Archive for பிப்ரவரி 16, 2010
மிக்ஸ் டால்
இந்த டாலை எல்லாவித பருப்புகளைக் கலந்து செய்யலாம்.
அதாவது கதம்பப் பருப்புதான் இது.
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு,பாசிப்பருப்பு,
கருப்பு உளுத்தம் பருப்பு ஆக எல்லா வகைகளிலும்
சமமாகக் கலந்து ஒருகப் பருப்பு எடுத்துக் கொள்க-
மற்றும் வேண்டியவை.
பழுத்த தக்காளிப் பழம் —-மூன்று
பச்சை மிளகாய்—–மூன்று
சின்ன வெங்காயம்——உறித்தது ஒருகப்
பூண்டு——5 அல்லது6 இதழ்கள்
இஞ்சி– அரை அங்குலத் துண்டு
லவங்கம்——6
எண்ணெய், நெய்,— 5 அல்லது 6 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு,——சிறிது மஞ்சள்ப் பொடி
வாஸனைக்கு —-பச்சைக் கொத்தமல்லி
செய்முறை——பருப்பைக் களைந்து அரைமணி நேரம்
முன்பே தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகாயைப் பொடியாக
நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளியைத் தனியே நறுக்கிக கொள்ளவும்.
ப்ரஷர் பேனிலோ, அல்லது குக்கரிலோ நெய் கலந்த
எண்ணெயைச் சூடாக்கி லவங்கத்தைப் பொரித்து
தக்காளி நீங்கலாக வெங்காய வகைகளைப் போட்டு
வதக்கவும். வதங்கிய பின் தக்காளி சேர்த்துவதக்கவும்.
யாவும் வதங்கிய பின் ஊற வைத்த பருப்பு, மஞ்சள்,
உப்பு வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில்
வேக வைக்கவும்.
அவரவர்கள் குக்கரில் பருப்பு வேக எத்தனை விஸில்
என உங்களுக்குத் தெரியும். அப்படி வேக விடவும்.
ப்ரஷர் போன பின், கரண்டியால் மசித்து நறுக்கிய
கொத்தமல்லி தூவி உபயோகிக்கவும். அதிகம்
காரத்திற்கு வெறும் மிளகாய்ப் பொடியும் போடலாம்.
மிகவும் கெட்டியாக இல்லாமல் வேண்டிய அளவிற்கு
சிறிது வென்நீர் அவசியமானால் கலந்து கொள்ளவும்.
ரொட்டி, சாதம் மற்றும் விருப்பப் பட்டவைகளுடன்
சேர்த்து உபயோகிக்கவும்.
