Archive for ஒக்ரோபர், 2009
வேர்க்கடலைச் சட்னி
வேண்டியவை—–ஒருகப் வேர்க்கடலை, வெறும் வாணலியில் வறுத்துத் தோல் நீக்கிக கொள்ளவும். மற்றும்
தனியா விதை ஒரு டீஸ்பூன்,—-ஒரு சிறிய துண்டு இஞ்சி
வற்றல் மிளகாய் 3,—தேங்காய்த் துருவல் அரைகப்,
புளி, சின்ன எலுமிச்சை அளவு,–ருசிக்கு உப்பு
புதினா அல்லது கறிவேப்பிலை இலைகள் அரைகப்.
எண்ணெய் நான்கு டீஸ்பூன், தாளிக்க தலா கடுகு, உளுத்தம் பருப்பு, அரை டீஸ்பூன்.
புளிக்கு பதில் வேண்டிய அளவு தக்காளிப்பழமும் வதக்கி உபயோகிக்கலாம்.
செய்முறை—-புளியை ஊற வைத்து கெட்டியாகசாறை எடுத்துக் கொள்ளவும்.
தனியா, மிளகாய்,இஞ்சியை எண்ணெயில் வறுத்துக் கொண்டு
புதினாவையும் சேர்த்து இறக்கவும். வறுத்து தோல் நீக்கிய
வேர்க்கடலையுடன் புளி நீர், தேங்காய், வறுத்த சாமான்கள், உப்பு சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்தெடுத்து எண்ணெயில் தாளித்துக் கொட்டவும். அரை டீஸ்பூன் வெல்லமும் சேர்க்கலாம்.
வேண்டிய சுவைக்கேற்ப வெங்காயம், பூண்டு, என பிடித்த ருசிக்கேற்றவாறு சாமான்களை மாற்றிப் போட்டு ஜமாய்க்கலாம். புளிப்பு காரமும், எப்படி வேண்டுமோ அப்படி மாற்றலாம்.
வெண்டைக் காய் பச்சடி
வேண்டியவை—ஒருகப் தயிர். வெண்டைக்காய் இளசாக 8
ஒருஸ்பூன் தேங்காய்த் துருவல் , மிளகாய் 1, இஞ்சி சிறிது
தாளிக்க -கடுகு கால்ஸபூன், பெருங்காயம் துளி, இரண்டுடீஸ்பூன் எண்ணெய், ருசிக்கு உப்பு
அறிந்த பச்சைக் கொத்தமல்லி. தக்காளி சிறிது.
செய்முறை—–வெண்டைக்காய்களை அலம்பித் துடைத்து மெல்லிய வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி மிளகாய், தேங்காயை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு பெருங்காயத்தை தாளித்து வெண்டைக்காய்த் துண்டங்களைப் போட்டு நிதானமான தீயில் வதக்கவும்.
சுருள வதக்கிய காயில் உப்பு சேர்த்து ஆற வைக்கவும்.
தயிரில் யாவற்றையும் சேர்த்துக் கலக்கி, கொத்தமல்லி தக்காளியால் அலங்கரித்துப் பறிமாரவும்.
பூந்திப் பச்சடி

பூந்திப்பச்சடி
வேண்டியவை
——-இரண்டுகப் தயிரைக் கால்கப் தண்ணீர் சேர்த்து கடைந்து கொள்ளவும்,-தவிரவும்
முக்கால்கப் பூந்தி, ருசிக்கு வேண்டியஉப்பு, மிளகாய்ப்பொடி .அறிந்த பச்சைக் கொத்தமல்லி.
செயமுறை மிகவும் சுலபமானது. கடைந்த தயிரில் யாவற்றையும் கலந்து பறிமாறவும். பூந்தி நீரை இழுக்கும் ஆதலால் சிறிது நீர் கலக்கிரோம் பரிமாறும் சற்று நேரமுன்பு பூந்தியைத் தயிரில் சேர்க்கவும்.
தக்காளித் தயிர்ப் பச்சடி
வேண்டியவை—புளிப்பில்லாத தயிர் ஒருகப்
சிறிய தக்காளிப் பழம் 2,—-திட்டமான வெங்காயம் ஒன்று
பச்சை மிளகாய் இரண்டு,—–சிறு துண்டு இஞ்சி இவைகளைத் தனித்தனியே மேல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
தாளிக்க தலா அரை டீஸ்பூன்கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு.
ருசிக்கு உப்பு,—— எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை— வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி தாளிக்கக் கொடுத்தவைகளைத் தாளித்து வெங்காயம், மிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் தக்காளியையும் சேர்த்து வதக்கி இறக்கி ஆற விடவும்.
தயிரில் உப்புடன் ஆறிய கலவையைச் சேர்த்து அறிந்த பச்சைக் கொத்தமல்லி தூவி உபயோகிக்கவும்.
வதக்காமலே தாளிப்பு மாத்திரம் செய்து தக்காளி வெங்காயத்தைப் பச்சையாகவே தயிரில் சேர்த்தும் செய்யலாம்.
காய்கறி புலவு.VEGETABLE PULAVU
வேண்டியவை—-பாஸ்மதி அரிசி–2கப்
வேண்டிய காய்கறிகள—–தோல்நீக்கி நறுக்கிய உருளைக் கிழங்கு ஒருகப்,——–காரட் ஒருகப். வெங்காயம் ஒருகப் காலிபிளவர் ஒரு கப், பச்சைமிளகாய்மூன்று.
பொடிக்க——-லவங்கம்8—மிளகுஒரு டீஸ்பூன்,-பட்டை1அங்குல அளவு, ஏலக்காய்1. இவைகளை ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
தாளிக்க—–ஜீரகம் ஒரு டீஸ்பூன்,—-பிரிஞ்சி இலை ஒன்று,
இஞ்சி, பூண்டு விழுது தலா ஒரு டீஸ்பூன்,மஞ்சள்பொடி அரை டீஸ்பூன். எண்ணெய்2டேபிள் ஸ்பூன், நெய்3டேபிள் ஸ்பூன்.
ருசிக்கு வேண்டிய உப்பு.
செய்முறை——-அரிசியைக் களைந்து வடிக்கட்டி நிதானமான தீயில் , வாணலியில் இரண்டு ஸபூன் நெய்யை விட்டு ஈரம் போக அரிசியை வறுத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய்யும், நெய்யுமாக விட்டு, ஜீரகத்தைத் தாளித்து, வெங்காயம் மிளகாய் ,இஞ்சி,பூண்டுசேர்த்து வதக்கவும். வதங்கியவுடன், காய்கறிகளையும் சேர்த்து லேசாக வதக்கி மஸாலாபொடி மஞ்சள் உப்பு, பிரிஞ்சிஇலை, வருத்த அரிசி, மூன்றரை கப் தண்ணீர் சேர்த்து நிதானமான தீயில் வெயிட் போட்டு ஒரு விஸில் வரும் வரை வைத்து எடுக்கவும்.
அவரவர்கள் குக்கரில் அரிசி வேக எவ்வளவு விஸில் என கணக்குத் தெரியும். அதன் பிரகாரம் செய்யவும். தக்காளிப் பச்சடியுடன் பறிமாறலாம் வெங்காயம் ஸாம்பார் வெங்காயமாகச் சேர்த்தால், புலவு ருசியாக இருக்கும்.
பூந்தி boondhi
வேண்டியவை—–ஒருகப் கடலைமாவு
கால்கப் அரிசிமாவு, கேஸரி கலர் ஒருதுளி
ருசிக்கு உப்பு, கால் டீஸ்பூனிலும் பாதியளவு சமையல் ஸோடா இவைகளை ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
பொரிப்பதற்கு வேண்டிய எண்ணெய்.
செய்முறை——–மாவுக் கலவையை சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான தோசைமாவு போல கரைத்துக் கொள்ளவும்.
குழிவான வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, பூந்தி தேய்க்கும் கரண்டியில் [உபகரணத்தில்] முக்கால் கரண்டி மாவை விட்டு, எண்ணெயினின்றும் தூக்கலாக கரண்டியைப் பிடித்துக்கொண்டு, குழிக்கரண்டியின் அடிப் பாகத்தினால் மாவைத் தேய்க்கவும்.
பூந்திகள் எண்ணெயில் விழுந்து பொரியும். கிளறி விட்டு சல்லிக் கரண்டியினால் பூந்தியை எடுத்து வடிக்கட்டியில் போட்டு எண்ணெய் நீக்கவும். இப்படியே மிகுதி மாவையும் பூந்திகளாகத் தயாரிக்கவும்.
கரகர என்ற பதத்தில் வேகவிட்டு எடுக்கவும்.
வறுத்த முந்திரி, வேர்க்கடலை முதலானவற்றுடன், உப்பு ,காரம், காயம் பொடிகள் சேர்த்து பூந்தியைக் கலந்து கொடுக்கலாம்.
தயிர்ப் பச்சடி செய்யவும் பூந்தியை உபயோகிக்கலாம். மிக்சர் செய்யவும் உபயோகமாகும்.
லட்டு செய்ய தனி கடலைமாவில் பூந்தி செய்ய வேண்டும். அதைப் பிறகு எழுதுகிரேன்.
வாழ்த்துகள்
அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள் சொல்லுகிறேன் காமாட்சி
அரிசி மாவு புட்டு-rice puttu
புட்டு செய்வதற்கு அரிசியை ஊறவைத்து களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்த மாவில்தான் செய்ய வேண்டும். அதிக அளவு மாவு செய்து வறுத்து வைத்துக் கொண்டால் பட்சணங்கள் செய்ய சவுகரியமாக இருக்கும். சாதாரணமாக பட்சணங்களுக்கு வெறும் வாணலியில் அரைத்த மாவைக் கோலம்போட இழை வரும் அளவிற்கு வறுத்தால் போதும்.
புட்டு செய்ய மாவைச் சற்று சிவக்க வறுக்க வேண்டும்.
வேண்டிய சாமான்கள்—-ஒரு கப் வறுத்து பின் சலித்த அரிசி மாவு . ஒருகப-,வெல்லத்தூள்,——-ஒரு துளி உப்பு, கால்டீஸ்பூன்மஞ்சள்பொடி.
ஏலக்காய் 6,—முந்திரிப் பருப்பு 8,—–நெய் 2டேபிள் ஸ்பூன்.
தேங்காய்த் துருவல் 3டேபிள் ஸ்பூன்
செய்முறை—–மாவுடன் உப்பு, மஞ்சள்பொடி கலக்கவும். சூடான தண்ணீரை சிறிது சிறிதாகத் தெளித்துப் பிசிரவும் மாவு உதிர் உதிராகவே இருக்க வேண்டும். மாவைச் சேர்த்துக் கையில் பிடித்தால் பிடிக்கவும் விட்டால் உதிரும்படியாகவும் இருக்கும் பதத்தில் இருக்க, ஜலத்தை(4அல்லது5 டீஸ்பூன்) கொஞ்சம் கொஞ்சமாக தெளித்து பிசிறவும்.
பிசிறிய மாவை சற்று பெரிய கண் உள்ள சல்லடையில் சலித்து கட்டிகளை நீக்கி சரியாக உதிர்த்து அரைமணி நேரம் ஊற விடவும்.
பிழிந்தெடுத்த ஒரு ஈரத் துணியில் பரவலாக மாவைக்கொட்டி , கட்டிவைத்து, இட்டிலி வேகவைப்பது போல குக்கரில், நீராவியில்தட்டின் மேல்வைத்து 12 நிமிஷங்கள் ஸ்டீம் செய்யவும்.
ஸ்டீம் அடங்கினவுடன் தாம்பாளத்தில் கொட்டி உதிர்த்து ஆற விடவும்.
முந்திரியை வறுத்து பொடித்துக் கொள்ளவும் ஏலக்காயையும் பொடித்து வெந்த மாவுடன் சேர்க்கவும்.தேங்காயையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
பாத்திரத்தில் சிறிது ஜலம் சேர்த்து வெல்லத்தை அடுப்பில் வைத்து
பாகாகக் காய்ச்சவும். பாகு கெட்டியாக ஆரம்பிக்கும் சமயம் பாகை,உதிர்த்தமாவில் கொட்டி நெய் சேர்த்து நன்றாகக் கலக்கவும். புட்டு தயார். முக்கால்பாகம் வெந்த பருப்பைக்கூட நன்றாகப் பிழிந்து அரை கரண்டி்யளவிற்கு புட்டில் சேர்ப்பதுண்டு.
ரவை லட்டு. ravai laddu
வேண்டியவை——ரவை ஒருகப், சர்க்கரை ஒன்றேகால் கப்
ஏலக்காய் 6, முந்திரி பாதாம்பருப்புகள்8, நல்ல நெய்கால்கப்பிற்கும் சிறிது அதிகம்.
செய்முறை——ரவையை வெறும் வாணலியில் இட்டு சிவக்க, பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
ஆறினவுடன் மிக்ஸியில் போட்டு மெல்லிய மாவாக அரைத்துக் கொள்ளவும்.
சர்க்கரையையும் தனியாக ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் அறைத்துக் கொள்ளவும்.
முந்திரி பாதாமையும் வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொள்ளவும்.
பொடித்த எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொள்ளவும்.
ஒரு தாம்பாளத்தில் அரைகப் ரவைகலவையைப் போட்டு சின்ன வாணலியில் நான்கு ஸ்பூன் நெய்யை நன்றாகக் காய்ச்சி மாவின் மேல் கொட்டி ஒரு ஸ்பூனால் கலக்கவும். நெய்சூட்டில் சர்க்கரை சற்று இளகி உருண்டை பிடிக்க வரும். சற்று சூட்டுடனே உள்ளங்கையில் மாவை வைத்து விரல்களால் அழுத்தி சிறிய லட்டுகளாகப் பிடிக்கவும்.
இதே முறையில் மிகுதிக் கலவையையும் சூடான நெய் விட்டு லட்டுகளாகப் பிடிக்கவும். வாயில் போட்டால் லட்டுகள் கரையும்.
கார முருக்கு.—kara murukku.
வேண்டியவை—–—-அரிசிமாவு ஒருகப் ,இரண்டரைகப்கடலைமாவு
மிளகாய்ப் பொடி ஒரு டேபிள் ஸ்பூன்,
பெருங்காயப் பொடி அரைடீஸ்பூன்,—சீரகம் ஒரு டீஸ்பூன்.
வெண்ணெய் இரண்டு டீஸ்பூன்,—-எள் இரண்டு டீஸ்பூன்
பொரிக்க எண்ணெய்,——–ருசிக்கு உப்பு
செய்முறை—– எண்ணெய், உப்பு, நீங்கலாக எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து இரண்டு பாகமாகப் பிரித்துக் கொள்ளவும்,
வேண்டிய உப்பு ஜலம் சேர்த்து ஒரு பங்கு மாவை நன்றாகவும், மென்மையாகவும் பிசையவும்,
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, முருக்கு அச்சு போட்ட ,குழலில்,உள்ளே எண்ணெயைத் தடவி கொள்ளளவுக்கு, மாவைப் போட்டு முருக்குகளாகப் பிழிந்து, கரகரப்பான பதத்தில் வேகவைத்து எடுக்கவும்,
மிகுதி மாவையும், இதே மாதிரி பிசைந்து முருக்குகளாகச் செய்யவும்.
உப்பு காரம் அவரவர் ருசிக்கு கூட்டி குறைக்கவும்.