Archive for மார்ச் 25, 2010
மசித்த உருளைக் கிழங்கு.
இதென்ன பிரமாதமான சமையல் குறிப்பா? என்றுதான் தோன்றும்.
அப்படியே மசித்து நாம் உபயோகிக்கிரோமா? எனக்குத் தோன்றியது.
எழுதலாம் என்று. அவ்வளவுதான்
வேண்டியவைகள்.
4 ,அல்லது 5 உருளைக் கிழங்குகள்
மிளகுப்பொடி—–அரை டீஸ்பூன்
ருசிக்கு–உப்பு
வெண்ணெய்—2 அல்லது 3 டீஸ்பூன்
கால் டீஸ்பூன்—-மஞ்சள் பொடி.
செய்முறை——உருளைக்கிழங்கை நன்றாக வேகவைத்து எடுத்து
தோல் உறித்து சூடாக இருக்கும் போதே நன்றாக மசிக்கவும்.
இதற்குக் கூட கரண்டி இருக்கிரது.
மசித்த கிழங்கில் உப்பு, மஞ்சள் பொடி, மிளகுப்பொடி வெண்ணெய்
சேர்த்துப் பிசையவும். ஒரு ஸ்பூன் பால்கூட சேர்க்கலாம்.
இதுவும் ஒரு நல்ல ருசிதான். மாஷ் பொடேடோ.
வாழைக்காய்ப் பொடி.
வேண்டியவைகள்
முற்றிய வாழைக்காய்——2
கடலைப் பருப்பு—-2டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு—2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு—-2 டேபிள் ஸ்பூன்
தனியா–1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல்—-3
எண்ணெய்—1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி—-அரை டீஸ்பூன்
புளி—நெல்லிக்காயளவு
ருசிக்கு—–உப்பு
செய்முறை——-வாழைக்காயை லேசாக எண்ணெய் தடவி
தீயில் ,எல்லா பாகமும் படும்படி திருப்பிச்,சுடவும்
மைக்ரோ வேவில் வைத்தும் சுடலாம்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, பருப்புவகைகளையும்,
மிளகாயையும் சிவக்க வறுத்தெடுக்கவும்.
சுட்ட வாழைக் காயின் தோலை உறித்தெடுக்கவும்.
ஆறிய பருப்பு மிளகாயை மிக்ஸியிலிட்டு நறநற என்ற,
ரவை போன்ற பதத்தில் பொடிக்கவும்.புளியைப் பிரித்துப்போட்டு
ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்
பொடியை எடுத்துவிட்டு வாழைக்காயை
உதிர்த்து, உப்பு, பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் ஒருமுறை
சுழலவிட்டு அரைத்த பொடியையும் சேர்த்துக் கலந்து எடுக்கவும்.
வாழைக்காய்ப் பொடி தயார்.
சாதத்தில் கலந்தும், சாப்பிடலாம். மோர்க் குழம்பு, பச்சடி வகைகள்
இதற்குத் தகுந்த ஜோடியாகும்.
காரம் வகைகள் அவரவர்கள் ருசிக்குத் தக்கவாறு கூட்டிக்
குறைக்கலாம்.