Archive for மார்ச் 14, 2010
பயத்தந் தோசை.
வேண்டியவைகள்
பச்சைப் பயறு—–ஒருகப்
அரிசி—கால்கப்
வெங்காயம் —–1 நறுக்கிக் கொள்ளவும்.
பச்சை மிளகாய்–சிறியதாக 2
வேக வைத்து தோ்ல் உரித்த உருளைக் கிழங்கு—-1
சீரகம்—அரை டீஸ்பூன்
நறுக்கிய பச்சைக் கொத்தமல்லி சிறிது
ருசிக்கு—உப்பு
தோசை செய்ய —-எண்ணெய் வேண்டிய அளவு.
செய்முறை—–அரிசி ,பயறு இரண்டையும் நன்றாகக் களைந்து
6 மணி நேரத்திற்குக் குறையாமல் தண்ணீரில் ஊறவைக்கவும்.
எண்ணெய் நீங்கலாக மற்றவைகளையும் சேர்த்து ஊற
வைத்திருப்பதை மிக்ஸியிலிட்டு அதிக த் தண்ணீர் விடாமல்
அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவைத் திட்டமாக ஜலம் விட்டு கரைத்துக்
கொள்ளவும்.
நான் ஸ்டிக் தோசைக்கல், அல்லது கனமான தோசைக்
கல்லிலோ பதமான சூட்டில் எண்ணெய் தடவி மெல்லிய
தோசைகளாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டுத்
திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
பிடித்தமான சட்னிகளுடன் சுடச்சுட சாப்பிட ருசியாக
இருக்கும்.