Archive for மார்ச் 13, 2010
உருளைக் கிழங்கு அவல்.
வேண்டியவைகள்——–மெல்லிய அவல்—-2கப்
சிறிய அளவில் நறுக்கி, அலம்பிய உருளைக் கிழங்கு—அரை கப்
பச்சை மிளகாய் 2 —நறுக்கிக் கொள்ளவும்.
திட்டமான வெங்காயம் 1—பொடியாக நறுக்கவும்.
ஒரு துண்டு இஞ்சி—நறுக்கியது
பச்சைப் பட்டாணி—-2 டேபிள் ஸ்பூன்
பச்சைக் கொத்தமல்லி நறுக்கியது—-கால் கப்
காரா பூந்தி அல்லது ஓமப்பொடி —ரெடி மேடாக 4 டேபிள் ஸ்பூன்
தாளித்துக் கொட்ட—–எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
தாளிக்க –கடுகுசிறிது, உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன், சோம்பு அரைடீஸ்பூன்.
ருசிக்கு—-உப்பு . துளி மஞ்சள் பொடி, எலுமிச்சைத் துண்டுகள்.
செய்முறை——அவலைக் காய்கறி வடிக்கட்டியில் போட்டு
மேலாகத் தண்ணீரை விட்டுக் கலந்து வடிக்கட்டிக் கொள்ளவும்.
உப்பு, மஞ்சள்பொடி கலந்து சிறிது ஊறவைக்கவும்.
அடி கனமான வாணலியில் எண்ணெயைக்காயவைத்து
கடுகு முதலானவைகளைத் தாளித்து, வெங்காயத்தை
வதக்கவும். இஞ்சி பச்சைமிளகாய், கிழங்குத் துண்டுகள்
சேர்த்து நிதான தீயில் வதக்கி ஒரு துளி உப்பு சேர்க்கவும்.
கிழங்கு வதங்கிய பின் ஊறிய அவலைச் சேர்த்து லேசாகக்
கிளறி நன்றாகச் சூடு ஏறிய பின் இறக்கி வைத்து சிறிது நேரம்
மூடி வைக்கவும்.
சுடச்சுட, ப்ளேட்டில் அவல்க் கலவையைப் போட்டுப்
பரத்தி மேலாக ஓமப்பொடியைப் போட்டு,
கொத்தமல்லியைத் தூவி ஒரு எலுமிச்சைத் துண்டுடன்
கொடுக்கவும். இது என்னுடைய போபால் மருமகளின்
ஆலு போஹா. தயாரிப்பதும் எளிது.
ருசியும் நன்றாக இருக்கும்.