Archive for ஒக்ரோபர் 9, 2009
கடலைமாவின் ரிப்பன் பகோடா

கடலைமாவின் ரிப்பன் பகோடா
வேண்டியவைகள்
—–1கப் அரிசிமாவு.
கடலைமாவு——2கப்,——பெருங்காயப் பொடிகால் டீஸ்பூன்
4 டீஸ்பூன் வெண்ணெய்,———ஒனறரை டீஸ்பூன் மிளகாய்ப் பொடி
ருசிக்கு உப்பு,—–பொரிக்க எண்ணெய்,——-எள், அல்லது கசகசா 1 ஸபூன்
செய் முறை.—-இரண்டு மாவுகளையும் காரம், காயம், வெண்ணெய், கசகசா சேர்த்து, நன்றாகக் கலந்து 2பங்காகப் பிரித்துக் கொள்ளவும்.
ஒரு பங்கு மாவை வேண்டிய உப்பு ஜலம் சேர்த்து மென்மையாகவும் நனறாகவும், பிசைந்து கொள்ளவும். சிறிது தேங்காய்ப் பால் சேர்த்தும் பிசையலாம். மீதி மாவையும் இப்படியே உபயோகிக்கவும்.
ரிப்பன் அச்சு போடப்பட்ட குழலில் உள்ளே எண்ணெயைத் தடவி பிசைந்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு, வாணலியில்காயும் எண்ணெயில் ரிப்பனைப் பிழிந்து ,திருப்பிப் போட்டும் வேகவைத்து ,கரகரப்பான பதத்தில் எடுத்து வடிய வைத்து உபயோகிக்கவும்.
மாவைக கொ்ஞ்சமாகப் பிசைவது சிவக்காமலிருக்க உதவும்.