Archive for மார்ச் 7, 2010
கத்தரிக்காய் ரஸவாங்கி.
வேண்டியவைகள்
சிறிய வகை கத்தரிக்காய்——-கால் கிலோ
துவரம் பருப்பு—முக்கால் கப்
காராமணி——–அரைகப
வறுத்து அறைக்க சாமான்கள்—
மிளகாய்— 3 . ——தனியா 2 டீஸ்பூன்
கசகசா——2 டீஸ்பூன், வெள்ளை எள் -2 டீஸ்பூன்
மிளகு—கால் டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—–அரைகப்
எண்ணெய்—5 —-6 டீஸ்பூன்
மஞ்சள், பெருங்காயப்பொடி—-சிறிது
புளி——-சிறிய எலுமிச்சை அளவு
தக்காளிப் பழம்—–இரண்டு
வாஸனைக்கு—–கொத்தமல்லி, கறிவேப்பிலை
செய்முறை—–காராமணியை சற்று வறுத்துக் கொண்டு துவரம்-
-பருப்புடன் சேர்த்து தண்ணீர் விட்டு குக்கரில் நன்றாக
வேக வைத்துக் கொள்ளவும்.
புளியை ஊற வைத்துக் கரைத்து இரண்டரை கப்பளவிறகு
சாறு எடுத்துக் கொள்ளவும்.
கத்தரிக் காய்களை சற்று பெரிய துண்டங்களாக நறுக்கி
அலம்பி தண்ணீரில் வைக்கவும்.
சிறிது எண்ணெயில் வறுக்கக் கொடுத்திருப்பவைகளை
வறுத்து ,கடைசியில் தேங்காயைச் சேர்க்கவும். ஆறின
பிறகு மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்
கொள்ளவும்.
நறுக்கிய தக்காளி, கத்தரித் துண்டங்களை சிறிது எண்ணெயில்
வதக்கி, புளித் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.
உப்பு, ம்ஞ்சள், பெருங்காயம் சேர்க்கவும். காய்கள் வெந்து
புளி வாஸனை போனபின் அரைத்த விழுதைக் கலந்து
ஒரு கொதி விட்டு வெந்த பருப்பைச் சேர்த்து நன்றாகக்
கொதிக்க வைத்து இறக்கவும்.
தக்காளி போடுவதால் புளியைக் குறைத்துக் கொள்ளலாம்.
வெங்காயம் வேண்டுமானால் சின்ன வெங்காயம்
வதக்கிச் சேர்க்கலாம். கரம் மஸாலாவும் அப்படியே.
கடைசியில் கடுகு தாளித்து கொத்தமல்லி கறி வேப்பிலை
சேர்க்கவும். வழக்கம்போல உப்பு காரம் உங்கள் கையில்.
மோர்க்களி.
வேண்டியவைகள்.
மிதமான புளிப்பு மோர்—இரண்டரைகப்
மெல்லியதாகச் சலித்த அரிசி மாவு—ஒரு கப்
எண்ணெய்——இரண்டு டேபிள் ஸ்பூன்
கடுகு—அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு–ஒரு டீஸ்பூன்
மோர் மிளகாய்——மூன்று
ருசிக்கு உப்பு
வாஸனைக்கு–துளி பெருங்காயம்
சிறிது கறிவேப்பிலை.
செய்முறை——-மாவை உப்பு சேர்த்து மோரை விட்டு கரைத்துக்
கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெயைக் காய வைத்து
மிளகாயை நன்றாக கிள்ளிப்போட்டு வறுத்துக் கொண்டு
கடுகு, பெருங்காயம்,உளுத்தம்பருப்பைச் சேர்த்துத் தாளித்து
கறி வேப்பிலையுடன் கரைத்து வைத்திருக்கும் மாவுக்-
-கலவையைச் சேர்த்துக் கிளறவும். தீயை நிதானமாக
வைத்து அடிக்கடி கிளறவும். மாவு வெந்து சுருண்டு
வரும் போது சற்று மூடி வைத்துப் பிறகு இறக்கவும்.
ஈரக் கையினால் மாவைத் தொட்டால் வெந்த மாவு
கையில் ஒட்டாது. உப்பு, புளிப்பு, காரத்துடன் களிப்பதத்தில்
சாப்பிட ருசியாக இருக்கும்.
சோளமாவு, கேழ்வரகு மாவு, கம்பு மாவிலும் இதே மாதிரி
தயாரிக்கலாம். அவசரத்திற்கு, நினைத்தால் உடனே தயாரிக்க
முடியும். தாளிப்பில் வேர்க்கடலை, முந்திரி பருப்பும் போடலாம்.