Archive for ஒக்ரோபர் 29, 2009
பூந்திப் பச்சடி

பூந்திப்பச்சடி
வேண்டியவை
——-இரண்டுகப் தயிரைக் கால்கப் தண்ணீர் சேர்த்து கடைந்து கொள்ளவும்,-தவிரவும்
முக்கால்கப் பூந்தி, ருசிக்கு வேண்டியஉப்பு, மிளகாய்ப்பொடி .அறிந்த பச்சைக் கொத்தமல்லி.
செயமுறை மிகவும் சுலபமானது. கடைந்த தயிரில் யாவற்றையும் கலந்து பறிமாறவும். பூந்தி நீரை இழுக்கும் ஆதலால் சிறிது நீர் கலக்கிரோம் பரிமாறும் சற்று நேரமுன்பு பூந்தியைத் தயிரில் சேர்க்கவும்.
தக்காளித் தயிர்ப் பச்சடி
வேண்டியவை—புளிப்பில்லாத தயிர் ஒருகப்
சிறிய தக்காளிப் பழம் 2,—-திட்டமான வெங்காயம் ஒன்று
பச்சை மிளகாய் இரண்டு,—–சிறு துண்டு இஞ்சி இவைகளைத் தனித்தனியே மேல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
தாளிக்க தலா அரை டீஸ்பூன்கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு.
ருசிக்கு உப்பு,—— எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை— வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி தாளிக்கக் கொடுத்தவைகளைத் தாளித்து வெங்காயம், மிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் தக்காளியையும் சேர்த்து வதக்கி இறக்கி ஆற விடவும்.
தயிரில் உப்புடன் ஆறிய கலவையைச் சேர்த்து அறிந்த பச்சைக் கொத்தமல்லி தூவி உபயோகிக்கவும்.
வதக்காமலே தாளிப்பு மாத்திரம் செய்து தக்காளி வெங்காயத்தைப் பச்சையாகவே தயிரில் சேர்த்தும் செய்யலாம்.