Archive for மார்ச் 17, 2010
ராகி தோசை.
வேண்டியவை
அரைத்த கேழ்வரகு மாவு–2 கப்
உளுத்தம் பருப்பு——கால்கப்
வெந்தயம்—ஒரு டீஸ்பூன்
ருசிக்கு —உப்பு
தோசை செய்ய வேண்டிய எண்ணெய்
வேக வைத்து தோல் உறித்த—2 உருளைக் கிழங்கு
செய்முறை—-மாவை உப்பு சேர்த்துத் சற்றுத் தளரத் தண்ணீர் விட்டுப் பிசையவும்.
வெந்தயத்தையும், பருப்பையும் தண்ணீர் விட்டுக் களைந்து
3 மணிநேரம் ஊற வைத்து , மிக்ஸியில் அறைத்து, மாவுடன்
சேர்த்துக் கலக்கி வைக்கவும்.
5, 6 மணி நேரம் கழித்து வெந்த உருளைக் கிழங்கை
நன்றாக மசித்து மாவுடன் கலக்கி தோசைகளாக வார்த்துச்
சாப்பிடலாம். பிடித்தமான சட்னியோ கூட்டுகளோ இசைவாக
இருக்கும். அரிசி இல்லாத டிபன்.
வேண்டுமாயின் ஒரு கரண்டிமோர் மாவுடன் கலந்து
கொள்ளவும்.