Archive for பிப்ரவரி, 2010
புஷ்ப ரஸம்.
வேறொன்றுமில்லை.—-வேப்பம்பூ ரஸம்தான் இது.
வேண்டியவை—-காய்ந்த வேப்பம் பூ.—இது கடைகளில் கிடைக்கின்றது 2டீஸ்பூன்.
மிளகாய் வற்றல்—-இரண்டு
துவரம் பருப்பு—–இரண்டு டீஸ்பூன்
புளி சிறிது, தக்காளிப்பழம் இரண்டு
தாளிக்க நெய் 3டீஸ்பூன்
கடுகு, சீரகம்,ஒரு டீஸ்பூன்
பெருங்காயம் வாஸனைக்கு கறிவேப்பிலை
செய்முறை—-தக்காளியை சிறிது வேகவைத்து புளியையும்
சேர்த்து ஊறவைத்து , இரண்டு கப்பிற்கு அதிகமாகவே ஜலம்
சேர்த்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பையும் சற்று ஊற வைத்துக் கொள்ளவும்.
புளிக் கரைசலுடன, உப்பு பெருங்காயம், ஊற வைத்த
பருப்பைச் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைக்கவும்.
புளி வாஸனை போகக் கொதித்தபின் இரண்டுகப்
ஜலம் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
சிறிய வாணலியில் நெய்யைக் காயவைத்து மிளகாயைத்
துண்டு செய்து போட்டு வறுத்துக் கொண்டு கடுகு
சீரகத்தையும் போட்டு வேப்பம் பூவையும் சேர்த்து
கருகாமல் வருத்து ரஸத்தில்.சேர்க்கவும் ஒரு
துளி வெல்லமும் போடலாம். கறி வேப்பிலை சேர்த்து
சுடச்சுட சாப்பிட பிடித்தவர்களுக்கு நன்றாகவே
இருக்கும். பித்தத்திற்கு நல்லது .சாப்பிடும் போது
மேலாக தாளிதத்தை எடுத்து விடலாம்.ஜலம்
கூட்டிக் குறைக்கவும். வேப்பம்பூவைப் போட்ட
பிறகு கொதிக்க வைத்தால் ரஸம் அதிகம் கசந்து
விடும். தயார் செய். உடனே சாப்பிடு.கொள்கைதான்
சரிவரும்.
புளிப்பு சற்று அதிகம் போடவும்.
பொரித்த ரஸம்.
வேண்டியவை.——அரைகப்—–துவரம் பருப்பு.
ஒரு டீஸ்பூன்——-மிளகு
ஒரு டீஸ்பூன்——-சீரகம்.
இரண்டு டீஸபூன்—நெய்
ருசிக்கு உப்பு
பெருங்காயம்-சிறிது
கடுகு—சிறிது
வற்றல் மிளகாய்–ஒன்று
வாஸனைக்கு —பச்சைக் கொத்தமல்லி சிறிது
வேண்டுமானால்—–பூண்டு 5 அல்லது6 இதழ்கள்
செய்முறை——-பருப்பைக் களைந்து மஞ்சள் பொடி ,தண்ணீர்
சேர்த்து குக்கரில் நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
மிளகு சீரகத்தைப் பொடித்து ஒரு ஸ்பூன் நெய்யில்
பொரித்து, ஒன்றரைக்கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க
விடவும். பூண்டு வேண்டுமானால் அதையும் வதக்கி
சேர்க்கவும். சற்று கொதித்தபின் வெந்த பருப்பை,
3கப் அளவிற்கு ஜலம் சேர்த்து நன்றாகக் கரைத்து,
உப்பு சேர்த்துக் கொட்டி ஒரு கொதி பொங்க விடவும்.
மீதி நெய்யில் கடுகு, மிளகாய், பெருங்காயத்தைத்
தாளித்துக் கொட்டவும். கொத்தமல்லி சேர்க்கவும்.
இது பத்தியமான ரஸம்.
எலுமிச்சைச் சாற்றையும் வதக்கிய தக்காளிப்
பழத்தையும் சேர்த்தும் சாப்பிடலாம். ருசிக்கு ஏற்ப
யாவற்றையும் கூட்டிக் குறைத்துக் கொள்ளுங்கள்.
இது எனது மாமூலான வார்த்தை.
