Archive for மார்ச் 21, 2010
மாங்காய்த் தொக்கு.
வேண்டியவைகள்
.சற்று புளிப்பான மாங்காயைத் தோல் சீவித் துருவிய
மாங்காய்த் துருவல்—-4கப்
மிளகாய்ப் பொடி—-5 டீஸ்பூன்
வறுத்தரைத்த வெந்தயப் பொடி—1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி—1 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி—1 டீஸ்பூன்
நல்லெண்ணெய்—-7 டேபிள் ஸ்பூன்-
-வற்றல் மிளகாய் 2 —-கடுகு 1 டீஸ்பூன்
ருசிக்கு உப்பு
நான்ஸ்டிக் பேன் அல்லது அலுமினிய வாணலியில்எண்ணெயைக்
காய வைத்து கடுகு தாளித்து, மிளகாயை சிவக்க வறுத்துக்
கொண்டு மாங்காய்த் துருவலைச் சேர்த்து நிதான தீயில் வதக்கவும்.
உப்பு மஞ்சள் பொடி சேர்த்து சுருள வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து மாங்காய்சுருண்டு வரும் போது காரப்பொடி
வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்துக் கிளறி உடனே
இறக்கவும். ஆறியவுடன் பாட்டிலில் போட்டு வைத்து உபயோகிக்கவும்.
இதுவும் எல்லாவற்றிற்கும் உறு துணையாக இருக்கும்.
அதிகம் போலத் தோன்றினால் பிரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கவும்.
மாங்காயின் புளிப்பிற்கு தக்கவாறு உப்பு காரம் கூட்டிக் குறைக்கவும்.
மிளகாய்த் தொக்கு.
வேண்டியவைகள்
பச்சை மிளகாய்—–100 கிராம்
புளி—-ஒரு எலுமிச்சையளவு
எண்ணெய்—–3டேபிள் ஸ்பூன்
கடுகு—–1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு–2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி—முக்கால் டீஸ்பூன்
வெந்தயம்-1 டீஸ்பூன்
உப்பு—-தேவையான அளவு
வெல்லப் பொடி–1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி—1 டீஸ்பூன்
செய்முறை—–மிளகாயை அலம்பி காம்பு நீக்கிதுடைத்து
வைத்துக் கொள்ளவும்.
புளியைக் கொட்டை கோது இல்லாமல் உலர்த்திஎடுக்கவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி பச்சை மிளகாயைக்
கீறிப் போட்டு மிதமான சூட்டில் நன்றாக வதக்கவும்.
மூடியால் மூடித் திரந்து பதமாக வதக்கவும்.
ஆறிய பின் புளி,உப்பு,வெல்லம் சேர்த்து துளி கூட
தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அறைத்து எடுக்கவும்.
எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயத்தைச்
சிவக்க வறுத்துப் போட்டு மஞ்சள் பெருங்காயம் சேர்த்துக்
கலந்து காற்று புகாத பாட்டிலில் எடுத்து வைத்து,
உபயோகிக்கவும் .சாப்பாடு டிபன் வகைகளுடன் உற்ற
ஜோடியாக இருக்கும்.