ்வப்போது போடுகிறேன்.
அந்தவகையில் நெல்லிக்காய்ப் பச்சடி.
வேண்டியவைகள்.
நெல்லிக்காய்—2
பச்சைமிளகாய்—1
இஞ்சி—சிறிது
புளிப்பில்லாத தயிர்—ஒரு கப்பிற்கு அதிகம
தேங்காய்த் துருவல்—3டீஸ்பூன்
சீரகம்–கால்டீஸ்பூன்
தாளித்துக்கொட்ட—சிறிது எண்ணெயும் கடுகும்.
ருசிக்கு—உப்பு
செய்முறை–
நெல்லிக்காயை கொட்டை நீக்கி வதக்கியோ, வேகவைத்தோ அதனுடன்
மிளகாய், சீரகம், தேங்காய்,இஞ்சியைச் சேர்த்து நன்றாக அறைத்து
உப்பு சேர்த்துத் தயிரில் கலந்து கடுகைத் தாளிக்கவும்.
கொத்தமல்லி, நறுக்கிய தக்காளியால் அலங்கரிக்கலாம்..
பச்சடி தயார்.
காய்ந்த நெல்லிக்காயானாலும், 4, 5, துண்டுகளை ஊறவைத்து
அறைத்துக் கலக்கலாம்.
துவாதசி சமையலின் ஒரு முக்கிய ஐட்டம் இது.
மற்றவைகளையும் ஒவ்வொன்றாக எழுதுகிறேன். வைட்டமின் ஸி நெல்லிக்காயில் அதிகம்.